Skip to main content

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை


 உலகப் பொதுமறை திருக்குறளில் திருவள்ளுவர் சொன்னது போல இல்லாத ஒருவருக்கு உதவி செய்வதே தலை சிறந்த தானமாகும்.

இதை உலகில் மிகப் பெரிய அளவில், மிகச் சிறப்பாக நிரூபித்துக் கொண்டிருக்கும் இருவர் Bill Gates மற்றும் Warren Buffett. உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இருக்கும் இவர்கள் இருவரும் அவர்களுடைய சொத்தில் பெரும் பகுதியை பல்வேறு நலத் திட்டங்களுக்கு வழங்கி உதவி செய்து வருகிறார்கள்.

எங்கோ அமெரிக்காவில் பிறந்து, Microsoft என்ற பெரும் நிறுவனத்தினை நிறுவியதின் மூலம் வரும் வருவாயை இந்தியாவில் இருக்கும் AIDS நோயாளிகளுக்கு செலவிடுவதில் Bill Gates க்கு என்ன லாபம்? இந்திய அரசாங்கம் ஒதுக்கிய தொகையை விட Bill Gates செய்து வரும் உதவி பெரியது. இந்தியாவிலும் பெரும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு தூரம் இதைப் போன்ற நலத் திட்டங்களுக்கு உதவுகிறார்கள் என்று பார்த்தால் பெரும்பாலானோர் எதுவும் உதவவில்லை என்பது தெரியும்.

Altruism என்ற ஆங்கில வார்த்தைக்கு சுயநலமில்லாத சேவை என்று பொருள். இதற்கு எனக்கு தெரிந்த வரையில் இந்தியாவில் இரண்டே பேரைத்தான் உதாரணமாக சொல்ல முடியும்; இருவருமே இப்போது உயிருடன் இல்லை-ஒருவர் மகாத்மா காந்தி, மற்றொருவர் அன்னை தெரஸா.

இதைப் போல சேவை மனப்பான்மை ஒருவருடைய மரபணுவிலேயே (genes) இருக்கிறது என்கிறது விஞ்ஞான ஆராய்ச்சி. Richard Dawkins எழுதிய "The Selfish Gene" என்ற புத்தகத்தில் இதை விளக்குகிறார்.ஒவ்வொருடைய மரபணுவும் selfish ஆக இருந்தால் மட்டுமே evolution எனப்படும் பரிணாம வளர்ச்சியில் தொடர்ந்து இருக்க/வளர முடியும் எனபதே அவருடைய தியரி.

எங்கோ பிறந்த Bill Gates இந்தியாவில் இருக்கும் AIDS நோயாளிகளுக்கு உதவும் போது, இந்தியாவில் இருக்கும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி திருப்பதி கோயிலுக்கு தங்க விமானம் வேய இரண்டு கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்துள்ளார். இது தானம் அல்ல, சுய நலம், விளம்பரம், பாவ பரிகாரம்...எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

இவரைத் தவிர மற்ற பெரும் பணக்காரர்கள் இந்தியவில் வறுமை ஒழிய எதுவும் உதவி செய்வதில்லை. அரசியல்வாதிகளிடம் நாம் இதை எதிபார்க்க முடியாது. எப்படி தானம் செய்யும் உணர்வு ஒருவருடைய மரபணுவில் இருக்கிறதோ, அதே போல மக்கள் சொத்தை கொள்ளை அடிப்பதும் அதே மரபணுவில் இருக்க சாத்தியம் இருக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். தலைமுறை, தலைமுறையாக மக்கள் சொத்தை திருடி, கோடிகளில் பணத்தை வைத்துக் கொண்டு அதை செலவு செய்ய திரைப் படங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு, மேலும், மேலும் பணத்தை ஈட்டும் வித்தை தமிழ்நாட்டில் ஒரு குடுமபத்துக்கு கை வந்த கலை.

லண்டனில் சில வருடங்களுக்கு முன் நடந்த தீவிரவாதிகளின் குண்டு வெடிப்பில் இறந்த ஒரு பெண்ணின் பெற்றோருக்கு இங்கிலாந்து அரசு உதவித் தொகை வழங்கிய போது, அதை அப்படியே எடுத்து இந்தியாவில் உள்ள பார்வையிழந்த குழந்தைகளின் சிகிச்சைக்கு கொடுத்துவிட்டனர். Altruism என்ற வார்த்தைக்கு இதைவிட வேறு சிறந்த உதாரணம் வேண்டுமா?

நலத் திட்டங்களுக்கு உதவி செய்ய நாம் Bill Gates அல்லது Warren Buffet போல பெரும் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அங்கங்கே, நம்மால் முடிந்த அளவு இல்லாதவர்க்கு உதவி செய்வதே பெரிய விஷயம். பிச்சைக்காரர்களுக்கு பிச்சையாக பணம் கொடுப்பதை விட ஏதேனும் உணவுப் பொருளை வாங்கிக் கொடுங்கள். என்னுடைய காரில் எப்போதும் நான்கைந்து பிஸ்கட் பாக்கட்டுகளை வைத்திருப்பேன். சிக்னலில் கார் நிற்கும் போது பிச்சை கேட்டு வரும் குழந்தைகளுக்கு அதை கொடுப்பதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன்.படிப்பு உதவி கேட்டு வீட்டுக் கதவைத் தட்டும் குழந்தைகளுக்கு புத்தகங்களும், துணியும் வாங்கிக் கொடுக்க என்னால் முடிந்த அளவு உதவி செய்கிறேன். 

அரசியல்வாதிகளையும், அரசாங்கத்தையும் எதிர்ப்பார்த்து காத்திருக்காமல் நாமே, நம்மால் முடிந்த அளவு நம்முடைய இந்த சமுதாயத்திற்கு உதவி செய்வோம். இந்த 63 ம் சுதந்திர தின விழாவில் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொள்வோம். ஜெய் ஹிந்த்.

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்