Skip to main content

Posts

Showing posts from 2010
This free digital greeting generated with Smilebox

BOUND-அருமையான த்ரில்லர்

சில நாட்களுக்கு முன் HBO சானலில் இந்தப் படம் காட்டப்பட்டபோது அவ்வளவாக எதிர்பார்ப்பு ஏதும் இன்று அதை காண முற்பட்டேன். அவ்வளவாக தெரியாத நடிகர்கள், படத்தின் பெயரை இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை. ஆனால், இயக்குனர்(கள்) யார் என்று தெரிந்தவுடன் நான் உற்சாகமாகிவிட்டேன். Matrix என்ற பெயரில் மூன்று பாகங்கள் எடுத்து பெரும் பரபரப்பையும், நல்ல பெயரையும், ஏராளமான பணத்தையும் சம்பாதித்த 'Wachowski சகோதரர்கள்" இயக்கிய முதல் படம் இது. 1996 இல் வெளிவந்த இந்தப் படம் ஒரு neo-noir crime thriller என்று புகழப்படுகிறது. பிற்பாடு பல புதுமைகளை அரங்கேற்றிய Matrix series படங்களை  இயக்கிய இந்தத் திறமையான சகோதரர்கள் முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார்கள் என்றால் அது ஒன்றும் அதிசயமில்லை. 1996 ம் ஆண்டிலேயே lesbian உறவை மிகத் துணிச்சலாக காட்டியுள்ள இந்தப் படம் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல் செல்கிறது. ஐந்தாண்டு சிறையில் இருந்துவிட்டு வெளிவரும் கார்கி (Gina Gershon) அடுத்தது எங்கே கை வைக்கலாம் என்று நோட்டம் பார்க்க தன்னுடைய ப்ளம்பர் மற்றும் பெயிண்டர் திறமைகளை வைத்துக்கொண்டு ஒரு பண

உருளைக்கிழங்கு - ஒரு உன்னத உணவு

சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப்பொருள் உருளைக்கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது. மேலும் பல்வேறு வழிகளில் சமைத்து உண்ணத்தக்க வகையில் அமைந்துள்ளது இந்தக் கிழங்கு மட்டுமே! இதை அவித்தோ, சுட்டோ, வேகவைத்தோ, வறுத்தோ பயன்படுத்தினாலும் கிழங்கின் மருத்துவக் குணமும் மாறாமல் இருப்பது இக்கிழங்கின் சிறப்பம்சமாகும். 100 கிராம் உருளைக் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். இதில் ஈரப்பதம் 75%ம், புரதம் 2%ம், கொழுப்பு 0.1%ம், தாது உப்புகள் 0.61%ம், நார்ச்சத்து 0.41%ம் மீதி கார்போஹைடிரேட்டும் ஆகும். இவை தவிர வைட்டமின் சி 17 மில்லிகிராமமும், கால்சியம் 10 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 40 மில்லிகிராமும், வைட்டமின் ‘ஏ’யும் வைட்டமின் ‘பி’ முதலியவையும் உள்ளன. சோடா உப்பு, பொட்டாசியம் முதலியனவும் அதிக அளவில் உள்ளன. ஒரு மனிதன் தினமும் பாலும், உருளைக்கிழங்கும் மட்டும் சாப்பிட்டால் போதும். அவன் உடலக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துவிடும். அந்த அளவுக்கு கார்ப்போஹைடிரேட்டுகள் (மாவுப

மன்மதன் அம்பு - Bull's Eye

ஏற்றுக்கொள்ளும் வேடம் எதுவானாலும் அதை சிரமேற்கொண்டு சிறப்புடன் செய்யும் ஒரு மிகச் சிறந்த நடிகர் கமல் ஹாசன். அவருடைய இன்றைய வெளியீடான மன்மதன் அம்பு அவருடைய அர்பணிப்புக்கு ஒரு உதாரணம். நடிப்பு, பாடல், திரைக்கதை, வசனம் என்று ஏகப்பட்ட பொறுப்புகளை சுமந்தாலும் எல்லாவற்றையும் செவ்வனே செய்திருக்கிறார் நம் உலகநாயகன். கமல்-கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் எந்தப் படமும் தோற்றதில்லை. இந்தப் படமும் அதை நிரூபிக்கிறது. எந்த இடத்திலும் தொய்வு விழாமல் கொண்டு செல்லும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களை நிச்சயம் பாராட்டவேண்டும். கமலின் நடிப்பைப் பற்றி நாம் எதுவும் புதிதாகச் சொல்லத் தேவையில்லை. இந்தப் படத்தில் நடிப்பைப் பொறுத்தவரை கமல் மிகவும் மெனக்கெடவில்லை என்றே எனக்குப்படுகிறது.  தொழிலதிபர் மதனகோபாலாக வரும் மாதவன் அழகாக சிரிக்கிறார், அளவாக நடிக்கிறார். ரொம்பவும் அலட்டிக் கொள்ளாத இயல்பான நடிப்புக்கு ஒரு சபாஷ். அம்புஜாக்ஷியாக வரும் த்ரிஷா மிக அழகாக இருக்கவேண்டும் என்றே ஒரே நோக்கில் ஒரு ஷோகேஸ் பொம்மை மாதிரிதான் வருகிறார். இவர்களைத் தவிர ஏராளமான நடிகர்கள் இந்தப் படத்தில். யாருக்கும் இர

சச்சினின் மற்றுமொரு சாதனைச் சரித்திரம்!

   மாஸ்டர் ப்ளாஸ்டர் (Master Blaster) சச்சின் இன்று இன்னுமொரு மகத்தான சாதனை நிகழ்த்தியிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை யாருமே செய்யாத சாதனையை சச்சின் இன்று செய்திருக்கிறார். தென் ஆப்ரிக்காவில் சென்சூரியனில் நடைபெற்று வரும் முதல் test போட்டியில் தனது 50 வது சதத்தைப் பதிவு செய்துள்ளார். 1990 இல் இங்கிலாந்துக்கு எதிராக முதல் சதம் அடித்து தன் சாதனையை ஆரம்பித்து வைத்த சச்சின், இன்று 20 வருடம் கழித்து சென்சூரியனில் தனது 50 வது சாதனையைச் செய்துள்ளார். வாழ்க சச்சின்! 2G ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போட்டிகளின் நிகழ்ந்த அவமானம், காசு மட்டுமே சம்பாதிக்க நினைக்கும் நம் கேவலமான அரசியல்வாதிகள் ஆகிய பல்வேறு விஷயங்களால் தலை குனிந்திருக்கும் இந்தியர்கள் பெருமையுடன் தலை நிமிர இதோ ஒரு மகத்தான காரணம்.

நீரா ராடியா மேல் வழக்குத் தொடர கருணாநிதியால் முடியுமா?

2G ஸ்பெக்ட்ரம் விவகாரம் சந்தி சிரித்துக்கொண்டிருக்கும் வேளையில், அவலை நினைத்து உரலை இடித்த கதையாக இந்த விவகாரம் பற்றி துக்ளக் பத்திரிகையில் எழுதிய சோ மீது பாய்ந்திருக்கிறார் நம் முதல்வர். தயாநிதி மாறன் தயாளு அம்மையாருக்கு ரூ600 கோடி கொடுத்ததாக நீரா ராடியா பேசியிருக்கும் டேப் இப்போது உலகம் பூராவும் வலம் வருகிறது. இதைப் பற்றி வழக்குத் தொடரவோ, கேள்வி கேட்கவோ கருணாநிதியில் முயன்றால் அது நீரா ராடியாவின் மேல்தானே தவிர, இதைப் போன்ற விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் மீது தேவையில்லாமல் பாயக்கூடாது.  இதைப் பற்றி தயாநிதி மாறன் இன்னும் மறுப்பேதும் சொல்லவில்லையே அதை ஏன் கருணாநிதி கேட்கவில்லை? இதைப் பற்றி தயாளு அம்மையாரிடம் ஏதாவது பேசியிருப்பாரா? காரணகர்த்தாக்களான தயாநிதி மாறன், நீரா ராடியா ஆகியோரைப் பற்றி எந்த ஒரு வார்த்தையும் பேசாத முதல்வர் தேவையில்லாமல் சோ மீது பாய்கிறார்.  இதைப் போல நடந்ததா என்று சோ ஏன் நிரூபிக்க வேண்டும்? இது போல நடக்கவில்லை என்று தயாளு அம்மாள் சார்பில் கருணாநிதி அல்லவா நிரூபிக்க வேண்டும். நல்ல காமெடி பெரியவரே! (கீழே உள்ள செய்தித் 

உலகின் சிறந்த "பின்" அழகிகள் - World's Best Bum-2010

உலக அழகிகள் என்று முதலில் பெண்களைத் தேர்வு செய்து பட்டம் சூட்டினார்கள், பின்பு இது முன்னேறி, சிறந்த கூந்தல் அழகி, சிறந்த பல் அழகி, சிறந்த கண் அழகி என்றெல்லாம் பல்வேறு விதமாக, படிப்படியாக, விதவிதமான அழகிகளை தேர்வு செய்து பட்டம் சூட்டி விட்டு, சமீபத்தில் உலகின் சிறந்த "பின்" அழகி யார் என்று போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்றுள்ள அழகிகளின் தரப் பட்டியலை  "World's Best Bum 2010" என்ற பெயரில் லண்டனிலிருந்து வரும் தி சன் என்ற நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த அழகிகளின் "பின்" அழகுப் படங்கள் சரிவரக் கிடைக்காத நிலையிலும் சற்றும் மனம் தளராமல் வலைப் பக்கங்களை மேய்ந்து அந்த அழகிகளின் புகைப் படங்களைக் கீழே கொடுத்துள்ளேன். இந்தப் போட்டிக்கு அவர்கள் வைத்த பெயர்தான் சற்று நெருடலாக இருக்கிறது, "the Holy Grail of Hindquarters," என்பதில் Hindquarters என்றால் பின்புறம் என்று எல்லோருக்கும் தெரியும், ஆனால், Holy Grail என்பது ஒரு புனிதமான கிறிஸ்துவக் குறியீடு: கிறிஸ்துவ மத நம்பிக்கையின்படி ஏசு கிறிஸ்து அவருடைய "கடைசி விருந்து" (Last Supper) நடந்த சமயம்

படித்ததில் பிடித்தது -

செய்தித்தாளோ, வாரப் பத்திரிக்கையோ, சக பதிவாளரின் வலைப் பதிவோ, நாவலோ எதில் எனக்கு பிடித்த விஷயங்கள் வருகிறதோ அதை இங்கு தர உத்தேசம். சக பதிவாளர் ரமேஷ் அவருடைய http://sirippupolice.blogspot.com வலைத் தளத்தில் எழுதியிருக்கும் அறிமுகம் பகுதி: ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள்.  மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....   ஹா ஹா ஹா ...Good one

வாழ நினைத்தால் வாழலாம் -Part 1-பணம் கொட்டும் ஆன்லைன் புத்தக வியாபாரம்

தில்லியைச் சேர்ந்த சச்சின் பன்ஸால் மற்றும் பின்னி பன்ஸால் என்ற இரண்டு நண்பர்களும் தில்லி ஐ.ஐ.டியில் படித்தவர்கள். இருவருமே ஒன்றாக அமெரிக்காவை சேர்ந்த அமெஸான் (Amazon) என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் பணிபுரிந்தவர்கள். அமெஸான் நிறுவனத்தைப் பற்றி அறியாதவர்கள் குறைவு. 1995 இல் Jeff Bezos என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகெங்கிலும் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு ஆன்லைன் பல்பொருள் அங்காடி அமெஸான். மேற்சொன்ன இரு பன்ஸால் நண்பர்களும் செப்டம்பர் 2007 இல் Flipkart என்ற ஆன்லைன் புத்தக நிறுவனத்தை நிறுவினர். Pic courtesy: www.business.in.com இன்றைய இயந்திரத்தனமான உலகில் அருகில் இருக்கும் புத்தகக் கடைக்கு செல்ல நேரம் இல்லாமல் இருக்கும் ஏராளமான இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினருக்கு Flipkart ஒரு மிக வசதியான தேர்வாகும். ஒரு புத்தகத்தையோ, திரைப்பட, மற்றும் இசை டீவிடீயோ, மொபைல் பேசியோ எதுவாக இருந்தாலும் www.flipkart.com சென்று உங்களுக்கு பிடித்த பொருளைத் தேர்வு செய்து ஆர்டர் செய்துவிட்டால் அது குரியர் மூலம் உங்கள் வீடு தேடிவந்து விடும். நீங்கள் உங்கள் கிரெடிட் அல

தி சோஷல் நெட்வொர்க் - திரைப் பட விமரிசனம்

Social என்பதை சோஷியல் என்று உச்சரிப்பது தவறு, அதன் சரியான உச்சரிப்பு "சோஷல்" என்பதாகும். சரி, சரி, நான் இந்தப் பதிவை முன் வைக்க வந்தது உங்களுக்கு ஆங்கில இலக்கணம் சொல்லித்தர அல்ல. சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ள இந்தப் படத்தை விமரிசனம் செய்யும்முன் ஒரு சிறிய அறிமுகம்; நம்மில் பல பேர் 'Facebook" பயன்படுத்துகிறோம், ஆனால், மார்க் ஜூக்கர்பெர்க் என்றால் யார் என்று தெரியுமா? அவர்தான் இந்த 'Facebook" கை உலகிற்கு அறிமுகம் செய்வித்தவர். இன்று உலகத்தில் மிக இளைய பில்லினர் (billionaire). Facebook 2004 ம் ஆண்டில் இவரால் தோற்றுவிக்கப்பட்டபோது இவர் வயது 20. ஆம் ஜஸ்ட் 20 வயதாகும்போது அமெரிக்காவின் ஹார்வர்ட் யுனிவர்சிடியில் படிக்கும் அவரருடைய தோழி எரிக்காவை வெறுப்பேற்ற செய்த ஒரு விஷயம்தான் ஆறே வருடங்களில் விஸ்வரூபம் எடுத்து இன்றைய தேதியில் Facebook-இன் மதிப்பு சுமார் 25 பில்லியன் டாலர்கள் என மதிப்படப்படுகிறது. அதாவது, ஒரு பில்லியன் டாலர் என்பது நம் இந்திய மதிப்பில் சுமார் 4700 கோடி என்று எடுத்துக்கொண்டால் அதை 25 ஆல் பெருக்கிப் பாருங்கள், அதுதான் Facebo

நல்ல கவிதை ஒன்று...

அப்படி என்னதான் பிஸியோ, என்னதான் ஆயிற்று உன் பதிவுகளுக்கு, ஏன் இந்த இடைவெளி என்றெல்லாம் சில நல்ல நண்பர்கள் என்னை அலைபேசியில் குடைந்து எடுத்துவிட, இதோ, கிளம்பிடோம்ல? இனிமே நிச்சயம் வாரம் ரெண்டு பதிவாவது இருக்கும் மக்களே. சமீபத்தில் நான் மிகவும் ரசித்த ஒரு கவிதையை கீழே கொடுத்துள்ளேன்: (அட்ரா சக்க வலைப்பதிவில் நண்பர் சி.பி செந்தில்குமார் கணையாழி கவுரவித்த என் முதல் கவிதை என்ற பெயரில் எழுதியது). நண்பருக்கு நன்றி. ஒரு பார்வை இல்லாதவன் எழுதிய கவிதை மாதிரி ஜோடனை இல்லாத பிம்பமாய் உன் முகம் இருக்கும். சொர்க்கத்துக்குப்போடப்பட்ட ஒற்றையடிப்பாதை மாதிரி உன் தலை வகிடு இருக்கும். பளிங்குக்கற்களில் ஊற்றிய பாதரசம் போல் அலை பாய்ந்து கொண்டே உன் கண்கள் இருக்கும். நிறத்தில்,நீளத்தில்,அடர்த்தியில் இருட்டுக்கு சவால் விடும் கர்வத்தில் உன் கூந்தல் இருக்கும். ஓஸோன் காற்றின் சுத்தீகரிப்புக்கேந்திரமாய் உன் நாசி இருக்கும். தேனில் ஊறிய இரு துண்டுக்ள் போல் உன் உதடுகள் இருக்கும். பருத்திப்பூக்களை இரண்டு பக்கமும் வைத்துக்கட்டியது போல் நத்தைக்கு ஒரு ஆழாக்கு அதிகமான மென்மையில் உன் கன்னக

மழைநீர் கால்வாய் அமைக்க கோடி, கோடியாய் பணம் கொட்டியும் தண்ணீர் வடியாமல் சென்னை மிதப்பது ஏன்?

  "மழைநீர் கால்வாய்கள் திட்டமிட்டபடி அமைக்கப்படவில்லை. கட்டமைப்பு வசதிகளில் காலத்திற்கேற்ப மாற்றம் செய்ய வேண்டியது அவசியம்; இதில், அரசு சிறப்பு கவனம் செலுத்தாவிட்டால் சென்னை தண்ணீரில் தத்தளிப்பது தவிர்க்க முடியாதாகி விடும்' என, குடிநீர் வாரிய ஓய்வு பெற்ற இன்ஜினியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால், சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. மூன்று நாட்கள் பெய்த மழைக்கே சென்னை தத்தளித்து விட்டது. ஆண்டுதோறும் மழைநீர் கால்வாய் அமைத்தல், ஏரிகள் தூர்வாருதல், நீர் வழித்தடங்களை சீரமைத்தல் என, கோடிக்கணக்கில் பணத்தை கொட்டியும் பயன் இல்லை. குடிசைப்பகுதிகள் மட்டுமல்ல, அடுக்குமாடி குடியிருப்புகள் கூட தண்ணீரில் தத்தளிக்கும் நிலை ஏற்படுகிறது.   சென்னையில், 1,447.91 கோடி ரூபாயில் பொதுப்பணித் துறையும், சென்னை மாநகராட்சியும் இணைந்து நீர் வழித்தடங்களை சீரமைக்கும் பணியை துவக்கியுள்ளன. இதற்கு பலன் கிடைக்குமா, சென்னை தத்தளிக்கும் நிலைக்கு தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. குடிநீர் வாரிய ஓய்வு பெற்ற இன்ஜி

முன்னாள் அமைச்சர் ராஜா இந்த நாட்டைத் திருடியது எப்படி?

   வடை போச்சே!?  இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியாகி உள்ள "How A Raja robbed the nation," என்ற கட்டுரையின் தமிழாக்கம்: ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து, சி.ஏ.ஜி. (CAG) விடுத்த அறிக்கை, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.அதில் பதவியில் உள்ள செல்வாக்கான அரசியல்வாதிகள் பணத்தாசை பிடித்து நம்முடைய அரசியல் அமைப்பின் மூலம் எவ்வளவு தூரம் போது மக்களை சுரண்ட முடியும் என்றும், எப்படி பெரிய நிறுவனங்கள் இந்தக் கொள்ளையில் கூட்டு சேருகின்றன என்றும், பிற கட்சிகளின் உதவியுடன் நடக்கும் மத்திய அரசு, ஆட்சி கலைந்து விடக்கூடாது என்பதற்காக எப்படியெல்லாம் வளைந்து கொடுக்கிறது என்றும் புள்ளிவிவரங்களை மிகத் தெளிவாக இந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. பதவியில் இருந்தபோது அமைச்சர் ஏ ராஜா, பிரதமர் மற்றும் சக அமைச்சர்களின் ஆலோசனைகளை லட்சியம் செய்யவில்லை. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அதிக வருவாய் கிடைத்திருக்குமே என்ற யூகத்தின் அடிப்படையில் பார்த்த போது, இதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தெரியவந்தன. இந்த துறையின் அமைச்சராக இருந்த ராஜா, விதிகளை மாற்றி, அதாவது வளைந்து கொடு

என்கௌண்டர் மற்றும் சட்ட சிக்கல்கள்

சமீபத்தில் எல்லோரையும் மிகவும் வருத்தமடையச் செய்த கோவை இரட்டை கொலை வழக்கில் கைதான அரக்கன் முத்து கிருஷ்ணன் நேற்று கோவை அருகே காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். இதை பொதுமக்கள் முழு மனதோடு வரவேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடியிருக்கிறார்கள். இந்த முத்து கிருஷ்ணன் கொடூரமாக ஒரு 10 வயது சிறுமியைக் கற்பழித்துக் கொன்றதோடு இல்லாமல், அந்த சிறுமியின் 7 வயது தம்பியையும் கொன்றுள்ளான். இந்த கொலைகாரனை விசாரணை செய்ய அழைத்துச் சென்ற போது அவன் கூட சென்ற இரு காவல் அதிகாரிகளை சுட்டுவிட்டு தப்ப முயன்ற போது மற்ற காவல் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். உண்மையிலேயே இது மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒரு விஷயம். எந்த ஒரு குற்றவாளிக்கும் இது வரை சரியான தண்டனை கிடைத்ததாக இந்தியாவில் சரித்திரம் இல்லை. சட்டம் மிகவும் சோம்பேறித்தனமாக செயல்படும் போது நம் நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் கோடிக்கணக்கில் இருக்கின்றன. Justice can be delayed, but it can't never be denied என்று எப்போதோ ஒரு சோம்பேறி சொன்னதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு நம்முடைய சட்டம் யாரையுமே சரிவர விசா

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன

மாடலிங்

ஏஷியா மோனே - அமெரிக்க மாடல் இப்போது எந்த விளம்பரத்தைப் பார்த்தாலும் அதில் பெரும்பாலும் திரைப்பட நடிகர்/நடிகைகளே இருக்கிறார்கள். தொழில்முறை (professional) மாடல்களே இல்லாமல் போய்விடுவார்களோ என அஞ்சும் அளவு திரைத்துறையினரின் ஆதிக்கம் மிக, மிக அதிகமாக இருக்கிறது. மாடலிங் 1852 ல் சார்லஸ் பிரெடெரிக் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அவருடைய துணிக் கடையை பிரபலப்படுத்த தன்னுடைய மனைவியான மேரி வெர்நெட் என்ற பெண்மணியை விதவிதமாக துணிகளை உடுத்த வைத்து, அதை வித, விதமான வண்ணங்களில் படமாக வரைந்து ஊரெங்கும் வைத்து கடைக்கு விளம்பரம் செய்தார். இந்த யுக்தியே பிற்பாடு மாடலிங் துறைக்கு முன்னோடியாக இருந்தது எனச் சொல்லலாம். மாடலிங் இன்று எங்கேயோ வளர்ந்து விட்ட நிலையில் celebrity endorsement என்ற பிரபலங்களை வைத்து விளம்பரப்படுத்தும் முறை நம் நாட்டில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட அத்தனை விளம்பரங்களிலும் நடிகர்/நடிகைகள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள். இவர்களைத் தவிர விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களும் நிறைய விளம்பரங்களில் வர ஆரம்பித்து விட, தொழில்முறை விளம்பர மாடல்கள் நிறையப் பேர் வே

ரஜினி ஒரு முட்டாள்-நடிகர் விவேக் பேட்டி

  ஆங்கிலம் ஒரு வினோதமான மொழி. ஒரே மாதிரியான வார்த்தைகளே உபயோகிக்கும் விதத்தில் பொருள் மாறும். நமது தமிழ் நடிக, நடிகையர் பெரும்பாலான சமயங்களில் பேசும் போது ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். அவர்களில் பெரும்பாலானோர் 10 வது கூட படித்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் பிடிவாதமாக ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். அதில் எவ்வளவு தவறு இருந்தாலும் பரவாயில்லை. ஏனென்றால் தான் பேசுவது தவறு என்று தெரியாமலேயே அவர்கள் பேசுவதுதான் காரணம். சில நாட்களுக்கு முன் நடிகர் விவேக்கை ஒரு FM ரேடியோ சேனல் பேட்டி கண்டது. அதில் விவேக் வழக்கம் போல பெரிய பந்தாவுடன் பேசினார். பேட்டி கண்டவர்  விவேக்கிடம் அவருடைய சிவாஜி பட அனுபவத்தைக் கேட்டவுடன் மிக உற்சாகமாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தான் ரசித்து நடித்த காட்சிகளைக் கூறினார். அதோடு நில்லாமல் ரஜினி ரசிகர்களை இம்ப்ரெஸ் செய்யும் விதமாக இன்னொன்று கூறியதுதான் அந்த பேட்டியின் விசேஷம்; "சிவாஜி படத்துல ஒரு சீன்ல நானும் சூப்பர் ஸ்டாரும் நடந்து வருவோம், கேமரா என் பக்கத்துல இருக்கும், அப்போ, நான் என்னோட கூலிங் கிளாசை தலைக்கு மேல மாட்டியிருப்பேன், அதை அப்படியே சரிஞ்சு வந்து என் கண

குறும்பு செய்யும் குழந்தைக்கு எறும்புக்கடி : தனியார் பள்ளிகள் குரூரம்

கோவை : கோவையில் உள்ள சில தனியார் மெட்ரிக் பள்ளிகள், தங்கள் மாணவர்களை வழிக்கு கொண்டு வர, காட்டுமிராண்டித்தனமான வழிமுறைகளை கடைபிடிக்கின்றன. இதன் உச்சகட்டமாக, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகம், குறும்பு செய்யும் குழந்தைகளை மரத்தில் கட்டி போட்டும், எறும்பால் கடிக்கச் செய்தும், தண்டித்து வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாணவர்களை அடிப்பது, உடல் ரீதியாக துன்புறுத்துவது, தகாத வார்த்தைகளால் திட்டுவது ஆகியவை, நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் உள்ள சில தனியார் பள்ளி ஆசிரியர்கள், இதுகுறித்து கவலைப்படுவதே இல்லை. இவர்கள், மாணவர்களுக்கு அளிக்கும் தண்டனைகள் விபரீதமானவை. மணிக்கணக்காக வெயிலில் நிற்க வைப்பது, ஸ்டீல் ஸ்கேலால் கை, கால் முட்டி, தலையில் அடிப்பது என தண்டனைகளின் பட்டியல் நீள்கிறது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பிரபல தனியார் துவக்கப் பள்ளி அளிக்கும் தண்டனை கொடூரத்தின் உச்சகட்டமாக உள்ளது. மாணவர்களை வழிக்கு கொண்டு வர, இப்பள்ளி ஆசிரியர்கள் பயன்படுத்தும் யுக்திகள் பதற வைக்கின்றன. சரியாக படிக்காத, குறும்பு செய்யும் சிறு குழந்தைகள

கிலிமாஞ்சாரோ

  சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் எந்திரன் படத்தில் கிலிமாஞ்சாரோ என்று ஒரு பாடல் வருகிறது. இதை இதுவரை யாருமே சென்று எடுக்காத மச்சு-பிச்சு (Machu-Picchu) என்ற இடத்தில எடுத்திருக்கிறார்கள். இது பெரு நாட்டில் உள்ள ஒரு மிகப் புராதனமான  இடம். அந்தப் பாடலின் ஆரம்ப வரிகள் இவை: கிலிமஞ்சரோ  – மலை கனிமஞ்சரோ  – கன்னக் குழிமஞ்சரோ யாரோ  யாரோ  பெரு நாட்டில் மச்சு-பிச்சுவில் எடுத்துவிட்டு ஒரு எதுகை-மோனைக்காக கிலிமஞ்சரோ என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலை எழுதிய கவிஞர் Dr. விஜய். இவர் இன்று மாலை சன் டிவியில் அந்தப் பாடல் ஒளிபரப்பானபோது," நிறையப் பேர் கிலிமஞ்சரோ என்றால் என்ன என்று கேட்கிறார்கள், கிலிமஞ்சரோ, உயரமான எவரஸ்ட் சிகரத்தின் உச்சியில் உள்ள ஒரு இடம்," என்று மிக அபத்தமாக உளறினார். கிலிமஞ்சரோ சிகரம் இருப்பது தென் ஆப்ரிக்காவில். அதற்கும் எவரெஸ்ட் சிகரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதைப் போல எந்தவிதமான பொது அறிவும் இல்லாமல் இருக்கும் இவருக்கு எந்த புத்திசாலி டாக்டர் பட்டம் கொடுத்தது என்று தெரியவில்லை. என்ன கொடுமை இது?

சட்டத்தின் பார்வையில் ராமர் - டாக்டர் இரா.நாகசாமி

 எல்லாரும் எதிர்பார்த்திருந்த அயோத்தி வழக்கில், மூன்று நீதிபதிகள் தீர்ப்பு கூறிவிட்டனர். அத்தீர்ப்பில் இரண்டு முக்கிய முடிவுகள் வெளிவந்துள்ளன.  அவற்றில் முக்கிய முடிவு, பாபர் மசூதியின் கீழே ஒரு கோவிலின் இடிபாடுகள் உள்ளன என்பதை மூன்று நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். பாபர், அங்கிருந்த கோவிலை இடித்து விட்டு மசூதியைக் கட்டினாரா என்ற கேள்வியே அர்த்தமற்றதாகிவிட்டது. ஆதலின், அதைப் பற்றி யாரும் இப்போது கவலைப்படவில்லை.அந்த இடம் வழிபாட்டில் இருந்த இடம் என்பதால், இஸ்லாமியருக்கு மூன்றில் ஒரு பங்கும், நிர்மோகி அகாராவுக்கு ஒரு பங்கும், ராம் லாலாவுக்கு ஒரு பங்குமாக பிரித்துக் கொடுக்க நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இதுகுறித்து பல கருத்துக்கள் எழுந்துள்ளன. "இத்தீர்ப்பு சட்டப்படி அளிக்கப்பட்டதல்ல; ராமர் உயிருள்ள மனிதர் போல கருதும் நம்பிக்கைக்கு இடமளித்து, ராம் லாலாவுக்கு ஒரு பங்கு எனக் கொடுத்துள்ளது சட்டத்துக்கு ஏற்புடையது அல்ல. நம்பிக்கைக்கு முதலிடம் கொடுத்து அளித்தது. தெய்வம் என்ற நம்பிக்கையை மனிதர் போல் கொண்டு தீர்ப்பளித்துள்ளது நம் பண்பாட்டுக்கு ஏற்றதல்ல. ஆதலால், சட்டப்படி

தினசரி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்

 திருப்பதி ஏழுமலையானை வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிப்பது என்பது இன்றைக்கு ஒவ்வொருவரின் வாழ்நாள் லட்சியமாகிவிட்டது. ஆனால், ஒரே ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஏழுமலையானை அதிகாலையில் முதல் ஆளாகத் தரிசிப்பதும், இரவில் நடை அடைப்பதற்கு முன் இறுதியாக தரிசிப்பதும் இன்றும் நடந்து வருகிறது. யார் அவர்கள்? அவர்களின் பின்னணி என்ன? அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை? திருமகளுக்கும் பெருமாளுக்கும் ஒரு முறை பிணக்கு ஏற்பட்ட போது, திருமகள் கோபித்துக் கொண்டு பூமிக்கு வந்துவிட, பின்னாலேயே பெருமாளும் வந்து அவளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு, அது முடியாததால் தவம் செய்கிறார். நாளடைவில் அவர் மேல் பெரும் புற்று மூடிவிட, அங்கு மாடுகளை மேய்க்கும் கோபாலன் என்பவன் தன்னுடைய பசுவைக் கொண்டு தினசரி அந்தப் புற்றுக்கு பால் அபிஷேகம் செய்ய, அதில் மனம் மகிழ்ந்த பெருமாள் அவனுடைய சந்ததிகளுக்கு தன்னை தினசரி தரிசனம் செய்யும் வரம் அளிக்கிறார் என்பது புராணம். அந்தத் தலைமுறையில் வந்த வேங்கட ராமையா என்பவர்தான் அந்த பாக்கியசாலி. தினமும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் வெங்கடராமையாவும், அவரது மகன்களும் எழ

பால், பசும்பால், பருகப் பால்

 பசும் பாலில் ஏராளமான கால்ஷியம் சத்து இருக்கிறது, பால் பருகினால் உடலில் உள்ள கொழுப்பு குறையும் என்றெலாம் தினசரி தகவல்கள் வந்தாலும் இப்போதெல்லாம் யாருக்கு பால் பருக நேரம்/பொறுமை இருக்கிறது? அப்படியே நேரம் இருந்தாலும், நாம் பருக நல்ல தரமான பால் எங்கே (இந்தியாவில்) கிடைக்கிறது?  இதையெல்லாம் பார்த்த ஒரு ஸ்விஸ் நிறுவனம் ஆண்கள் பால் பருகுவதை ஊக்கப்படுத்த  ஒரு வினோதமான ஐடியா செய்து, அதில் பெரும் வெற்றியும் பெற்றுள்ளது. மார்க்கெட்டில் பாலை ஒரு குறிப்பிட்ட பாக்கிங்-இல் அறிமுகம் செய்தபின் வியாபாரம் ஒரே ஏறுமுகம்தான். உங்களுக்காக சில படங்கள் (வடிவேலு சொல்வது போல "ஒக்காந்து யோசிப்பாங்களோ"?)  : (அனுப்பிவைத்த நண்பர் சுந்தருக்கு நன்றி )

தஞ்சை பெரிய கோவில் - 1000 ஆண்டுகள் கடந்த ஒரு உன்னதம்

 தஞ்சை பெரிய கோவிலின் 1000 ஆண்டுகள் நிறைவு பெறுவது முன்னிட்டு இந்தப் பதிவு. "எழுத்துச் சித்தர்" பாலகுமாரன் கைவண்ணத்தில்: அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு??? இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி ( Heat Treatment ) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை ( oil quenching ) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப

ரூ.50,000/- ஐஸ்க்ரீம்

பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு இந்த செய்தியே உதாரணம்: நியூ யார்க் நகரில் உள்ள "செரண்டிபிட்டி (Serendipity)" என்ற ரெஸ்டாரண்டில் அதனுடைய 50 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் ஒரு மிக விலையுயர்ந்த Grand Opulence Sundae என்ற ஐஸ்க்ரீம் ஒன்றை 1000 அமெரிக்கன் டாலருக்கு (சுமார் ரூ.50,000/-) அறிமுகம் செய்துள்ளனர். இதன் சிறப்புகள்: தஹிதி மற்றும் மடகாஸ்கர் போன்ற நாடுகளில் விளையும் மிக உயர்ந்த வகை வனிலா பருப்பிலிருந்து இதன் வனிலா க்ரீம் எடுக்கப்படுகிறது. உலகிலேயே விலை உயர்ந்த "அமேடி போர்சிலானா (Amedei Porceleana) என்ற சாக்லேட் இதில் சேர்க்கப்படுகிறது.  மேலும் விலையுயர்ந்த வெனிசுலா (Venezuela) நாட்டைச் சேர்ந்த சாக்லேட்டும் சேர்க்கப்படுகிறது.  பாரிஸ் நகரிலிருந்து வரவழைக்கப்படும் செர்ரி பழங்கள், மார்ஸிபான், மற்ற விலையுயர்ந்த பழங்களும் சேர்க்கப்படுகின்றன.  பிரான்ஸ் நாட்டில் அர்மனாக் பகுதியிலிருந்து வரவழைக்கப்படும் மிக உயர்ந்த வகை பிராந்தி சேர்க்கபடுகிறது.  தங்கத்தை மிக லேசாகத் தட்டி அதில் கிடைக்கும் தங்க இலை (gold foil) சேர்க்கபடுகிறது (நம் நாட்டில் பெ

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை

 உலகப் பொதுமறை திருக்குறளில் திருவள்ளுவர் சொன்னது போல இல்லாத ஒருவருக்கு உதவி செய்வதே தலை சிறந்த தானமாகும். இதை உலகில் மிகப் பெரிய அளவில், மிகச் சிறப்பாக நிரூபித்துக் கொண்டிருக்கும் இருவர் Bill Gates மற்றும் Warren Buffett. உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இருக்கும் இவர்கள் இருவரும் அவர்களுடைய சொத்தில் பெரும் பகுதியை பல்வேறு நலத் திட்டங்களுக்கு வழங்கி உதவி செய்து வருகிறார்கள். எங்கோ அமெரிக்காவில் பிறந்து, Microsoft என்ற பெரும் நிறுவனத்தினை நிறுவியதின் மூலம் வரும் வருவாயை இந்தியாவில் இருக்கும் AIDS நோயாளிகளுக்கு செலவிடுவதில் Bill Gates க்கு என்ன லாபம்? இந்திய அரசாங்கம் ஒதுக்கிய தொகையை விட Bill Gates செய்து வரும் உதவி பெரியது. இந்தியாவிலும் பெரும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு தூரம் இதைப் போன்ற நலத் திட்டங்களுக்கு உதவுகிறார்கள் என்று பார்த்தால் பெரும்பாலானோர் எதுவும் உதவவில்லை என்பது தெரியும். Altruism என்ற ஆங்கில வார்த்தைக்கு சுயநலமில்லாத சேவை என்று பொருள். இதற்கு எனக்கு தெரிந்த வரையில் இந்தியாவில் இரண்டே பேரைத்தான் உதாரணமாக சொல்ல முடியும்; இருவருமே இப்போது உ