Skip to main content

Posts

Showing posts from March, 2011

இந்தியா பாகிஸ்தானை மண் கவ்வச் செய்தது!

ஒரு அட்டகாசமான அரையிறுதி ஆட்டம் முடிந்தது. இதற்கு முன் இலங்கை-நியூசிலாந்து இடையே நடந்த போட்டியைப் போல இந்தப் போட்டி உப்புசப்பு இல்லாத ஆட்டமாக இல்லாதது ஒரு பெரிய ஆறுதல். சச்சின், சேவாக், சுரேஷ் ரைனா ஆகியோர் மிக அற்புதமாக விளயாடி இந்தியாவின் ஸ்கோரை 260 ரன்களுக்கு உயர்த்த உதவி செய்தனர் என்பதை மறுக்க முடியாது என்றாலும், நம்முடைய பௌலர்கள் ஐவரும் ஆளுக்கு தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்தார்கள். பாகிஸ்தான் அணியின் கேப்டன் அப்ரிதி ஆரம்பம் முதல் மிகவும் மிதப்பாகவே இருந்தது போல எனக்கு தோன்றியது. பாகிஸ்தான் அணி இதற்கு முன் நம்முடன் மோதிய எந்த உலகக்கோப்பை போட்டியிலும் வென்றதில்லை என்பதை மறந்துவிட்டு எதோ இந்தியாவை ஏற்கனவே தோற்கடித்துவிட்ட மாதிரி ரொம்பவும் தெனாவெட்டாக இருந்ததாலோ என்னவோ போட்டியில் அசிங்கமாகத் தோற்க நேர்ந்தது என நினைக்கிறேன். உலககோப்பை இறுதி போட்டிக்கு செல்லும் இந்தியாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இங்கு சில நெருடலான விஷயங்களையும் சொல்ல வேண்டும். பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் விராத் கோலி இன்னமும் நம் அணியில் இருக்க வேண்டுமா? தோனி

நிஷ்களங் மகாதேவ்: கடல் நடுவே ஒரு சிவன் கோயில். கடல் உள்வாங்கும் ஒரு அதிசயம்!

நிஷ்களங் மகாதேவ் கோயில்-கடற்கரையில் இருந்து  கடல் உள்வாங்கிய பிறகு -கோயிலின் தோற்றம்  கடல் நடுவே இருக்கும் சிவனுக்கு ஆராதனை சமீபத்தில் சன் டி.வியில் ஒளிபரப்பட்டு மிகப் பிரபலமடைந்த கடல் கோயில்  நிகழ்ச்சியை பார்க்கவில்லையா என என் நண்பர் ஒருவர் கேட்டபோது, இன்டர்நெட் துணை இருக்கும்போது என்ன கவலை என்று நினைத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியையும், அதன் பின்புல தகவல்களையும் தேடிய போது பல ஆச்சரியமான விஷயங்களை சந்திக்க முடிந்தது. குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் கொலியாக் என்ற இடத்தில் இருக்கும் இந்த அற்புதமான கோயிலைப் பற்றி: கொலியாக் பாவ்நகரில் இருந்து 23 கி.மீ. கிழக்கில் இருக்கிறது. அரபிக் கடலின் ஓரத்தில் இருக்கும் இந்த சின்ன கிராமத்தில் மாதம் ஒருமுறை  இந்த அற்புதம் நிகழ்கிறது.  இங்கு கடல் நடுவே ஒரு கொடிக் கம்பமும், ஒரு கல் தூணும் மிகத் தொலைவிலிருந்தே தெரிகின்றன. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு அடுத்த நாள் காலை கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் கூடுகிறது.  காலை சுமார் 9  மணிக்கு மேல் மெதுவாக கடல் உள்வாங்குகிறது. கொஞ்சம், கொஞ்சமாக கல் தூண் மற்றும் கொடிக்கம்பம் தெளிவாகத் தெரிவதுடன், ஒ

தோல்வியில் முடிந்த நேற்றைய மேட்ச் - ஒரு ஆத்திர அலசல்

 நேற்று நாக்பூரில் நடந்த மேட்சில் நம் அணி அசிங்கமாக தோல்வியைச் சந்தித்ததைப் பற்றி விவரமாகக் கூறி உங்களை மேலும் நொந்து போகவைப்பதில் எனக்கு விருப்பமில்லை என்றாலும், மிக அற்புதமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு மேட்சை, சேவாக், சச்சின், கம்பீர் ஆகியோர் கஷ்டப்பட்டு சேர்த்த ரன்களை கொஞ்சமும் யோசிக்காமல் வீணடித்த நம் அணியின் சில வீரர்களைப் (?) பற்றி என்னுடைய கருத்துக்களை உங்களுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். சேவக் அதிரடியாக ஆரம்பித்து வைத்ததை, சச்சின் அதே வேகத்தில் நிலை நிறுத்தினார். கம்பீர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். 40 வது ஓவரில் 260 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற அருமையான நிலையிலிருந்து பிறகு வந்த சோம்பேறிகளான பதான், விராத் கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் கொஞ்சம்கூட பொறுப்பில்லாமல் விளையாடி அடுத்தடுத்து அவுட்டாகி, 48.4 ஓவர்களின் முடிவில் 296 ரன்களுக்கு நம் அணி மொத்தமாக ஆட்டம் இழந்த கொடுமையை நாம் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தோம்.  இதைவிட கேனத்தனமாக விளையாட வேறு யாராலும் முடியாது. சரி, நம்முடைய பேட்டிங் ஆர்டர் சொதப்பிவிட்டது அடுத்ததாக பெளலிங்கில் சமன் செய்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ம

கட்டாயம் உட்கொள்ள வேண்டிய 10 உணவுகள்

உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.  வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது. வெங்காயம்: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந

உலக நாயகன் கமல்ஹாசனின் படத்துக்கு கதை எழுதிய பிரபல மர்மக்கதை எழுத்தாளரின் மர்மான மரணம்

   ராபர்ட் லுட்லம் (1927 - 2001) ஒரு மிகப் புகழ்பெற்ற மர்மக் கதை எழுத்தாளர். இவருடைய புத்தகங்கள் இதுவரை 290 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம் என்பது உங்களுக்குத் தெரியும்) என்ற கணக்கில் விற்றிருக்கின்றன. அமெரிக்காவில் ஒரு சாதாரணமான குடும்பத்தில் பிறந்த இவர், முதலில் அமெரிக்கக் கப்பற்படையில் பணியாற்றி இருக்கிறார். பின்னர், நாடகங்களின் மேல் உள்ள காதலால் பல்வேறு நாடகங்களை தயாரித்து, இயக்கி, நடித்தும் இருக்கிறார்.  1971 ம் இவர் எழுதி வெளிவந்த முதல் நாவல் தி ஸ்கார்லெட்டி இன்ஹெரிட்டன்ஸ் (The Scarletti Inheritance) வெறும் 75000 காப்பிகள் மட்டுமே விற்றது. பிறகு வெளிவந்த பல நாவல்கள் ஓரளவு வெற்றிபெற்றன என்றாலும், 1980 ல் இவர் எழுதி வெளிவந்த தி போர்ன் ஐடென்டிடி (The Bourne Identity ) மிகப் பெரிய வெற்றி பெற்றது. நம்மூர் பிரதாப் போத்தன் உடனே இதை சுட்டு 'வெள்ளி விழா" என்ற பெயரில் படமாக எடுத்து, உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபு ஆகியோர் நடிக்க, வெளியிட்டார். இசைஞானி இளையராஜாவின் இசையில் இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களும் மிகப் பிரபலமாகின. படமும் வெற்றிப் படமாக அமைந்தது.  இத

ஆஸ்கர் பரிசளிப்பு விழா - வெற்றி பெற்ற படங்கள்

தி ஃ பைட்டர்  (The Fighter) - திரைப்பட விமர்சனம் பாக்சிங் எனப்படும் குத்துச் சண்டை போட்டிகளை மையமாக வைத்து ரேஜிங் புல் (Raging Bull ), ராக்கி (Rocky ), தி மில்லியன் டாலர் பேபி (The Million Dollar Baby ), அலி (Ali ) போல நிறைய படங்கள் வந்து விட்டன. இதில் அலி போன்ற படங்கள் "பயோ-பிக்" (Bio - pic ) என்ற வகையைச் சார்ந்தவை. அதாவது ஒரு பிரபலத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள படம் தி ஃ பைட்டர்  (The Fighter).  குத்துச் சண்டை போட்டிகளில் ஹெவி வெயிட், லைட் ஹெவி வெயிட், மிடில் வெயிட், வெல்டர் வெயிட் (Welter weight ) என்று பல வகைகள் உண்டு.  இந்தப் போட்டிகளில் பங்குபெறும் போட்டியாளர்களின் உடல் கனம் (வெயிட்) அந்தந்த போட்டிகளுக்கு ஏற்றவாறு மாறும்.  ராக்கி, அலி போன்ற படங்கள் ஹெவி வெயிட் போட்டியாளர்களைப் பற்றிய படங்கள், தி ஃ பைட்டர் வெல்டர் வெயிட் போட்டியாளரை முன் வைத்து எடுத்த படம். வசூலில் மட்டுமல்லாது, சிறந்த திரைப்படம் என பல்வேறு குத்துச் சண்டை வல்லுனர்களும் பாராட்டிய படம் இது.

"டை" யில் முடிந்த இந்திய-இங்கிலாந்து போட்டி - அலசல் ரிப்போர்ட்

  நல்ல வேளை, தோற்கவில்லை மேட்ச் டையில் முடிந்தது என்று சமாதானம் சொல்லிக்கொண்டாலும், இந்த மேட்சில் சுலபமாக இந்திய அணி வெற்றி பெற்றிருக்க முடியும் என்பதே என் கருத்து. முதலில் மேட்சில் நமக்கு சாதகமாக நடந்த விஷயங்களை அலசி விடுவோம்: சச்சின்- தொடரும் சாதனைகள்! சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ரன், அதிக சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், உலக கோப்பை அரங்கிலும் பல சாதனைகள் படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், 115 பந்தில் 120 ரன்கள் (5 சிக்சர், 10 பவுண்டரி) எடுத்த சச்சின், உலக கோப்பை வரலாற்றில் அதிக சதம் (5) கடந்து புதிய உலக சாதனை படைத்தார். இதுவரை இவர், 38 போட்டியில் பங்கேற்று 5 சதம், 13 அரைசதம் உட்பட 1944 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் கங்குலி, ஆஸ்திரேலியாவின் குரங்கு பாண்டிங், மார்க் வா உள்ளிட்டோர் தலா 4 சதம் அடித்து 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.   சச்சின், உலக கோப்பை அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை இலங்கையின் ஜெயசூர்யா, பாகிஸ்தானின் வாசிம் அக