Skip to main content

நீரா ராடியா மேல் வழக்குத் தொடர கருணாநிதியால் முடியுமா?

2G ஸ்பெக்ட்ரம் விவகாரம் சந்தி சிரித்துக்கொண்டிருக்கும் வேளையில், அவலை நினைத்து உரலை இடித்த கதையாக இந்த விவகாரம் பற்றி துக்ளக் பத்திரிகையில் எழுதிய சோ மீது பாய்ந்திருக்கிறார் நம் முதல்வர். தயாநிதி மாறன் தயாளு அம்மையாருக்கு ரூ600 கோடி கொடுத்ததாக நீரா ராடியா பேசியிருக்கும் டேப் இப்போது உலகம் பூராவும் வலம் வருகிறது. இதைப் பற்றி வழக்குத் தொடரவோ, கேள்வி கேட்கவோ கருணாநிதியில் முயன்றால் அது நீரா ராடியாவின் மேல்தானே தவிர, இதைப் போன்ற விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் மீது தேவையில்லாமல் பாயக்கூடாது. 

இதைப் பற்றி தயாநிதி மாறன் இன்னும் மறுப்பேதும் சொல்லவில்லையே அதை ஏன் கருணாநிதி கேட்கவில்லை? இதைப் பற்றி தயாளு அம்மையாரிடம் ஏதாவது பேசியிருப்பாரா? காரணகர்த்தாக்களான தயாநிதி மாறன், நீரா ராடியா ஆகியோரைப் பற்றி எந்த ஒரு வார்த்தையும் பேசாத முதல்வர் தேவையில்லாமல் சோ மீது பாய்கிறார். 

இதைப் போல நடந்ததா என்று சோ ஏன் நிரூபிக்க வேண்டும்? இது போல நடக்கவில்லை என்று தயாளு அம்மாள் சார்பில் கருணாநிதி அல்லவா நிரூபிக்க வேண்டும். நல்ல காமெடி பெரியவரே!

(கீழே உள்ள செய்தித்  தொகுப்பு நன்றி: நறுமுகை இணையத்தளம்)

சோ தயாரா?? முக கேள்வி

அமைச்சர் பதவிக்காக தயாளு அம்மாளுக்கு, தயாநிதி மாறன் ரூ.600 கோடி கொடுத்ததாகச் சொல்வதை நிரூபிக்கத் தயாரா” என்று பத்திரிகையாளர் சோவுக்கு முதல்வர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: “மத்திய அமைச்சர் பதவியைப் பெறுவதற்காக தயாளு அம்மாளுக்கு தயாநிதி மாறன் 600 கோடி ரூபாய் கொடுத்ததாக – நீரா ராடியா டேப் உரையாடல் செய்தி கூறுகிறதே?” என்ற ஒரு கேள்விக்கு “துக்ளக்” இதழில் பதில் எழுதும் போது “இது பற்றி, இன்னமும் எந்தவிதமான உறுதியான மறுப்பும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. மத்திய அரசில், மந்திரிகள் நியமனம் ஆகிற முறை பற்றியும், அதில் தி.மு.க. பெற்றுள்ள “பங்கு” பற்றியும் தெளிவாக விளக்குகிற விஷயம் இது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே?.
பதில்: பதினைந்து நாட்களுக்கு முன்பு ஒரு சில நாளேடுகளில் இது போன்றதொரு செய்தி வந்த போது, அதைப் பார்த்த நான் இப்படிப்பட்ட பைத்தியக்காரர்களும் நாட்டிலே இருக்கிறார்களே என்று தான் எண்ணிக்கொண்டேனே தவிர, அதைக் கூடவா நம்புபவர்கள் இருப்பார்கள், எனவே அந்தச் செய்தியை மறுக்க வேண்டு மென்று தோன்றவில்லை.
நிரூபிக்க தயாரா?
ஆனால் இன்று அந்தச் செய்தி “துக்ளக்” இதழிலும் வெளி வந்து பதில் சொல்லப்பட்டிருப்பதைக் காணும் போது – ஒரே பொய்யைத் திரும்பத் திரும்ப இவ்வாறு எழுதினால் அது நம்புவதற்குரிய ஒன்றாக ஆகி விடுமோ என்ற நப்பாசையில் தொடர்ந்து அதை எழுதி வருவதால் அந்தச் செய்தியை மறுத்திட விரும்புகிறேன்.
அமைச்சர் பதவிக்காக தன் பேரனிடம் அதுவும் 600 கோடி ரூபாய் அவரின் பாட்டியார் வாங்கினார் என்று உண்மையிலேயே ஒரு காலத்தில் எனக்கு நண்பராக இருந்த சோ நம்புகிறாரா? தயாநிதிமாறனுக்கு அல்ல, வேறு யாருக்காகவாவது அமைச்சர் பதவியை வழங்குவதற்காக தி.மு.க பணம் பெற்றதாக சோ நிரூபிக்கத் தயாராக இருக்கிறாரா? ஏனென்றால் துக்ளக் பதிலில் மந்திரிகள் நியமனம் ஆகிற முறை பற்றியும், அதில் தி.மு.க. பெற்றுள்ள பங்கு பற்றியும் தெளிவாக விளக்குகிற விஷயம் இது என்றும் சொல்லியிருப்பதால், இதனை நான் தெளிவாக்க விரும்புகிறேன்.
சதித் திட்டம்
இதுபோன்ற உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளை திட்டமிட்டு சோ போன்ற ஒரு சில பத்திரிகையாளர்கள் திரித்து வெளியிட்டோ அல்லது அதற்காக கூடிப்பேசி சதித்திட்டம் வகுத்தோ திராவிட இயக்கத்தை சேதப்படுத்த எண்ணுகிறார்களா?.
உண்மையிலேயே தயாநிதிமாறன் அமைச்சர் பதவிக்காக 600 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக துக்ளக் சோவோ அல்லது அந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர்களோ நிரூபிக்கத் தயாராக இருக்கிறார்களா?. அப்படியிருந்தால் அந்தச் செய்தியை உறுதிப்படுத்தி அவர்கள் இதழிலே அதனை அவர்கள் பெயரிலேயே வெளியிடட்டும். அவர்களை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். சோ ராமசாமி, இதற்குப் பதில் சொல்வாரா? இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...