Skip to main content

Posts

Showing posts from May, 2013

பின்னணியில் முன்னணி சாதனை புரிந்த டி .எம்.எஸ் மறைவு

துகுலுவ மீனாட்சி ஐயங்கார் சௌந்தரராஜன் (T.M.S) மதுரையில் 1923 ம் வருடம் பிறந்தவர்.

வேண்டாம் இந்த ஐ.பி.எல்.! - தினமணி நாளிதழின் இணைய தளத்தில் 17 மே அன்று வெளியான கட்டுரை

  இந்தியன் பிரீமியர் லீக்' (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டியில் "ஸ்பாட் பிக்ஸிங்' செய்ததாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 பேர் தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், ஐ.பி.எல். விளையாட்டுப் போட்டிகள் தடை செய்யப்பட வேண்டிய நேரம் வந்தாகிவிட்டது என்பதைத்தான் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.  இந்த நிகழ்வுகளுக்கு அடிப்படைக் காரணம், கிரிக்கெட் ஒரு மிகப்பெரும் வர்த்தகமாக மாற்றப்பட்டிருப்பதுதான் என்பதையும், அளவுக்கு அதிகமான லாபம் கொழிக்கும் வியாபாரத்தில் முறைகேடுகளும் அதிகமாக மண்டிக்கிடக்கும் என்பதையும் புரிந்துகொண்டால், கிரிக்கெட் ரசிகர்களே இந்த ஐ.பி.எல். விளையாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்புவார்கள். "டுவிட்டர்', "பேஸ்-புக்' போன்ற சமூக வலைத்தளங்களில் இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் பலரும் கேட்கும் கேள்விகள் நியாயமானவை. ஐ.பி.எல். விளையாட்டில் பங்குபெறும் அணியின் முதலாளிகள் தங்களுக்குள் பேசி முடித்து "மேட்ச் பிக்ஸிங்' செய்வதே கிடையாதா? அது குற்றமில்லையா? என்று நாம் கேட்கவில்லை, டுவிட்டரி

இளம் எழுத்தாளார்களின் முன்னோடியாக, வழிகாட்டியாக இருந்த எழுத்தாளர் சுஜாதா !!

மே மாதம் 3-ம் தேதி மறைந்த மாபெரும் எழுத்தாளார் சுஜாதாவின் 78-ம் பிறந்த நாள். சென்னை : "புதிதாக எழுத துவங்கிய பெரும்பாலான இளம் எழுத்தாளர்களுக்கு, எழுத்தாளர், சுஜாதா முன்னோடியாக விளங்கினார். அவர்களை ஊக்கப்படுத்தி, மேலும் எழுதுவதற்கு தூண்டுகோலாக அமைந்தார்,'' என, "உயிர்மை' இதழின் ஆசிரியர், மனுஷ்யபுத்திரன் கூறினார். உயிர்மை பதிப்பகமும், சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும், "சுஜாதா விருதுகள்' வழங்கும் விழா, அண்ணா சாலையில் உள்ள, "புக் பாயின்ட்' அரங்கத்தில் நடந்தது. "உயிர்மை' இதழின் ஆசிரியர், மனுஷ்ய புத்திரன் வரவேற்புரை ஆற்றினார்.  சுஜாதா விருதுகள் 2013 நிகழ்ச்சி  பாரதி கிருஷ்ணகுமார், பாரதிமணி, கலாப்ரியா, அழகிய பெரியவன், அ.முத்துகிருஷ்ணன், ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், அஜயன் பாலா எழுதிய, "அஜயன்பாலா சிறுகதைகள்' புத்தகத்துக்கு, சிறுகதை விருது; தமிழ்மகன் எழுதிய, "வனசாட்சி'க்கு, நாவல் விருது; மனோ.மோகன் எழுதிய, "பைத்தியக்காரியின் பட்டாம்பூச்சி'க்கு, கவிதை விருது; பிரபாகரன் எழ