Skip to main content

ஆரம்பம்: என் பார்வையிலிருந்து மிக சுருக்கமாக :








ஆச்சரியமான ஆரம்ப காட்சியுடன் ஆரம்பம் ஆரம்பிக்கிறது. கம்பீரமான, ஹாண்ட்சம் லுக்குடன் அஜித். தலை நரைத்தாலும், "தல" நரைக்கவில்லை. படம் நெடுக அஜித் கொடிகட்டிப் பறக்கிறார். ஆர்யாவுக்கு பெரிதாக ஸ்கோப் இல்லை, எனவே அவருடைய சுமார் performance பற்றி குறை சொல்லக்கூடாது. நயன்தாரா செம க்யூட். அதிரடியாக சண்டையெல்லாம் போட்டாலும், இவருக்கும், அஜித்துக்கும் நடுவில் கொஞ்சம் கூட ரொமான்ஸ் இல்லை என்பது கொஞ்சம் நெருடல்தான். 

டாப்சி கடுப்படிக்கிறார். முன்னெல்லாம் இந்த மாதிரி கொஞ்சம் "லூஸான " ரோலுக்கு லைலாவை கூப்பிடுவார்கள், இப்போது டாப்சி. வில்லன் என்றாலே வடநாட்டு இறக்குமதிதான் என்று ஆகிவிட்டது.எனவே, அந்த வில்லன்கள் தமிழைக் கொலை செய்யும்போது பாவமாகவே இருக்கிறது. மும்பை என்று காட்டிவிட்டு ஏண்டா தமிழிலேயே உரையாடல் என்று யாரும் கேட்ககூடாது என்று டைட்டில் கார்டிலேயே மன்னிப்பு கேட்டுவிடுகிறார்கள். 

அந்த மத்திய அமைச்சரின் துபாய் மகள் செம டிம்பர் கட்டை. ஒரே ஒரு டான்சுக்கு தள, தளவென வந்து குனித்து, நிமிர்ந்து பாத்துக்கோ என்று ஆடிவிட்டு போய்விடுகிறார். 

கதை கொஞ்சம் வித்தியாசமில்லை என்றாலும் சொல்லும் விதம் வித்தியாசமாக அமைய உழைத்துள்ள விஷ்ணுவர்த்தன், கோர்வையாக காட்சிகளை அமைக்க மெனக்கெடவில்லை என்பது நன்றாக தெரிகிறது. பாடல் ஒன்று கூட மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை நன்றாகவே பொருந்துகிறது. 

Nowhere to Hide , Remo : Unarmed & Dangerous , Swordfish என பல ஹாலிவுட் படங்களை நினைவுபடுத்தினாலும், எந்தப் படத்திலிருந்தும் அப்படியே சுடாமல் கொஞ்சம் மெனக்கட்டிருப்பதால் இயக்குனரை பாராட்டலாம். 

ஒளிப்பதிவு அட்டகாசம். குறிப்பாக துபாய் காட்சிகள், அந்த படகு சேஸ். 

அஜித் ரசிகர்களுக்கு "தல" தீபாவளி. மற்றவர்களுக்கு ஒரு நல்ல என்டர்டெய்னர்.

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்