Skip to main content

உலக நாயகன் கமல்ஹாசனின் படத்துக்கு கதை எழுதிய பிரபல மர்மக்கதை எழுத்தாளரின் மர்மான மரணம்

 



 ராபர்ட் லுட்லம் (1927 - 2001) ஒரு மிகப் புகழ்பெற்ற மர்மக் கதை எழுத்தாளர். இவருடைய புத்தகங்கள் இதுவரை 290 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம் என்பது உங்களுக்குத் தெரியும்) என்ற கணக்கில் விற்றிருக்கின்றன. அமெரிக்காவில் ஒரு சாதாரணமான குடும்பத்தில் பிறந்த இவர், முதலில் அமெரிக்கக் கப்பற்படையில் பணியாற்றி இருக்கிறார். பின்னர், நாடகங்களின் மேல் உள்ள காதலால் பல்வேறு நாடகங்களை தயாரித்து, இயக்கி, நடித்தும் இருக்கிறார். 

1971 ம் இவர் எழுதி வெளிவந்த முதல் நாவல் தி ஸ்கார்லெட்டி இன்ஹெரிட்டன்ஸ் (The Scarletti Inheritance) வெறும் 75000 காப்பிகள் மட்டுமே விற்றது. பிறகு வெளிவந்த பல நாவல்கள் ஓரளவு வெற்றிபெற்றன என்றாலும், 1980 ல் இவர் எழுதி வெளிவந்த தி போர்ன் ஐடென்டிடி (The Bourne Identity ) மிகப் பெரிய வெற்றி பெற்றது. நம்மூர் பிரதாப் போத்தன் உடனே இதை சுட்டு 'வெள்ளி விழா" என்ற பெயரில் படமாக எடுத்து, உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபு ஆகியோர் நடிக்க, வெளியிட்டார். இசைஞானி இளையராஜாவின் இசையில் இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களும் மிகப் பிரபலமாகின. படமும் வெற்றிப் படமாக அமைந்தது. 

இதே நாவல்  ஹாலிவுட்டில் திரைப் படமாக 2002 ல் வந்து மிகப் பெரும் வெற்றி பெற்றதைப் பார்த்து ஆனந்தப்பட லுட்லம் உயிருடன் இல்லை.

இந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து அவர் எழுதிய எல்லா புத்தகங்களும் பெரும் வெற்றி பெற்றன. பல புத்தகங்கள் திரைப் படங்களாகவும் வெளிவந்தன. இவருடைய சான்செலர் மானுஸ்க்ரிப்ட் (The  Chancellor Manuscript ) என்ற நாவல் பிரபல நடிகர் டி காபிரோ நடிப்பில் இந்த வருடம் வெளிவருகிறது. மற்றொரு நாவல், தி மாடரீஸ் சர்கில் (The Matarese Circle ) பிரபல நடிகர்கள் டாம் க்ரூஸ் மற்றும் டென்ஸல் வாஷிங்டன் ஆகியோர் நடித்து 2013 ல் வெளிவரப்போகிறது.

1994 ல் உடல்நலம் மிகவும் மோசமாகி நான்கு முறை இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டபின், தீவிர கால் வலி காரணமாக லுட்லம் நடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். அப்படியும் எழுதுவதை அவர் நிறுத்தவில்லை.

ஜனவரி 24 , 2001 ம் ஆண்டு இவருடைய பெரும்பாலான சொத்துக்களை இவருடைய இரண்டாம் மனைவியான கேரன் டன் (Karen Dunn ) பேருக்கு எழுதிவைத்தார். இது நடந்து சரியாக 13 நாட்களுக்குப் பின், பிப்ரவரி 10 , 2001 ம் ஆண்டில் இவருடைய வீட்டில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. சரிவர நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்த லுட்லம் இதில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

இந்த தீ விபத்தில் மோசமாக காயமடைந்து மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட லுட்லம், மறுபடியும் ஒரு மாரடைப்பு ஏற்பட்டு, மார்ச் 12 ,2001 ம் ஆண்டு காலமானார். அவருடைய மரணத்தின் உண்மையான காரணம் என்ன என்று தெரிந்துகொள்ள ஆட்டாப்ஸி (autopsy ) செய்யும் முன்னரே, அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.

அவர் இறந்தபோது அவருடைய மரணம் அவ்வளவாக சந்தேகிக்கப் படவில்லை என்றாலும், அவருடைய முதல் மனைவி மூலம் பிறந்த மகனும், மகளும் அவருடைய மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று தொடர்ந்து சொல்லிவந்தார்கள். இந்நிலையில், லுட்லம்மின் நெருங்கிய உறவினரான டாக்டர் கென்னத் மைக்கேல் என்பவர் லுட்லம் மரணத்தை பல்வேறு காவல் மற்றும் மருத்துவத்துறை நண்பர்களுடன் ஆராய்ந்து, இப்போது அதை ஒரு புத்தகமாக வரும் 12 ம் தேதியன்று வெளியிடப் போகிறார். இந்தப் புத்தகத்தின் பெயர்: தி லுட்லம் ஐடென்டிடி (The Ludlum Identity).

லுட்லம் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது அங்கிருந்த பல தீ அணைப்பு சாதனங்கள் ஏன் உபயோகிக்கப்படவில்லை, தீ அணைப்பு அதிகாரிகள் அங்கு வந்தபோது லுட்லம்மின் இரண்டாவது மனைவி, அவருக்கு உதவி ஏதும் செய்யாமல் போதையில் இருந்தது ஏன், லுட்லம் இறந்தபின் அவருடைய மரணத்தின் காரணத்தை ஆராயாமல் அவசர அவசரமாக ஏன் எரிக்க வேண்டும் என்பது போன்ற பல கேள்விக்களுக்குக்காண காரணங்களை ஆராய்கிறது இந்தப் புத்தகம்.

மர்மக் கதை மன்னனின் மரணத்தில் இப்படி ஒரு மர்மமா? இந்தப் புத்தகத்தை படித்த பின் அதைப் பற்றி எழுதுகிறேன்.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

'சுஜாதா - எழுத்தின் கோட்பாடு' - சுஜாதாவின் படைப்புகள் பற்றிய புதிய பார்வையில்  ஒரு புத்தகம் 

சுஜாதாவின் சுவாரஸ்யமான படைப்புகளில் 50 படைப்புகளைத் தேர்வு அவற்றைப் பற்றி என்னுடைய பார்வை ' சுஜாதா - எழுத்தின் கோட்பாடு ' என்ற பெயரில் புத்தகமாக விரைவில் வருகிறது. இந்தப் புத்தகத்தில் சுஜாதாவின் தேர்ந்தெடுத்த கதைகள் / நாடகங்கள் / திரைப்பட வசனங்கள் பற்றிய பார்வை மட்டுமே இருக்கும். சற்று வித்தியாசமாக, புத்தகத்தின் முகவுரையாக 'சுஜாதாவுடன் நான்' என்ற பெயரில் சுஜாதாவுடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்த சில பிரபலங்கள் தங்களுடைய அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். புத்தக வெளியீடு தேதி போன்ற விவரங்கள் இங்கு விரைவில் பகிர்ந்துகொள்ளப்படும். அச்சுப் புத்தகத்திற்கு என்றும் தீவிர ரசிகர்கள் இருப்பதால் அச்சுப் புத்தக விற்பனைக்கு மட்டும் முழுக்கட்டணத்துடன் முன் பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும். முன் பதிவு செய்பவர்களுக்கு வீட்டுக்கு Speed Post மூலம் புத்தகம் அனுப்பிவைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.