Skip to main content

இளம் எழுத்தாளார்களின் முன்னோடியாக, வழிகாட்டியாக இருந்த எழுத்தாளர் சுஜாதா !!


மே மாதம் 3-ம் தேதி மறைந்த மாபெரும் எழுத்தாளார் சுஜாதாவின் 78-ம் பிறந்த நாள்.


சென்னை : "புதிதாக எழுத துவங்கிய பெரும்பாலான இளம் எழுத்தாளர்களுக்கு, எழுத்தாளர், சுஜாதா முன்னோடியாக விளங்கினார். அவர்களை ஊக்கப்படுத்தி, மேலும் எழுதுவதற்கு தூண்டுகோலாக அமைந்தார்,'' என, "உயிர்மை' இதழின் ஆசிரியர், மனுஷ்யபுத்திரன் கூறினார்.
உயிர்மை பதிப்பகமும், சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும், "சுஜாதா விருதுகள்' வழங்கும் விழா, அண்ணா சாலையில் உள்ள, "புக் பாயின்ட்' அரங்கத்தில் நடந்தது. "உயிர்மை' இதழின் ஆசிரியர், மனுஷ்ய புத்திரன் வரவேற்புரை ஆற்றினார். 

சுஜாதா விருதுகள் 2013 நிகழ்ச்சி 
பாரதி கிருஷ்ணகுமார், பாரதிமணி, கலாப்ரியா, அழகிய பெரியவன், அ.முத்துகிருஷ்ணன், ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், அஜயன் பாலா எழுதிய, "அஜயன்பாலா சிறுகதைகள்' புத்தகத்துக்கு, சிறுகதை விருது; தமிழ்மகன் எழுதிய, "வனசாட்சி'க்கு, நாவல் விருது; மனோ.மோகன் எழுதிய, "பைத்தியக்காரியின் பட்டாம்பூச்சி'க்கு, கவிதை விருது; பிரபாகரன் எழுதிய, "குமரி கண்டமா சுமேரியமா'வுக்கும், ராஜு முருகன் எழுதிய, "வட்டியும் முதலும்'க்கும், உரைநடை விருது; ஞானசேகரன் எழுதிய, "ஞானம்' புத்தகத்துக்கும், பாண்டியனின், "கருக்கல்' நாவலுக்கும், சிற்றிழ் விருது; மணிகண்டனின், http://www.nisaptham.com இணையதளத்துக்கு, இணைய விருதும் வழங்கப்பட்டன. விருதுகளை, மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி, சுஜாதா ரங்கராஜனும், "உயிர்மை' இதழின் ஆசிரியர், மனுஷ்யபுத்திரனும் வழங்கினர். விருதாளர்களுக்கு, 10 ஆயிரம் , பொற்கிழியும், கேடயமும் வழங்கப்பட்டன. எழுத்தாளர்கள் பேசியதாவது: 

"உயிர்மை' மனுஷ்யபுத்திரன்: புதிதாக எழுத துவங்கிய பெரும்பாலான இளம் எழுத்தாளர்களுக்கு, சுஜாதா முன்னோடியாக விளங்கினார். அவர்களை ஊக்கப்படுத்தி, மேலும் எழுதுவதற்கு தூண்டுகோலாக அமைந்தார். அவரால் பாராட்டப்பட்டு, வெளிச்சத்திற்கு வந்த பெரும்பாலான இளைஞர்களில், நானும் ஒருவன். அதனால், அவர் பெயரில் வழங்கப்படும் விருது முக்கியமானது. தமிழின் அனைத்து தளங்களிலும் இயங்கிய ஒரே எழுத்தாளர், சுஜாதா.

ஆய்வாளர், பிரபாகரன்: அறிவியலின் அடிப்படையில், பார்த்தால், தமிழர்கள், தமிழகத்தில் வாழ்ந்தவர்கள் அல்ல; குமரிக் கண்டம் அவர்களின் பூர்வீக மண் அல்ல; பல்வேறு தரவுகளின் படி, ஆய்வு செய்தால், தமிழர்களின் தாயகம், ஈராக். கோவையில் நடந்த, செம்மொழி மாநாட்டில், இது குறித்து கட்டுரை வாசித்த போது, அனைவரும், என்னை "தமிழின துரோகி' என்றனர். அவர்களுக்கு, பதில் அளிக்கவே, இந்நூலை எழுதினேன். தற்போது, இப்புத்தகம் விருது பெற்றிருப்பதன் மூலம், இப்பிரச்னை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

விமர்சகர், பாரதி கிருஷ்ணகுமார்: தமிழ் எழுத்தாளர்களில், சங்ககால இலக்கியம் தெரிந்தவர்களுக்கு, நவீன இலக்கியம் தெரிவதில்லை; நவீன இலக்கியம் தெரிந்தவர்களுக்கு, சங்ககால இலக்கியம் தெரிவதில்லை. ஆனால், இரண்டு இலக்கியத் தரப்புக்கும் பாலமாக, சுஜாதா செயல்பட்டார். இரண்டு தரப்பையும் தெரிந்திருந்ததால், இரண்டு தரப்பினரும் சுஜாதாவை விமர்சித்து வந்தனர். இருந்தாலும், எல்லோருக்கும் பொதுவான இலக்கியத்தை சுஜாதா படைத்தார்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

நன்றி: தினமலர் இணைய தளம் 

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...