Skip to main content

Posts

Showing posts from December, 2010
This free digital greeting generated with Smilebox

BOUND-அருமையான த்ரில்லர்

சில நாட்களுக்கு முன் HBO சானலில் இந்தப் படம் காட்டப்பட்டபோது அவ்வளவாக எதிர்பார்ப்பு ஏதும் இன்று அதை காண முற்பட்டேன். அவ்வளவாக தெரியாத நடிகர்கள், படத்தின் பெயரை இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை. ஆனால், இயக்குனர்(கள்) யார் என்று தெரிந்தவுடன் நான் உற்சாகமாகிவிட்டேன். Matrix என்ற பெயரில் மூன்று பாகங்கள் எடுத்து பெரும் பரபரப்பையும், நல்ல பெயரையும், ஏராளமான பணத்தையும் சம்பாதித்த 'Wachowski சகோதரர்கள்" இயக்கிய முதல் படம் இது. 1996 இல் வெளிவந்த இந்தப் படம் ஒரு neo-noir crime thriller என்று புகழப்படுகிறது. பிற்பாடு பல புதுமைகளை அரங்கேற்றிய Matrix series படங்களை  இயக்கிய இந்தத் திறமையான சகோதரர்கள் முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார்கள் என்றால் அது ஒன்றும் அதிசயமில்லை. 1996 ம் ஆண்டிலேயே lesbian உறவை மிகத் துணிச்சலாக காட்டியுள்ள இந்தப் படம் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல் செல்கிறது. ஐந்தாண்டு சிறையில் இருந்துவிட்டு வெளிவரும் கார்கி (Gina Gershon) அடுத்தது எங்கே கை வைக்கலாம் என்று நோட்டம் பார்க்க தன்னுடைய ப்ளம்பர் மற்றும் பெயிண்டர் திறமைகளை வைத்துக்கொண்டு ஒரு பண

உருளைக்கிழங்கு - ஒரு உன்னத உணவு

சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப்பொருள் உருளைக்கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது. மேலும் பல்வேறு வழிகளில் சமைத்து உண்ணத்தக்க வகையில் அமைந்துள்ளது இந்தக் கிழங்கு மட்டுமே! இதை அவித்தோ, சுட்டோ, வேகவைத்தோ, வறுத்தோ பயன்படுத்தினாலும் கிழங்கின் மருத்துவக் குணமும் மாறாமல் இருப்பது இக்கிழங்கின் சிறப்பம்சமாகும். 100 கிராம் உருளைக் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். இதில் ஈரப்பதம் 75%ம், புரதம் 2%ம், கொழுப்பு 0.1%ம், தாது உப்புகள் 0.61%ம், நார்ச்சத்து 0.41%ம் மீதி கார்போஹைடிரேட்டும் ஆகும். இவை தவிர வைட்டமின் சி 17 மில்லிகிராமமும், கால்சியம் 10 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 40 மில்லிகிராமும், வைட்டமின் ‘ஏ’யும் வைட்டமின் ‘பி’ முதலியவையும் உள்ளன. சோடா உப்பு, பொட்டாசியம் முதலியனவும் அதிக அளவில் உள்ளன. ஒரு மனிதன் தினமும் பாலும், உருளைக்கிழங்கும் மட்டும் சாப்பிட்டால் போதும். அவன் உடலக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துவிடும். அந்த அளவுக்கு கார்ப்போஹைடிரேட்டுகள் (மாவுப

மன்மதன் அம்பு - Bull's Eye

ஏற்றுக்கொள்ளும் வேடம் எதுவானாலும் அதை சிரமேற்கொண்டு சிறப்புடன் செய்யும் ஒரு மிகச் சிறந்த நடிகர் கமல் ஹாசன். அவருடைய இன்றைய வெளியீடான மன்மதன் அம்பு அவருடைய அர்பணிப்புக்கு ஒரு உதாரணம். நடிப்பு, பாடல், திரைக்கதை, வசனம் என்று ஏகப்பட்ட பொறுப்புகளை சுமந்தாலும் எல்லாவற்றையும் செவ்வனே செய்திருக்கிறார் நம் உலகநாயகன். கமல்-கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் எந்தப் படமும் தோற்றதில்லை. இந்தப் படமும் அதை நிரூபிக்கிறது. எந்த இடத்திலும் தொய்வு விழாமல் கொண்டு செல்லும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களை நிச்சயம் பாராட்டவேண்டும். கமலின் நடிப்பைப் பற்றி நாம் எதுவும் புதிதாகச் சொல்லத் தேவையில்லை. இந்தப் படத்தில் நடிப்பைப் பொறுத்தவரை கமல் மிகவும் மெனக்கெடவில்லை என்றே எனக்குப்படுகிறது.  தொழிலதிபர் மதனகோபாலாக வரும் மாதவன் அழகாக சிரிக்கிறார், அளவாக நடிக்கிறார். ரொம்பவும் அலட்டிக் கொள்ளாத இயல்பான நடிப்புக்கு ஒரு சபாஷ். அம்புஜாக்ஷியாக வரும் த்ரிஷா மிக அழகாக இருக்கவேண்டும் என்றே ஒரே நோக்கில் ஒரு ஷோகேஸ் பொம்மை மாதிரிதான் வருகிறார். இவர்களைத் தவிர ஏராளமான நடிகர்கள் இந்தப் படத்தில். யாருக்கும் இர

சச்சினின் மற்றுமொரு சாதனைச் சரித்திரம்!

   மாஸ்டர் ப்ளாஸ்டர் (Master Blaster) சச்சின் இன்று இன்னுமொரு மகத்தான சாதனை நிகழ்த்தியிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை யாருமே செய்யாத சாதனையை சச்சின் இன்று செய்திருக்கிறார். தென் ஆப்ரிக்காவில் சென்சூரியனில் நடைபெற்று வரும் முதல் test போட்டியில் தனது 50 வது சதத்தைப் பதிவு செய்துள்ளார். 1990 இல் இங்கிலாந்துக்கு எதிராக முதல் சதம் அடித்து தன் சாதனையை ஆரம்பித்து வைத்த சச்சின், இன்று 20 வருடம் கழித்து சென்சூரியனில் தனது 50 வது சாதனையைச் செய்துள்ளார். வாழ்க சச்சின்! 2G ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போட்டிகளின் நிகழ்ந்த அவமானம், காசு மட்டுமே சம்பாதிக்க நினைக்கும் நம் கேவலமான அரசியல்வாதிகள் ஆகிய பல்வேறு விஷயங்களால் தலை குனிந்திருக்கும் இந்தியர்கள் பெருமையுடன் தலை நிமிர இதோ ஒரு மகத்தான காரணம்.

நீரா ராடியா மேல் வழக்குத் தொடர கருணாநிதியால் முடியுமா?

2G ஸ்பெக்ட்ரம் விவகாரம் சந்தி சிரித்துக்கொண்டிருக்கும் வேளையில், அவலை நினைத்து உரலை இடித்த கதையாக இந்த விவகாரம் பற்றி துக்ளக் பத்திரிகையில் எழுதிய சோ மீது பாய்ந்திருக்கிறார் நம் முதல்வர். தயாநிதி மாறன் தயாளு அம்மையாருக்கு ரூ600 கோடி கொடுத்ததாக நீரா ராடியா பேசியிருக்கும் டேப் இப்போது உலகம் பூராவும் வலம் வருகிறது. இதைப் பற்றி வழக்குத் தொடரவோ, கேள்வி கேட்கவோ கருணாநிதியில் முயன்றால் அது நீரா ராடியாவின் மேல்தானே தவிர, இதைப் போன்ற விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் மீது தேவையில்லாமல் பாயக்கூடாது.  இதைப் பற்றி தயாநிதி மாறன் இன்னும் மறுப்பேதும் சொல்லவில்லையே அதை ஏன் கருணாநிதி கேட்கவில்லை? இதைப் பற்றி தயாளு அம்மையாரிடம் ஏதாவது பேசியிருப்பாரா? காரணகர்த்தாக்களான தயாநிதி மாறன், நீரா ராடியா ஆகியோரைப் பற்றி எந்த ஒரு வார்த்தையும் பேசாத முதல்வர் தேவையில்லாமல் சோ மீது பாய்கிறார்.  இதைப் போல நடந்ததா என்று சோ ஏன் நிரூபிக்க வேண்டும்? இது போல நடக்கவில்லை என்று தயாளு அம்மாள் சார்பில் கருணாநிதி அல்லவா நிரூபிக்க வேண்டும். நல்ல காமெடி பெரியவரே! (கீழே உள்ள செய்தித் 

உலகின் சிறந்த "பின்" அழகிகள் - World's Best Bum-2010

உலக அழகிகள் என்று முதலில் பெண்களைத் தேர்வு செய்து பட்டம் சூட்டினார்கள், பின்பு இது முன்னேறி, சிறந்த கூந்தல் அழகி, சிறந்த பல் அழகி, சிறந்த கண் அழகி என்றெல்லாம் பல்வேறு விதமாக, படிப்படியாக, விதவிதமான அழகிகளை தேர்வு செய்து பட்டம் சூட்டி விட்டு, சமீபத்தில் உலகின் சிறந்த "பின்" அழகி யார் என்று போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்றுள்ள அழகிகளின் தரப் பட்டியலை  "World's Best Bum 2010" என்ற பெயரில் லண்டனிலிருந்து வரும் தி சன் என்ற நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த அழகிகளின் "பின்" அழகுப் படங்கள் சரிவரக் கிடைக்காத நிலையிலும் சற்றும் மனம் தளராமல் வலைப் பக்கங்களை மேய்ந்து அந்த அழகிகளின் புகைப் படங்களைக் கீழே கொடுத்துள்ளேன். இந்தப் போட்டிக்கு அவர்கள் வைத்த பெயர்தான் சற்று நெருடலாக இருக்கிறது, "the Holy Grail of Hindquarters," என்பதில் Hindquarters என்றால் பின்புறம் என்று எல்லோருக்கும் தெரியும், ஆனால், Holy Grail என்பது ஒரு புனிதமான கிறிஸ்துவக் குறியீடு: கிறிஸ்துவ மத நம்பிக்கையின்படி ஏசு கிறிஸ்து அவருடைய "கடைசி விருந்து" (Last Supper) நடந்த சமயம்

படித்ததில் பிடித்தது -

செய்தித்தாளோ, வாரப் பத்திரிக்கையோ, சக பதிவாளரின் வலைப் பதிவோ, நாவலோ எதில் எனக்கு பிடித்த விஷயங்கள் வருகிறதோ அதை இங்கு தர உத்தேசம். சக பதிவாளர் ரமேஷ் அவருடைய http://sirippupolice.blogspot.com வலைத் தளத்தில் எழுதியிருக்கும் அறிமுகம் பகுதி: ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள்.  மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....   ஹா ஹா ஹா ...Good one

வாழ நினைத்தால் வாழலாம் -Part 1-பணம் கொட்டும் ஆன்லைன் புத்தக வியாபாரம்

தில்லியைச் சேர்ந்த சச்சின் பன்ஸால் மற்றும் பின்னி பன்ஸால் என்ற இரண்டு நண்பர்களும் தில்லி ஐ.ஐ.டியில் படித்தவர்கள். இருவருமே ஒன்றாக அமெரிக்காவை சேர்ந்த அமெஸான் (Amazon) என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் பணிபுரிந்தவர்கள். அமெஸான் நிறுவனத்தைப் பற்றி அறியாதவர்கள் குறைவு. 1995 இல் Jeff Bezos என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகெங்கிலும் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு ஆன்லைன் பல்பொருள் அங்காடி அமெஸான். மேற்சொன்ன இரு பன்ஸால் நண்பர்களும் செப்டம்பர் 2007 இல் Flipkart என்ற ஆன்லைன் புத்தக நிறுவனத்தை நிறுவினர். Pic courtesy: www.business.in.com இன்றைய இயந்திரத்தனமான உலகில் அருகில் இருக்கும் புத்தகக் கடைக்கு செல்ல நேரம் இல்லாமல் இருக்கும் ஏராளமான இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினருக்கு Flipkart ஒரு மிக வசதியான தேர்வாகும். ஒரு புத்தகத்தையோ, திரைப்பட, மற்றும் இசை டீவிடீயோ, மொபைல் பேசியோ எதுவாக இருந்தாலும் www.flipkart.com சென்று உங்களுக்கு பிடித்த பொருளைத் தேர்வு செய்து ஆர்டர் செய்துவிட்டால் அது குரியர் மூலம் உங்கள் வீடு தேடிவந்து விடும். நீங்கள் உங்கள் கிரெடிட் அல

தி சோஷல் நெட்வொர்க் - திரைப் பட விமரிசனம்

Social என்பதை சோஷியல் என்று உச்சரிப்பது தவறு, அதன் சரியான உச்சரிப்பு "சோஷல்" என்பதாகும். சரி, சரி, நான் இந்தப் பதிவை முன் வைக்க வந்தது உங்களுக்கு ஆங்கில இலக்கணம் சொல்லித்தர அல்ல. சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ள இந்தப் படத்தை விமரிசனம் செய்யும்முன் ஒரு சிறிய அறிமுகம்; நம்மில் பல பேர் 'Facebook" பயன்படுத்துகிறோம், ஆனால், மார்க் ஜூக்கர்பெர்க் என்றால் யார் என்று தெரியுமா? அவர்தான் இந்த 'Facebook" கை உலகிற்கு அறிமுகம் செய்வித்தவர். இன்று உலகத்தில் மிக இளைய பில்லினர் (billionaire). Facebook 2004 ம் ஆண்டில் இவரால் தோற்றுவிக்கப்பட்டபோது இவர் வயது 20. ஆம் ஜஸ்ட் 20 வயதாகும்போது அமெரிக்காவின் ஹார்வர்ட் யுனிவர்சிடியில் படிக்கும் அவரருடைய தோழி எரிக்காவை வெறுப்பேற்ற செய்த ஒரு விஷயம்தான் ஆறே வருடங்களில் விஸ்வரூபம் எடுத்து இன்றைய தேதியில் Facebook-இன் மதிப்பு சுமார் 25 பில்லியன் டாலர்கள் என மதிப்படப்படுகிறது. அதாவது, ஒரு பில்லியன் டாலர் என்பது நம் இந்திய மதிப்பில் சுமார் 4700 கோடி என்று எடுத்துக்கொண்டால் அதை 25 ஆல் பெருக்கிப் பாருங்கள், அதுதான் Facebo

நல்ல கவிதை ஒன்று...

அப்படி என்னதான் பிஸியோ, என்னதான் ஆயிற்று உன் பதிவுகளுக்கு, ஏன் இந்த இடைவெளி என்றெல்லாம் சில நல்ல நண்பர்கள் என்னை அலைபேசியில் குடைந்து எடுத்துவிட, இதோ, கிளம்பிடோம்ல? இனிமே நிச்சயம் வாரம் ரெண்டு பதிவாவது இருக்கும் மக்களே. சமீபத்தில் நான் மிகவும் ரசித்த ஒரு கவிதையை கீழே கொடுத்துள்ளேன்: (அட்ரா சக்க வலைப்பதிவில் நண்பர் சி.பி செந்தில்குமார் கணையாழி கவுரவித்த என் முதல் கவிதை என்ற பெயரில் எழுதியது). நண்பருக்கு நன்றி. ஒரு பார்வை இல்லாதவன் எழுதிய கவிதை மாதிரி ஜோடனை இல்லாத பிம்பமாய் உன் முகம் இருக்கும். சொர்க்கத்துக்குப்போடப்பட்ட ஒற்றையடிப்பாதை மாதிரி உன் தலை வகிடு இருக்கும். பளிங்குக்கற்களில் ஊற்றிய பாதரசம் போல் அலை பாய்ந்து கொண்டே உன் கண்கள் இருக்கும். நிறத்தில்,நீளத்தில்,அடர்த்தியில் இருட்டுக்கு சவால் விடும் கர்வத்தில் உன் கூந்தல் இருக்கும். ஓஸோன் காற்றின் சுத்தீகரிப்புக்கேந்திரமாய் உன் நாசி இருக்கும். தேனில் ஊறிய இரு துண்டுக்ள் போல் உன் உதடுகள் இருக்கும். பருத்திப்பூக்களை இரண்டு பக்கமும் வைத்துக்கட்டியது போல் நத்தைக்கு ஒரு ஆழாக்கு அதிகமான மென்மையில் உன் கன்னக

மழைநீர் கால்வாய் அமைக்க கோடி, கோடியாய் பணம் கொட்டியும் தண்ணீர் வடியாமல் சென்னை மிதப்பது ஏன்?

  "மழைநீர் கால்வாய்கள் திட்டமிட்டபடி அமைக்கப்படவில்லை. கட்டமைப்பு வசதிகளில் காலத்திற்கேற்ப மாற்றம் செய்ய வேண்டியது அவசியம்; இதில், அரசு சிறப்பு கவனம் செலுத்தாவிட்டால் சென்னை தண்ணீரில் தத்தளிப்பது தவிர்க்க முடியாதாகி விடும்' என, குடிநீர் வாரிய ஓய்வு பெற்ற இன்ஜினியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால், சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. மூன்று நாட்கள் பெய்த மழைக்கே சென்னை தத்தளித்து விட்டது. ஆண்டுதோறும் மழைநீர் கால்வாய் அமைத்தல், ஏரிகள் தூர்வாருதல், நீர் வழித்தடங்களை சீரமைத்தல் என, கோடிக்கணக்கில் பணத்தை கொட்டியும் பயன் இல்லை. குடிசைப்பகுதிகள் மட்டுமல்ல, அடுக்குமாடி குடியிருப்புகள் கூட தண்ணீரில் தத்தளிக்கும் நிலை ஏற்படுகிறது.   சென்னையில், 1,447.91 கோடி ரூபாயில் பொதுப்பணித் துறையும், சென்னை மாநகராட்சியும் இணைந்து நீர் வழித்தடங்களை சீரமைக்கும் பணியை துவக்கியுள்ளன. இதற்கு பலன் கிடைக்குமா, சென்னை தத்தளிக்கும் நிலைக்கு தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. குடிநீர் வாரிய ஓய்வு பெற்ற இன்ஜி