Skip to main content

கொடிய விஷம் கொண்ட "தங்கத் தவளை''

டே, அவனா நீ?

 உலகத்தில் வசிக்கும் உயிரினங்களில் (மனிதனைத் தவிர) மிகக் கொடிய விஷம் கொண்ட உயிரினம் ஏது என்றால் பெரும்பாலானோர் பாம்பையோ அல்லது சிலந்தியையோ குறிப்பிடுவார்கள். ஆனால், உண்மையில் அத்தகைய பெருமை வெறும் 5cm அளவிலான ஒரு தவளை!

நீரிலும், நிலத்திலும் வாழும் திறன் பெற்ற தவளைகள் மிகவும் சாதுவானவை, ஆபத்தில்லாதவை என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பசிபிக் கடலோரங்களில் வசிக்கும் ஒரு வகை தவளை, கொடிய விஷம் கொண்டது. ஒரே கடியில், மனிதனை பரலோகத்திற்கு அனுப்பும் அளவிற்கு இத்தவளையின் விஷம் ஆபத்தானது. பூமியில் உள்ள உயிரினங்களில் அதிக விஷம் கொண்டது இந்த தவளையினம் என்று ஆராய்ச்சியாளர் கள் கூறுகின்றனர். இந்த, "கோல்டன் டார்ட் பிராக்' (Golden Dart Frog)  கொலம்பியா கடலோரத்தில் உள்ள அடர்ந்த மழைக் காடுகளில் அதிகமாக வாழ் கின்றன. அக்கால கொலம்பிய மக்கள், இத்தவளையின் விஷத்தை பிரித்தெடுத்து, அதை ஈட்டி, அம்பு முனைகளில் தடவி வேட்டைக்கு பயன்படுத்தி யுள்ளனர்.

எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும், தவளை விஷம் தடவப்பட்ட அம்பு தாக்கியவுடன் மயங்கி விழுந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் விஷத்தன்மை கொண்ட தவளைகள் 100 வகை உள்ளன. இவற்றில், "கோல்டன் டார்ட் பிராக்' வகை தவளைகள் தான் பெரியவை. இந்தத் தவளைகளின் உடலில் இருக்கும் batrachotoxin எனப்படும் கொடிய விஷம் உடனடியாக நம் இதயத் துடிப்பை நிறுத்திவிடும். இந்தத் தவளையின் உடம்பில் இருக்கும் 1 mg (மில்லிகிராம்) விஷம் 10-15 மனிதர்களைக் கொள்ளும் திறன் வாய்ந்தது. 


கொலம்பியா காடுகளில் உள்ள குறிப்பிட்ட சில தாவரங்கள், ஈக்கள், வண்டுகள், எறும்புகள், கரையான்கள் ஆகியவையே இவற்றின் முக்கிய உணவு. இத்தவளைகள் வேகமாக அழிந்து வருகின்றன. இதற்கு, மனிதர்களால் தொடர்ந்து மழைக்காடுகள் அழிக்கப்படுவதே காரணம். இன்றைய நிலையில் இந்த தவளை இனம், வேகமாக அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தாவும் தங்கத் தவளைகள் பெரும்பாலும் மஞ்சள் வண்ணத்தில் தோற்றமளிக் கின்றன. இருப்பினும், ஆரஞ்சு, இளம்பச்சை உள்ளிட்ட வண்ணங்களிலும் இவை காணப்படுகின்றன. இந்த தவளைகள் வாழும் இடத்திற்கேற்ப அவற்றின் நிறங்கள் மாறுபடுவதாகவும், இதன் மூலம் இத்தவளைகள் தங்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்கின்றன என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

"தாவும் தங்க தவளை' களின் விஷத் தன்மை குறித்து ஒரு சோதனை மேற் கொள்ளப் பட்டது. அதில், அத்தவளைகளின் இயற்கை யான வசிப்பிடங்களில் இருந்து மாற்றி, வழக்கமான உணவிற்கு பதில் வேறு உணவுகளை கொடுத்தனர். குறிப்பிட்ட சில நாட்களுக்கு பின் சோதனை செய்ததில், அந்த தவளைகள் விஷத்தன்மை மிகவும் குறைந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, அடர்ந்த காடுகளில் காணப்படும் விஷத்தன்மை கொண்ட தாவரங்கள் மற்றும் சிறு பூச்சிகளை உட்கொள்வதால் மட்டுமே இத்தவளைகள் கொடிய விஷத்தை பெறுகின்றன என்று நம்பப்படுகிறது. தற்போது, இத்தவளைகளின் விஷத்தை கொண்டு சக்தி மிக்க வலி நிவாரண மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

நன்றி: www.fact-o-tron.com இணயதளம்

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்