Skip to main content

Posts

Showing posts from January, 2011

பெட்ரோல் விலையும் பாவப்பட்ட பொது மக்களும்!

பிப்ரவரி 2008 ம் ஆண்டில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.49.61 அப்போதைய கச்சா (crude) விலை ஒரு பேரலுக்கு $92 (அமெரிக்க டாலர்கள்). உலகச் சந்தையில் நேற்றைய கச்சா ஒரு பேரலுக்கு $93. ஆனால் நேற்றைய பெட்ரோல் விலை சென்னையில் ரூ.63.36!!! ஏன் இப்படி என்றால், 2008 ம் ஆண்டில் பெட்ரோல் விலை நம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது அது பெட்ரோலிய நிறுவனங்கள் வசம் உள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதம் மத்திய அரசு பெட்ரோல் விலைகளை ஏற்றவும், இறக்கவும் (?) முழு அனுமதியை பெட்ரோலிய நிறுவனங்களிடம் தாரை வார்த்துவிட்டது. எப்போதெல்லாம் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் விலை ஏறுகிறதோ, அப்போதெல்லாம் இங்கே பெட்ரோலின் விலையை ஏற்ற அந்த நிறுவனங்களுக்கு முழு அதிகாரமும் தந்தது.  கடந்த ஆறு மாதங்களில் ஆறு முறை பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டது என்பது என் வீட்டு நாய்க்குக்கூட தெரியும். முன்பு பெட்ரோல் விலை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது APM (Administered Pricing Mechanism) என்று ஒரு வரைமுறை இருந்தது. இதன்படி பெட்ரோல் விலையை ஏற்றியும் (பெரும்பாலான சமயம்), இறக்கியும் (ஒரு சில சமயம்) வந்தது. பெட்ரோ

பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

அனைவருக்கும் மனம் கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

மாருதி நிறுவனத்தின் "கஸ்டமர் கேர் சர்வீஸ் " எனும் கஸ்டமர் டோன்ட் கேர் சர்வீஸ்

  கடந்த சில நாட்களுக்கு முன் அலுவலக வேலையாக (சத்தியமா) பாண்டிச்சேரி சென்றுவிட்டு நண்பர் ஒருவருடன் திரும்பிக் கொண்டிருந்தபோது, மகாபலிபுரம் தாண்டி பட்டிபுலம் எனும் இடம் வரும்போதும் என்னுடைய கார் தீடிரென நின்றுவிட்டது. சென்ற மாதம்தான் முழுதாக சர்வீஸ் செய்து வண்டி பக்கவான நிலையில் இருந்தபோது இது எதனால் என்று புரியாமல் மாருதியின் கஸ்டமர் கேர் சர்விஸ் எண்ணைத் தொடர்புகொண்டேன். பின்னிரவு நேரம், சுற்றிலும் கும்மிருட்டு, அருகில் கடைகள் எதுவுமில்லை, எனக்கோ கார் ஓட்டுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாது, என் நண்பருக்கோ அது கூட தெரியாது. கஸ்டமர் கேர் நண்பர் என்னிடம் ஆங்கிலத்தில் பேசமுடியுமா என்று கேட்டார். முடியும் என்று சொல்லிவிட்டு கார் நின்றுபோனதை சொன்னவுடன், இடத்தைக் கேட்டார். முட்டுக்காடு முதலைப் பண்ணை அருகே என்றவுடன் வேறு ஏதாவது அடையாளம் சொல்ல முடியுமா என்றார், மகாபலிபுரம் அருகே என்றேன், வேறு ஏதாவது என்று அந்தாள் மீண்டும் கேட்கவே சென்னைக்கு அருகே என்றேன். இப்படியெல்லாம் பொத்தாம்பொதுவாக சொல்லக் கூடாது, சரியாக சொன்னால்தான் கஸ்டமர் கேர் சர்வீஸ் ஆள் வருவார் என்று எரிச்சலூடியபோது, நீ எங்கிருந்து

கமலின் சமீபத்திய உளறல்

சமீப காலமாக தொடர்ச்சியாக (back to back) கொடுக்கும் எல்லா பேட்டிகளிலும் கமலின் உளறல் அதிகமாக ஆகியிருக்கிறது. என்னதான் பேசுகிறோம் என்று வகை தொகை தெரியாமல் கமலின் உளறல்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இளையராஜா மற்றும் எம்.எஸ்.வி ஆகியோருக்குப் பிறகு அந்த இடம் காலியாக இருக்கிறது அதை நிரப்பும் தகுதி தேவிஸ்ரீ பிரசாத் அவர்களுக்கு இருக்கிறது என்பது கமலின் லேட்டஸ்ட் அபத்தமான உளறல். வயதாகி விட்டதால், இந்தியாவே பெருமைப்படும் இரண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கியிருக்கும் ஏ. ஆர். ரஹ்மானின் சாதனைகள் இந்தாளுக்குத் தெரியவில்லையா அல்லது வேண்டுமென்றே சொல்கிறாரா என்று தெரியவில்லை. சமீப காலமாக ஹிட்டுக்கு மேல் ஹிட்டாக கொடுத்துக் கொண்டிருக்கும் யுவன் ஷங்கர் ராஜா, ஜீ. வி. பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் கமல் கண்களுக்குத் தெரியவில்லையா. இதைப் பற்றி பெரும்பாலான இசை அமைப்பாளர்கள் கருத்து சொல்ல மறுத்திருப்பது அவர்களுக்கு இருக்கு மெச்சுரிட்டி லெவலை காட்டுகிறது. கமலுக்கு ஆதரவாக சிலர் அவர் தேவிஸ்ரீ பிரசாத் பெரிய அளவில் வரவேண்டும் என்று அப்படி சொல்லியிருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஓகே, கமல்

கொடிய விஷம் கொண்ட "தங்கத் தவளை''

டே, அவனா நீ?  உலகத்தில் வசிக்கும் உயிரினங்களில் (மனிதனைத் தவிர) மிகக் கொடிய விஷம் கொண்ட உயிரினம் ஏது என்றால் பெரும்பாலானோர் பாம்பையோ அல்லது சிலந்தியையோ குறிப்பிடுவார்கள். ஆனால், உண்மையில் அத்தகைய பெருமை வெறும் 5cm அளவிலான ஒரு தவளை! நீரிலும், நிலத்திலும் வாழும் திறன் பெற்ற தவளைகள் மிகவும் சாதுவானவை, ஆபத்தில்லாதவை என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பசிபிக் கடலோரங்களில் வசிக்கும் ஒரு வகை தவளை, கொடிய விஷம் கொண்டது. ஒரே கடியில், மனிதனை பரலோகத்திற்கு அனுப்பும் அளவிற்கு இத்தவளையின் விஷம் ஆபத்தானது. பூமியில் உள்ள உயிரினங்களில் அதிக விஷம் கொண்டது இந்த தவளையினம் என்று ஆராய்ச்சியாளர் கள் கூறுகின்றனர். இந்த, "கோல்டன் டார்ட் பிராக்' (Golden Dart Frog)  கொலம்பியா கடலோரத்தில் உள்ள அடர்ந்த மழைக் காடுகளில் அதிகமாக வாழ் கின்றன. அக்கால கொலம்பிய மக்கள், இத்தவளையின் விஷத்தை பிரித்தெடுத்து, அதை ஈட்டி, அம்பு முனைகளில் தடவி வேட்டைக்கு பயன்படுத்தி யுள்ளனர். எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும், தவளை விஷம் தடவப்பட்ட அம்பு தாக்கியவுடன் மயங்கி விழுந்து விடும் என்பது

2010 ம் ஆண்டின் சிறந்த தமிழ் படங்களுக்கான அவார்ட்ஸ் - என் பார்வையில்

1. சிறந்த பொழுதுபோக்கு படம் : நிச்சயமாக களவாணி படம்தான். அறிமுக இயக்குனர் சற்குணம் ஒரு நல்ல திரைக்கதையுடன், பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் தைரியமாக இயக்கி வெளியிட்டு வெற்றிபெற்ற ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். 2. சிறந்த எதிர்பாராத படம்: மைனா . என்னதான் இயக்குனர் பிரபு சாலமன் ஒரு நன்கு அறிந்த இயக்குனர் என்றாலும் இவர் இதற்கு முன் இயக்கிய படங்கள் எல்லாம் பெரியஅளவில் பேசப்பட்டவை அல்ல. "இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழ் படங்களின் எதிர்காலம் நல்ல இயக்குனர்களின் கையில் இருக்கிறது என்று நிம்மதியாக நான் இன்று தூங்குவேன், " என்று உலகநாயகன் கமல்ஹாசன் மனம் திறந்து பாராட்டிய ஒரு நல்ல முயற்சி. சிறந்த ஒளிப்பதிவு, நல்ல பாடல்கள், லாஜிக்கை மீறாத திரைக்கதை என்று இலக்கணம் மாறாமல் வந்து இப்போது வசூலிலும் சாதித்துக்கொண்டிருக்கும் ஒரு நல்ல படம். 3. சிறந்த சரித்திர படம் மதராச பட்டினம் . சரித்திர படம் என்றாலே அட்டைக் கத்தி, வெத்துக் கிரீடம், பக்க பக்கமாக வசனம் என்ற இலக்கணத்தை உடைத்து 1940 களில் இருந்த சென்னையை நம் கண்முன் கொண்டுவந்த இயக்குனர் விஜய்க்கு ஒரு சபாஷ். இப்படி ஒரு சென்னையை நாமும்

2010 இல் படாதபாடுபட்ட உலகம்

இத்தனை காலமும் நாம் செய்து வரும் கொடுமைகளுக்கு பழி வாங்குவது போல அமைந்தது சென்ற வருடம் நாம் சந்தித்த இயற்கைச் சீற்றங்கள் அமைந்தன. 2010 இல் உலகமெங்கும் நடந்த சில இயற்கை சீரழிவுகளின் தொகுப்பு இது: நிலநடுக்கங்கள், நிலச் சரிவுகள், புயல்கள், வெள்ளம், எரிமலைகள், சுனாமி என்று எல்லாமுமாகச் சேர்ந்துகொண்டு 2010 ம் ஆண்டை புரட்டிப் போட்டுவிட்டன. இதோ ஒரு பயங்கர உதாரணம்: அக்டோபர் மாதத்தில் 24 மணிநேர இடைவேளையில் அடுத்தடுத்து 7.7 ரிக்டர் அளவில் மாபெரும் நிலநடுக்கமும், கிட்டத்தட்ட 5000 பேரை பலி வாங்கிய சுனாமியும், நான்கு இலட்சம் பேரை பதற வைத்து, பல நூறு பேர்களை பழி வாங்கிய எரிமலையின் சீற்றமும் எல்லோரையும் குலைநடுங்க வைத்துவிட்டன. நூறு வருடங்களில் இதுபோன்ற ஒரு பயங்கர வருடத்தைப் பார்த்ததில்லை என்று விஞ்ஞானிகளும், சுற்றுப்புற ஆர்வலர்களும் பதறும் அளவுக்கு சென்ற ஆண்டு ஏகப்பட்ட பயங்கரங்களை நிகழ்த்தியுள்ளது.  ஜனவரி 2010 ம் ஆண்டு ஹைடியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கிட்டத்தட்ட 220,000 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். பிப்ரவரியில் சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள்.  உலகெங