Skip to main content

Posts

Showing posts from December, 2007

மறக்க முடியாத சந்திப்பு

என்னுடைய வேண்டுகோளை ஏற்று குடும்பத்துடன் இன்று (30/12/07) Hotel Breeze க்கு வருகை தந்த நம் "ரம்யா" நண்பர்கள் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றி. ஷங்கர் வர முடியாத காரணத்தால் என் சிங்கப்பூர் பயணத்தின் போது ரவி மற்றும் ஷங்கர் குடும்பத்துடன் ஒரு மாலைப் பொழுது "ராஜ்" என்ற பெங்காலி ரெஸ்டாரன்ட்டில் 24 Dec அன்று நன்றாக கழிந்தது. பிறகு இன்று Breeze Hotel களைகட்டியது. குமார், செழியன், பாண்டியன் மற்றும் முருகன் தவிர்க்க முடியாத காரணங்களால் வரமுடியாமல் போனது வருத்தம் என்றாலும், மற்ற அனைவரும் வந்து சேர்ந்தது ஒரு மிக மகிழ்ச்சியான விஷயம். நம்முடைய மனைவியர் நிறைய பேர் ஒருவருடன் ஒருவர் அறிமுகமே இல்லாமல் இருந்தாலும் எந்தவித பந்தாவும் இல்லாமல் உடனே பழக ஆரம்பித்தது மிகவும் ஒரு நல்ல விஷயம். குழந்தைகளும் அப்படியே. ஸ்ரீதர் நேற்று என்னுடன் அலைபேசி மூலம் குறுஞ்செய்தி (SMS) அனுப்பி மும்பையில் இருப்பதாகவும் முடிந்தால் கலந்து கொள்வதாக சொல்லி இருந்ததால் என்னுடைய எதிர்பார்ப்பு குறைவாகவே இருந்தது. பிறகு ஒரு sweet surprise ஆக அவன் குடும்பத்துடன் கலந்து கொண்டான். குஞ்சிதபாதம், Berger ரவி,

Berger ரவியும், பிள்ளையாரும்

என்னுடைய பெசன்ட் நகர் office building owner சமீபத்தில் தொலை பேசி, "நண்பரே, என் வீட்டில் ஒரு பஜன் ஒன்றுக்கு யாராவது நல்ல பிரசங்கி (பேச்சாளர்) ஒருவரை ஏற்பாடு செய்ய முடியுமா, அவர் ஒரு பக்திமயமான topic பற்றி ஒரு கால் மணி நேரம் பேச வேண்டும் " என்றார். நான், "ஐயா, நான் event manager தானே தவிர பஜன் manager அல்ல," என்று மறுத்து விட்டேன். பிறகு தீடீரென நம் ரவி ஞாபகம் வந்ததது. உடனே அவனுக்கு விஷயத்தைச் சொன்னேன். ஆரம்பத்தில் மறுத்தவன் , பிறகு சம்மதித்தான். நேற்று (15/12) மாலை, என் office building owner வீட்டில் ஜகஜ்ஜோதியாக "தடைகளை அகற்றும் பிள்ளையார் (Vinayaka-Vigna Vinasaka) " என்ற பெயரில் ஒரு அட்டகாசமான உரை நிகழ்த்தி அசத்திவிட்டான். ரவியின் பக்திமயமான பேச்சை பலபேர் புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். ஒரு விஷயம்: அங்கு வந்த கூட்டம் ஒன்றும் பெருமாள் கோவிலில் புளியோதரை வாங்கி தின்னும் கூட்டம் இல்லை. எல்லோருமே மிக, மிக நல்ல பதவிகளில் இருக்கும் IAS, IFS, Consulate, Foreign Trade ஆசாமிகள். ரவிக்கு என் பிரத்யேக நன்றி (special thanks). காலப் போக்கில் மாற்றங்

2008 ம் ஆண்டை குடும்பத்துடன் வரவேற்போம்

புது வருடம் பிறக்கும் முன் எல்லோரும் குடும்பத்துடன் சந்திக்கும் ஒரு நல்ல நிகழ்ச்சி நடந்தேற எல்லாம் வல்ல வல்லக்கோட்டை முருகனைப் பிரார்த்திக்கிறேன். இது என் ஆறு வருட கனவு. 1998 இல் சென்னை மாற்றலாகி வந்தபின் நான் அடிக்கடி சந்தித்த மூன்று பேர் சாயீ, Berger ரவி, மற்றும், நல்லவரெல்லாம் சீக்கிரமே இறைவனிடம் போய்விடுவார்கள் என்ற கூற்றை உண்மையாக்கிய, முகுந்தும்தான். பிறகு மெதுவாக ஷங்கர், குஞ்சிலி, முருகன் என்று மறுபடியும் வட்டம் பெரிதானாலும் அடிக்கடி சந்திப்பது என்பது மிக, மிக அரிதாகவே நடந்தது. பிறகு மெதுவாக ஷங்கர் பெங்களூர் சென்றதும், சேகர் மற்றும் குமாரை எதேச்சையாக ரவி ஒரு நாள் சந்தித்ததும், ராஜ்குமாருடன் மறுபடி தொலை தொடர்பு ஏற்பட்டதும், செழியனை அவன் அலுவகத்தில் சந்தித்ததும்(நீ வயசான மாதிரி ஆயிட்ட, ஆனா திடீர்னு எப்படி கடலூர்ல இருந்ததைவிட tall ஆயிட்ட? போன்ற செழியனின் கேள்விகளுக்கு என்னால் அப்போது பதில் சொல்ல முடியவில்லை), கோபாலபுரத்தில் ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறிய போது, அருகில் சென்ற காரில் இருந்து சாம்பா திடீரென வெளிப்பட்டது ஒரு ஆச்சர்யமான சம்பவம் என்றால், அவன் சொல்லாமல் கொள்ளாமல் டெல்லி

ஐஸ்வர்யராயும் அதகளமும்

சமீபத்தில் சாயீ ரொம்பவும் புலம்பி தனி மெயில் ஐடி க்ரியேட் பண்ணி அனுப்பியதன் பின்னணியில் நான் இருப்பதால் இந்த special blog. நாமெல்லாம் சில நாட்களுக்கு முன் சந்தித்துக்கொண்டபோது நம் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க நான் ஐஸ்வர்யராயின் பிறந்த நாள் படத்தை அனுப்பினேன். நான் அதற்குமுன் பலமுறை சொல்லியும் நண்பன் சாயீ தனி ஐடி க்ரியேட் செய்யாத காரணத்தால் அவனுடைய office id க்கு அந்த மெயில் போய்விட்டது. இப்போது அதன் காரணமாக சாயீ சூட்டோடு சூடாக தனி மெயில் ஐடி க்ரியேட் செய்து அனுப்பியதற்கு நான் தமிழில் அனுப்பிய பதில் நிறைய பேரால் படிக்க முடியாமல் போனதால் இதோ அந்த பதில்: என்ன சாயீ, சும்மா அதிருதுல்ல, நீ பர்சனல் ஐடி மாத்தணும்தானே ஐஸ்வர்யா ராய் படத்தப் போட்டு தாக்கினது. இப்போ மரியாதையா நீயே ஐடி மாத்திட்டல்ல? ஹா ஹா ஹா. மக்களா, மெயில் அனுப்பிச்சா பாத்துட்டு ரிப்ளை பண்ணாம இருந்தா இதுதாண்டி கதி (ச்சும்மா மதுர பாஷைல போட்டுத் தாக்குரோம்ல?) ஸாரிமா சாயீ, எதாவது குழப்பம் ஆயிடுச்சா? குஞ்சிலி, காலா காலத்தில நீயும் தனி மெயில் ஐடி க்ரியேட் பண்ணிக்கோ! உன்னுடைய office id க்கு அனுப்ப பயமா இருக்கு.