Skip to main content

Posts

Showing posts from September, 2013

இறையாண்மையே... உன் விலை என்ன? - from tamil.thehindu.com

அமெரிக்காவின் உளவு அமைப்பான தேசியப் பாதுகாப்பு முகமையின் (என்.எஸ்.ஏ.) உளவு வேலை தொடர்பாக ஒவ்வொரு நாளும் வெளியே வரும் தகவல்கள் ஒவ்வொன்றும் அதிரவைக்கின்றன. எதிரி நாடுகள், அச்சுறுத்தல் நாடுகள், நட்பு நாடுகள் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல், பெரும்பான்மை நாடுகள் அமெரிக்காவால் உளவு பார்க்கப்பட்டி ருக்கின்றன. இந்த உளவு வேலைக்குப் பெரிய ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்தியிருப்பது... தகவல் தொழில்நுட்பம் - முக்கியமாக இணையம். இந்திய ரகசியங்கள் மோசமாக வேட்டையாடப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் ஒரு மாதத்தில் மட்டும் 1350 கோடி தகவல்கள் திருடப்பட்டி ருக்கின்றன எனும்போது, இந்தியாவின் விண்வெளி ஆய்வுகள், ராணுவ வியூகங்கள், ஆயுதத் தயாரிப்புத் திட்டங்கள், தகவல் தொழில்நுட்பத் துறைப் பணிகள், தொழில்துறை இலக்குகளில் தொடங்கி இந்நாட்டின் ரகசியங்கள் என்று எதுவும் மிச்சம் இருக்காது என்றே தோன்றுகிறது. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனிலும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் உள்ள நியூயார்க்கிலும் இருக்கும் இந்தியத் தூதரக அலுவலகங்களிலும் உளவுக்கருவிகளைக் கொண்டு தகவல்கள் உறிஞ்சப்பட்டிருப்பது இந்தச் சந்தேகத்தை நியாயப்படுத்துக
-from tamil.thehindu.com ஜெயகாந்தன் எழுதி ஆண்டுகள் பல ஆகின்றன. பேச்சும் அப்படித்தான். முதுமை நிறைய தளர்ச்சியைத் தந்திருக்கிறது. ஆனால், எந்தச் சூழலிலும் சிங்கம் சிங்கம்தான். பேட்டி என்றதும் "வேண்டாம்" என்றவர், "ஐந்தே நிமிஷம்" என்றதும் சம்மதித்தார்.   "இந்த  வயதில், தேசம் செல்லும் பாதை, எழுத்துலகத்தின் போக்கு இவற்றை எல்லாம் பார்க்கும்போது எப்படி இருக்கிறது?" "காலந்தோறும் மாற்றங்களை நாம் பார்க்கிறோம். நாமும் மாறிக்கொண்டே இருக்கிறோம்." "இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நம் முன் காந்தி பாதை, நேரு பாதை என்று இரு பாதைகள் இருந்தன. இறுதியில் இரண்டாவது பாதையில்தான் நாம் பயணித்தோம். இப்போது அந்தப் பாதையை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?" "நாம் தேர்ந்தெடுத்த பாதை சரியானது. ஆனால், எதை நாம் நேரு பாதை என்று சொல்கிறோமா அதற்கு அடித்தளமும் காந்திதான் என்பதை மறந்துவிடக் கூடாது." "இன்றைக்கும் காந்தி தேவைப்படுகிறாரா?" "என்றைக்கும் காந்தி நமக்குத் தேவைப்படுகிறார்." "சுதந்திரம் அடைந்தபோது காங்கிரஸுக்கு

இப்படி ஒரு குடி தேவையா?

தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கையை விட பாழாய்ப் போன டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்திருப்பதாக பேஸ்புக்கில் கிண்டலடிக்கிறார்கள். டாஸ்மாக் கடைகளை வைத்து அலுங்காமல் குலுங்காமல் ஆண்டுக்கு நாற்பதாயிரம் கோடியை அள்ளித் தட்டுகிறது தமிழக அரசு. இது தெரிந்த கதை. ஆனால், டாஸ்மாக் ஊழியர்களும் பார் நடத்துபவர்களும் ஓசைப்படாமல் பெரும் சம்பாத்தியம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்."குடி"மக்களும் கண்ணுக்கு தெரிந்தே இந்த களவாணித்தனத்தை அங்கீகரித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் சரக்குகளில் கலப்படம் பண்ணாமலும் போலிகளை புகுத்தாமலும் அசல் சரக்கின் மீதே குவாட்டருக்கு ஐந்து ரூபாய் அதிகம் வைப்பதிலிருந்து தொடங்குகிறது டாஸ்மாக் பணியாளர்களின் 'தொழில்' திறமை. அடுத்து, தண்ணீர் பாக்கெட், பாலிதீன் கப். இதையும் பார் உரிமையாளருடன் சிலபல ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டு, இவர்களேதான் சப்ளை செய்கிறார்கள். ஒரு தண்ணீர் பாக்கெட்டும் பாலிதீன் கப்பும் தலா ஐம்பது பைசாவுக்கு வாங்கி, கிராமப்புறமாக இருந்தால் மூன்று ரூபாய்க்கும் நகர்ப் பகுதியாக இருந்தால் ஐந்து ரூபாய்க்கும் விற்கிறார்கள். ஆக, தண

அமெரிக்கா 'டெட்பீட்' (deadbeat) அரசாக மாறுமா?

அமெரிக்க அரசு பெற்று வரும் கடனின் அளவை உயர்த்துவதற்கு சட்டம் நிறைவேற்றப்பட வில்லை என்றால், அமெரிக்கா 'டெட்பீட்' (Deadbeat என்றால் கடனை திருப்பி செலுத்த முடியாதவன் என்று அர்த்தம்) நாடாகும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா செப்டம்பர் 19, அன்று மீச்சுரி மாவட்ட லிபர்டி நகரில் உள்ள வாகன தொழிற்சாலையில் பேசும்போது கூறினார். இப்போதைக்கு அமெரிக்காவின் பெரிய சிக்கலே பெருகி வரும் கடன் அளவுதான். இதனை மேலும் உயர்த்த ஒபாமா முற்படும் போது, எதிர்கட்சியான குடியரசுக் கட்சி (Republican Party) அம்முயற்சியைத் தடுக்கிறது. 2008-ல் ஏற்பட்ட நிதிச் சிக்கலுக்கு பிறகு அமெரிக்க அரசு பொருளாதாரத்தை உயர்த்த தன்னுடைய செலவுகளை அதிகரித்தது. 2010 முதல் 'ஒபாமாகேர்' என்ற கூடுதலான சுகாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதார காப்பீடு தொகை செலுத்த முடியாத ஏழைகளுக்கு அரசே பிரீமியம் செலுத்துவது இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும். இத்திட்டம் அரசியல் ரீதியாக ஒபாமாவுக்கும் அவர் சார்ந்துள்ள ஜனநாயகக் கட்சிக்கும் (Democratic Party) பயன் அளிக்கக்கூடியது என்பதாலும், அதே நேரத்தில் பொதுமக்களின் வரிப்பணம

பெருநட்சத்திர வெடிப்பு - Super Nova

ராபர்ட் ஓவன் இவான்ஸின் தலை எப்போதும் அண்ணாந்தபடிதான் இருக்கும்போல. இவரைப் பற்றி சில வருடங்களுக்கு பில் பிரைசனின் ‘எ ஷார்ட் ஹிஸ்டரி ஆஃப் நியர்லி எவரிதிங்’ (A Short History of Nearly Everything) புத்தகத்தில் படித்தேன். அடிப்படையில் இவான்ஸ் ஒரு பாதிரியார். ஆனால் அவரது வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருக்கும் விஷயம் என்ன தெரியுமா? இரவு நேரத்தில் பெருநட்சத்திர வெடிப்பை (supernova) தேடி நடத்தும் வேட்டைதான். அது என்ன பெருநட்சத்திர வெடிப்பு? சூரியனைவிட பல மடங்கு பெரிய நட்சத்திரம் தன் ஆயுளின் முடிவில் மிகமிகப் பிரமாண்டமாக வெடித்துச் சிதறி அணைந்துபோவதுதான் பெருநட்சத்திர வெடிப்பு. இந்த நிகழ்வு நமது சூரிய குடும்பத்துக்கு அருகில் நடக்கும் விஷயம் அல்ல. இவ்வளவு பிரமாண்டமாக வெடிக்கக் கூடிய நட்சத்திரங்கள் நமக்கு அருகில் இல்லை; அப்படி நிகழ்ந்தால், நாம் ‘சூரியக் குடும்பத்தோடு கைலாசம்’தான். ஆனால் கற்பனையே செய்துபார்க்க முடியாத தூரத்தில் எவ்வளவோ பெரிய நட்சத்திரங்கள் அடிக்கடி வெடித்துக்கொண்டிருக்கின்றன. அப்படி வெடிக்கும்போது பிரபஞ்ச வெளியில் அவை வாண வேடிக்கை நிகழ்த்துகின்றன. அப்படிப்பட்ட ப

இந்தியாவுக்குள் ஊடுருவிய சில தீவிரவாதிகள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழில் வரும் பெரும்பாலான வலைப்பூக்களை இருவகையாக பிரித்து விடலாம். சினிமா, சினிமாவென்று சினிமாவை தவிர வேறு எதைப் பற்றியும் கவலையேபடாத வலைப்பூக்கள்தான் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவை. சிறுபான்மையாக மருத்துவம், பொது அறிவு, அரசியல் அல்லது அவியலாக எல்லாவற்றையும் சேர்த்து தரும் சில வலைப்பூக்கள். இவற்றில் மிகச் சிலவே சுவாரசியமாக இருக்கின்றன.  நான் 2007-இல் என்னுடைய வலைப்பூவை தொடங்கிய போது  என்னுடைய விருப்பம் என்னவோ அதை மட்டுமே எழுத ஆரம்பித்தேன். பின்னர், முழுவதும் தமிழ் என்று மாறிய பின்னர் என்னுடைய எங்கேயும் எப்போதும் வலைப்பூ படிக்கும் எல்லோருக்கும் சுவாரசியமாக இருக்க வேண்டும் என விரும்பினேன். தொடர்ந்து எழுத முடியவில்லை என்றாலும் அவ்வப்பொழுது எழுதி வருகிறேன்.  என்னுடைய மனம் கவர்ந்த பதிவுகளையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தில் பல பதிவுகளை பகிர்ந்து வருகிறேன். என்னைப்பொறுத்த வரை எவ்வளவு பேர் நம்முடைய வலைப்பூவுக்கு வருகை தருகிறார்கள் என்பது முக்கியமல்ல. அது எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது, எவ்வளவு தூரம் ரசிக்கப்படுகிறது என்பதே முக்கியம்.  இதோ அப்படிப்பட்ட ஒரு வித்தியாச
விநாயகர் சதுர்த்தி - பிள்ளையாருக்கு  வணக்கம் சொல்லி அவருடைய பெருமையை அறிந்துகொள்வோம்  ஆனைமுகத்தான் விநாயகருக்கு ஆறுபடைவீட்டுக் கோவில்கள் இருக்கின்றன. முதல் படைவீடு திருவண்ணாமலை. கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு பெயர் பெற்ற இங்கு, "அல்லம் போக்கும் விநாயகர்' வீற்றிருக்கிறார். வணங்குபவர்களின் அல்லலைக் களைவதில் இவர் நிகரற்றவராகத் திகழ்கிறார் இரண்டாம் படைவீடாக இருப்பது விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில். காசிக்குச் சமமாகத் திகழும் இக்கோவிலில் "ஆழத்துப்பிள்ளையார்' என்ற பெயரில் இவர் காட்சி தருகிறார். பெயருக்கேற்ப பள்ளத்திற்குள் படியிறங்கி இவரைத் தரிசனம் செய்ய வேண்டும். (காளஹஸ்தியிலும் இவ்வாறு ஒரு சந்நிதி உள்ளது) தனியாக கொடிமரம் இவருக்கு அமைந்திருப்பதும் தனிச்சிறப்பு. இவரை வழிபாடு செய்தபின் படியேறி மேலேறுவது போல், வாழ்வில் மேன்மைகளைத் தந்தருள்பவர் இப்பெருமான். மூன்றாவது படைவீடு திருக்கடையூர் அபிராமி கோவில். இங்கு "கள்ளவாரணப்பிள்ளையார்' என்ற திருநாமம் கொண்டுள் ளார். இவரை வழிபடுவோர் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று மகிழ்வர். அபிராமிப்பட்டர