Skip to main content

இளம் எழுத்தாளார்களின் முன்னோடியாக, வழிகாட்டியாக இருந்த எழுத்தாளர் சுஜாதா !!


மே மாதம் 3-ம் தேதி மறைந்த மாபெரும் எழுத்தாளார் சுஜாதாவின் 78-ம் பிறந்த நாள்.


சென்னை : "புதிதாக எழுத துவங்கிய பெரும்பாலான இளம் எழுத்தாளர்களுக்கு, எழுத்தாளர், சுஜாதா முன்னோடியாக விளங்கினார். அவர்களை ஊக்கப்படுத்தி, மேலும் எழுதுவதற்கு தூண்டுகோலாக அமைந்தார்,'' என, "உயிர்மை' இதழின் ஆசிரியர், மனுஷ்யபுத்திரன் கூறினார்.
உயிர்மை பதிப்பகமும், சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும், "சுஜாதா விருதுகள்' வழங்கும் விழா, அண்ணா சாலையில் உள்ள, "புக் பாயின்ட்' அரங்கத்தில் நடந்தது. "உயிர்மை' இதழின் ஆசிரியர், மனுஷ்ய புத்திரன் வரவேற்புரை ஆற்றினார். 

சுஜாதா விருதுகள் 2013 நிகழ்ச்சி 
பாரதி கிருஷ்ணகுமார், பாரதிமணி, கலாப்ரியா, அழகிய பெரியவன், அ.முத்துகிருஷ்ணன், ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், அஜயன் பாலா எழுதிய, "அஜயன்பாலா சிறுகதைகள்' புத்தகத்துக்கு, சிறுகதை விருது; தமிழ்மகன் எழுதிய, "வனசாட்சி'க்கு, நாவல் விருது; மனோ.மோகன் எழுதிய, "பைத்தியக்காரியின் பட்டாம்பூச்சி'க்கு, கவிதை விருது; பிரபாகரன் எழுதிய, "குமரி கண்டமா சுமேரியமா'வுக்கும், ராஜு முருகன் எழுதிய, "வட்டியும் முதலும்'க்கும், உரைநடை விருது; ஞானசேகரன் எழுதிய, "ஞானம்' புத்தகத்துக்கும், பாண்டியனின், "கருக்கல்' நாவலுக்கும், சிற்றிழ் விருது; மணிகண்டனின், http://www.nisaptham.com இணையதளத்துக்கு, இணைய விருதும் வழங்கப்பட்டன. விருதுகளை, மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி, சுஜாதா ரங்கராஜனும், "உயிர்மை' இதழின் ஆசிரியர், மனுஷ்யபுத்திரனும் வழங்கினர். விருதாளர்களுக்கு, 10 ஆயிரம் , பொற்கிழியும், கேடயமும் வழங்கப்பட்டன. எழுத்தாளர்கள் பேசியதாவது: 

"உயிர்மை' மனுஷ்யபுத்திரன்: புதிதாக எழுத துவங்கிய பெரும்பாலான இளம் எழுத்தாளர்களுக்கு, சுஜாதா முன்னோடியாக விளங்கினார். அவர்களை ஊக்கப்படுத்தி, மேலும் எழுதுவதற்கு தூண்டுகோலாக அமைந்தார். அவரால் பாராட்டப்பட்டு, வெளிச்சத்திற்கு வந்த பெரும்பாலான இளைஞர்களில், நானும் ஒருவன். அதனால், அவர் பெயரில் வழங்கப்படும் விருது முக்கியமானது. தமிழின் அனைத்து தளங்களிலும் இயங்கிய ஒரே எழுத்தாளர், சுஜாதா.

ஆய்வாளர், பிரபாகரன்: அறிவியலின் அடிப்படையில், பார்த்தால், தமிழர்கள், தமிழகத்தில் வாழ்ந்தவர்கள் அல்ல; குமரிக் கண்டம் அவர்களின் பூர்வீக மண் அல்ல; பல்வேறு தரவுகளின் படி, ஆய்வு செய்தால், தமிழர்களின் தாயகம், ஈராக். கோவையில் நடந்த, செம்மொழி மாநாட்டில், இது குறித்து கட்டுரை வாசித்த போது, அனைவரும், என்னை "தமிழின துரோகி' என்றனர். அவர்களுக்கு, பதில் அளிக்கவே, இந்நூலை எழுதினேன். தற்போது, இப்புத்தகம் விருது பெற்றிருப்பதன் மூலம், இப்பிரச்னை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

விமர்சகர், பாரதி கிருஷ்ணகுமார்: தமிழ் எழுத்தாளர்களில், சங்ககால இலக்கியம் தெரிந்தவர்களுக்கு, நவீன இலக்கியம் தெரிவதில்லை; நவீன இலக்கியம் தெரிந்தவர்களுக்கு, சங்ககால இலக்கியம் தெரிவதில்லை. ஆனால், இரண்டு இலக்கியத் தரப்புக்கும் பாலமாக, சுஜாதா செயல்பட்டார். இரண்டு தரப்பையும் தெரிந்திருந்ததால், இரண்டு தரப்பினரும் சுஜாதாவை விமர்சித்து வந்தனர். இருந்தாலும், எல்லோருக்கும் பொதுவான இலக்கியத்தை சுஜாதா படைத்தார்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

நன்றி: தினமலர் இணைய தளம் 

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்