Skip to main content

கொடிய விஷம் கொண்ட "தங்கத் தவளை''

டே, அவனா நீ?

 உலகத்தில் வசிக்கும் உயிரினங்களில் (மனிதனைத் தவிர) மிகக் கொடிய விஷம் கொண்ட உயிரினம் ஏது என்றால் பெரும்பாலானோர் பாம்பையோ அல்லது சிலந்தியையோ குறிப்பிடுவார்கள். ஆனால், உண்மையில் அத்தகைய பெருமை வெறும் 5cm அளவிலான ஒரு தவளை!

நீரிலும், நிலத்திலும் வாழும் திறன் பெற்ற தவளைகள் மிகவும் சாதுவானவை, ஆபத்தில்லாதவை என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பசிபிக் கடலோரங்களில் வசிக்கும் ஒரு வகை தவளை, கொடிய விஷம் கொண்டது. ஒரே கடியில், மனிதனை பரலோகத்திற்கு அனுப்பும் அளவிற்கு இத்தவளையின் விஷம் ஆபத்தானது. பூமியில் உள்ள உயிரினங்களில் அதிக விஷம் கொண்டது இந்த தவளையினம் என்று ஆராய்ச்சியாளர் கள் கூறுகின்றனர். இந்த, "கோல்டன் டார்ட் பிராக்' (Golden Dart Frog)  கொலம்பியா கடலோரத்தில் உள்ள அடர்ந்த மழைக் காடுகளில் அதிகமாக வாழ் கின்றன. அக்கால கொலம்பிய மக்கள், இத்தவளையின் விஷத்தை பிரித்தெடுத்து, அதை ஈட்டி, அம்பு முனைகளில் தடவி வேட்டைக்கு பயன்படுத்தி யுள்ளனர்.

எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும், தவளை விஷம் தடவப்பட்ட அம்பு தாக்கியவுடன் மயங்கி விழுந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் விஷத்தன்மை கொண்ட தவளைகள் 100 வகை உள்ளன. இவற்றில், "கோல்டன் டார்ட் பிராக்' வகை தவளைகள் தான் பெரியவை. இந்தத் தவளைகளின் உடலில் இருக்கும் batrachotoxin எனப்படும் கொடிய விஷம் உடனடியாக நம் இதயத் துடிப்பை நிறுத்திவிடும். இந்தத் தவளையின் உடம்பில் இருக்கும் 1 mg (மில்லிகிராம்) விஷம் 10-15 மனிதர்களைக் கொள்ளும் திறன் வாய்ந்தது. 


கொலம்பியா காடுகளில் உள்ள குறிப்பிட்ட சில தாவரங்கள், ஈக்கள், வண்டுகள், எறும்புகள், கரையான்கள் ஆகியவையே இவற்றின் முக்கிய உணவு. இத்தவளைகள் வேகமாக அழிந்து வருகின்றன. இதற்கு, மனிதர்களால் தொடர்ந்து மழைக்காடுகள் அழிக்கப்படுவதே காரணம். இன்றைய நிலையில் இந்த தவளை இனம், வேகமாக அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தாவும் தங்கத் தவளைகள் பெரும்பாலும் மஞ்சள் வண்ணத்தில் தோற்றமளிக் கின்றன. இருப்பினும், ஆரஞ்சு, இளம்பச்சை உள்ளிட்ட வண்ணங்களிலும் இவை காணப்படுகின்றன. இந்த தவளைகள் வாழும் இடத்திற்கேற்ப அவற்றின் நிறங்கள் மாறுபடுவதாகவும், இதன் மூலம் இத்தவளைகள் தங்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்கின்றன என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

"தாவும் தங்க தவளை' களின் விஷத் தன்மை குறித்து ஒரு சோதனை மேற் கொள்ளப் பட்டது. அதில், அத்தவளைகளின் இயற்கை யான வசிப்பிடங்களில் இருந்து மாற்றி, வழக்கமான உணவிற்கு பதில் வேறு உணவுகளை கொடுத்தனர். குறிப்பிட்ட சில நாட்களுக்கு பின் சோதனை செய்ததில், அந்த தவளைகள் விஷத்தன்மை மிகவும் குறைந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, அடர்ந்த காடுகளில் காணப்படும் விஷத்தன்மை கொண்ட தாவரங்கள் மற்றும் சிறு பூச்சிகளை உட்கொள்வதால் மட்டுமே இத்தவளைகள் கொடிய விஷத்தை பெறுகின்றன என்று நம்பப்படுகிறது. தற்போது, இத்தவளைகளின் விஷத்தை கொண்டு சக்தி மிக்க வலி நிவாரண மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

நன்றி: www.fact-o-tron.com இணயதளம்

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...