Skip to main content

Posts

Showing posts from November, 2013

இசையின் 865 நிறங்கள் - வித்தியாசமான கட்டுரை - நன்றி: தமிழ் இந்து

தற்செயலாகத்தான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அவருடைய பெயர் ஸ்டீஃபான் ஹினிக்கன். கனடாவுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் குடிபெயர்ந்த  ஐரிஷ்காரர்  . இசை வாத்தியங்களைச் சேகரிப்பவர். தபால் தலை சேகரிப்பவர்கள், காசுக் குற்றிகள் சேகரிப்பவர்கள் என்று பார்த்திருக்கிறேன். இசை வாத்தியங்கள் சேகரிப்பவரை எங்கே காண முடிகிறது? அவர் வாழ்நாள் முழுக்கச் சேகரித்த வாத்தியங்கள் அவருடைய வீட்டுக்குச் சென்றபோது பார்வையிடக் கிடைத்தன. ஆறடி உயரமான மனிதர். மெலிந்த ஆனால் வலுவான தேகக்கட்டு. வயது 50 - 55 இருக்கலாம். ஒன்பது வயதுப் பையனைப் போல முகத்தில் சிவப்புச் சிரிப்புடன் குதூகலமாக வரவேற்றார். அந்த அறை முழுக்க ஒருவித ஒழுங்குமில்லாமல் வாத்தியங்கள் கிடந்தன. சில உயரத்தில் மரப்பலகைகளில் அடுக்கப்பட்டுக் காணப்பட்டன. சில தரையில். எத்தனை வாத்தியங்கள் உள்ளன என்ற கேள்விக்கு “865 வாத்தியங்கள்” எனச் சட்டென்று சொன்னார். அந்தப் பதில் திடுக்கிட வைத்தது. எண்ணிக்கையில் அல்ல; அத்தனை துல்லியமாக அவர் கணக்கு வைத்திருக்கிறார் என்பதை நினைத்தபோது. ஏதாவது புது வாத்தியம்பற்றி கேள்விப்பட்டால் அதை அந்த நாட்டிலிருந்து உடனுக்குடன் தருவ

ஆரம்பம்: என் பார்வையிலிருந்து மிக சுருக்கமாக :

ஆச்சரியமான ஆரம்ப காட்சியுடன் ஆரம்பம் ஆரம்பிக்கிறது. கம்பீரமான, ஹாண்ட்சம் லுக்குடன் அஜித். தலை நரைத்தாலும், "தல" நரைக்கவில்லை. படம் நெடுக அஜித் கொடிகட்டிப் பறக்கிறார். ஆர்யாவுக்கு பெரிதாக ஸ்கோப் இல்லை, எனவே அவருடைய சுமார் performance பற்றி குறை சொல்லக்கூடாது. நயன்தாரா செம க்யூட். அதிரடியாக சண்டையெல்லாம் போட்டாலும், இவருக்கும், அஜித்துக்கும் நடுவில் கொஞ்சம் கூட ரொமான்ஸ் இல்லை என்பது கொஞ்சம் நெருடல்தான்.  டாப்சி கடுப்படிக்கிறார். முன்னெல்லாம் இந்த மாதிரி கொஞ்சம் "லூஸான " ரோலுக்கு லைலாவை கூப்பிடுவார்கள், இப்போது டாப்சி. வில்லன் என்றாலே வடநாட்டு இறக்குமதிதான் என்று ஆகிவிட்டது.எனவே, அந்த வில்லன்கள் தமிழைக் கொலை செய்யும்போது பாவமாகவே இருக்கிறது. மும்பை என்று காட்டிவிட்டு ஏண்டா தமிழிலேயே உரையாடல் என்று யாரும் கேட்ககூடாது என்று டைட்டில் கார்டிலேயே மன்னிப்பு கேட்டுவிடுகிறார்கள்.  அந்த மத்திய அமைச்சரின் துபாய் மகள் செம டிம்பர் கட்டை. ஒரே ஒரு டான்சுக்கு தள, தளவென வந்து குனித்து, நிமிர்ந்து பாத்துக்கோ என்று ஆடிவிட்டு போய்விடுகிறார்.  கதை கொஞ்சம் வித்
வலையுலக நண்பர்களுக்கு என் இதயம் கனிந்த தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் !! அறியாமை இருள் அகல, மகிழ்ச்சி ஒளி பரவ, இறைவனை வேண்டுவோம் !!!

இன்று தமிழின் முதல் பேசும் சினிமா வெளியான நாள்

பேசும் சினிமா வருவதற்கு முன்னால் ஊமைப்படங்களைத்தான் மக்கள் பார்த்தார்கள். தமிழின் முதல் பேசும் சினிமாவின் பெயர் காளிதாஸ். தென்னிந்தியாவின் முதல் பேசும் சினிமாவும் அதுதான். இதே நாளில்தான் அது வெளியானது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சமஸ்கிருத மகாகவி காளிதாஸ்.அவர் சாகுந்தலம், மேகதூதம் எனும் அமர காவியங்களை இயற்றி உள்ளார்.அவரைப் பற்றிய சினிமா இது. தமிழ்ப்படம் என சொல்லப்பட்டாலும் அதில் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் பேசியுள்ளனர். இதில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலட்சுமி ஆகியோர் முக்கிய நடிகர்களாக நடித்துள்ளனர். இதில் கிட்டத்தட்ட ஐம்பது பாடல்கள் இடம்பெற்றிருந்தன. “இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை” போன்ற தேசபக்திப்பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாடல்களை மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி இருந்தார்.அவர்தான் முதல் சினிமா பாடலாசிரியர். இதன் முதல் காட்சி சென்னையில் இருந்த ‘சினிமா சென்டிரல்’ எனும் திரையரங்கில் 1931, அக்டோபர் 31 இல் திரையிடப்பட்டது. கான் பகதூர் அர்தேசிர் இரானி எனும் புகழ்பெற்ற இயக்குநரின் இம்பீரியல் மூவிடோன் கம்பெனியின் மூலம் இந்த படம் தயாரிக்கப்பட்ட