Skip to main content

Posts

Showing posts from February, 2009

'ஆஸ்கர் புயல்' ரஹ்மான்

இரு ஆஸ்கர்விருதுகளை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், தமிழர்களான நம் அனைவருக்கும் மிகப்பெரிய கவுரவத்தை தேடித்தந்திருக்கிறார். இதற்கு முன் எந்தவொரு இந்திய இசை அமைப்பாளரும் சாதிக்காததை சாதித்து மிக உயர்ந்த இடத்தை ரஹ்மான் எட்டிவிட்டார். அமெரிக்க மண்ணில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி, இந்தியர்களாலும் சர்வதேசத் தரத்துக்கு இணையானதிறமையை வெளிப்படுத்த முடியும் என்று நிரூபித்துவிட்டார். இந்திய சாதனையாளர்களைக் கொண்ட வெளிநாட்டுப் படங்களும், இந்தியப்படங்களும் இனி ஆஸ்கரில் போட்டி போட்டு முந்தி செல்வதற்கான பாதையை ரஹ்மான் வகுத்துவிட்டார். இடைவிடாத முயற்சி, இரவு பகல் பாராத கடின உழைப்பின் மூலம் இச்சாதனையை அவர் புரிந்திருக்கிறார். {News capsule courtesy: Dinamalar.com)

நகைச்சுவை மன்னன் நாகேஷ்

தமிழ் திரையுலகம் பல நகைச்சுவை நடிகர்களை தந்திருக்கிறது. ஆனால் இன்று நாம் யோசித்தால் நான்கு அல்லது ஐந்து பேருக்கு மேல் நம் நினைவில் நிறைய நடிகர்கள் நிற்கவில்லை. சந்திரபாபு : மறக்கமுடியாத ஒரு நடிகர். இவர் படங்களில் நகைச்சுவைக்கு மேல் வெஸ்டர்ன் டான்ஸ் மற்றும் மெட்ராஸ் தமிழ் [பெரும்பாலான படங்கள்] மேலோங்கி நிற்கும். பாலய்யா : இவருடைய நகைச்சுவை பெரும்பாலும் ஒரு வில்லத்தனம் கலந்தே இருக்கும். ஆனாலும் ரசிக்க முடிந்த காரணம் அவருடைய அமர்க்களமான "பாடி லாங்க்வேஜ்." தங்கவேலு : மிகப் பிரமாதமான டயலாக் டெலிவரி இவர் பலம். கல்யாணப் பரிசு, அறிவாளி, தேன்நிலவு ஆகிய படங்களில் இவருடைய காமெடியை ரசிக்காமல் எப்படி இருக்க முடியும்? சோ : நகைச்சுவை கலந்த சடைர் வகை காமெடி இவருடையது. நக்கல், நையாண்டி இல்லாமல் இவரால் காமெடி செய்ய முடியாது. இவரும், நாகேஷும் சேர்ந்து கலக்கிய நினைவில் நின்றவள் மற்றும் பல படங்களை அடிக்கடி பல சானல்களில் ரசிக்க முடிகிறது. கலைவாணர் என் எஸ் கே [என் எஸ் கிருஷ்ணன்] பற்றி ஏன் எழுதவில்லை என்று கேட்காதீர்கள். இதுவரை அவருடைய படம் எதுவும் நான் பார்த்ததில்லை. இவர்களுக்கெல்லாம் மேலாக இன்னும

அருவருப்பின் உச்சக்கட்டம்!

இப்படி ஒரு பெண் நகை அணிந்தால் இந்தியாவில் ஏன் பணவீக்கம் வராது? என்ன ஒரு அருவருக்கத்தக்க ஆடம்பரம் இது? இவைகளை எல்லாம் வருமானவரி துறை என்ன செய்யப்போகிறது? படம் அனுப்பிய நண்பர் நாகுவுக்கு நன்றி

என்னதான் ஆயிற்று நம் இந்தியாவுக்கு?

போன வருட முடிவில் மும்பையில் நடந்த தீவிரவாதம், கேவலமான அரசியலால் நாம் தொடர்ந்து படும் அவதி, கிடு கிடுவென அதல பாதாளத்திற்கு போய் விட்ட நம் ஷேர் மார்கெட் போன்ற இன்னும் பல தலைவலிகளுக்கு நடுவே நமக்கு இதமான விதத்தில் இந்த புத்தாண்டு பிறந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. கடந்த வருட முடிவில் வெற்றியின் சிகரத்தை விஸ்வநாத் ஆனந்த் தொட்ட பிறகு, விளையாட்டுத் துறை மற்றும் பல்வேறு துறைகளில் நம் இந்தியர்களின் சாதனை தொடர்கிறது. ஸ்லம்டாக் மிலினர் [என்னவொரு அருமையான படம்!!] மூலம் தொடரும் ஏ.ஆர். ரஹ்மானின் உலக சாதனைகள், ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள், சர்வதேச கிரிக்கெட்டில் தொடரும் நம் ஆதிக்கம், ஆஸ்திரேலிய ஓபனில் [மிக்சட் டபல்ஸ்] வெற்றி [வாழ்க மகேஷ் மற்றும் சான்யா], சமீபத்து இரண்டு மேட்ச்களிலும் ஸ்ரீலங்காவை மிதி, மிதி என்று மிதித்த நம் தோனியின் அதிரடிப்படை [ஏன் இந்த சொதப்பல், சச்சின்?], ஆஸ்திரேலிய ஓபன் ஜூனியர் பட்டம் வென்ற யூகி பாம்ப்ரி, சண்டிகரில் நடக்கும் பஞ்சாப் கோல்ட் ஓபனில் முதல் மாட்சிலேயே நியுசிலாந்து அணியை வென்ற நமது ஹாக்கி அணி...கலக்குங்கப்பா, கலக்குங்க. இந்த கலக்கல் தொடரட