Skip to main content

பெட்ரோல் விலையும் பாவப்பட்ட பொது மக்களும்!

பிப்ரவரி 2008 ம் ஆண்டில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.49.61 அப்போதைய கச்சா (crude) விலை ஒரு பேரலுக்கு $92 (அமெரிக்க டாலர்கள்). உலகச் சந்தையில் நேற்றைய கச்சா ஒரு பேரலுக்கு $93. ஆனால் நேற்றைய பெட்ரோல் விலை சென்னையில் ரூ.63.36!!!

ஏன் இப்படி என்றால், 2008 ம் ஆண்டில் பெட்ரோல் விலை நம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது அது பெட்ரோலிய நிறுவனங்கள் வசம் உள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதம் மத்திய அரசு பெட்ரோல் விலைகளை ஏற்றவும், இறக்கவும் (?) முழு அனுமதியை பெட்ரோலிய நிறுவனங்களிடம் தாரை வார்த்துவிட்டது. எப்போதெல்லாம் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் விலை ஏறுகிறதோ, அப்போதெல்லாம் இங்கே பெட்ரோலின் விலையை ஏற்ற அந்த நிறுவனங்களுக்கு முழு அதிகாரமும் தந்தது. 

கடந்த ஆறு மாதங்களில் ஆறு முறை பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டது என்பது என் வீட்டு நாய்க்குக்கூட தெரியும். முன்பு பெட்ரோல் விலை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது APM (Administered Pricing Mechanism) என்று ஒரு வரைமுறை இருந்தது. இதன்படி பெட்ரோல் விலையை ஏற்றியும் (பெரும்பாலான சமயம்), இறக்கியும் (ஒரு சில சமயம்) வந்தது.

பெட்ரோலிய நிறுவனங்கள் இந்த நடைமுறையை எதிர்த்ததால், மத்திய அரசு, உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையை ஒட்டி, பெட்ரோல் விலையை நிர்ணயிக்கலாம் என்று அறிவித்துவிட்டது. இதில் பலியானோர் நம்மைப் போன்ற கோடிக்கணக்கான பொதுமக்கள்தான்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் ஒரு பேரல் விலை $75 க்கு மேலே சென்றால் மத்திய அரசு தலையிட்டு பெட்ரோலிய விலையை சமன் செய்யும் என்று முன்பு கூறி வந்தது. இப்போது அதன் விலை $100 ஐத் தொடப் போகிறது என்று உலகமெங்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. நம் அரசு ஊழல் செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்யாமல் இருக்கிற பட்சத்தில் நாமெல்லாம் பெருத்த அவதிக்குள்ளாகப் போகிறோம். இதைவிடவா என்று கேட்டால், ஆமாம் இதை விட இன்னும் மோசமாகத்தான் போகிறது நிலைமை.

Comments

Unknown said…
இதில் அரசு எண்ணெய் பொதுதுறைக்கு உள்ள ஈடுபாட்டை விட தனியாரான ரிலையன்ஸ்க்கும் எஸ்ஸாருக்கும் நல்ல லாபம் உள்ளது எனக்கு தெரிந்தவரை இந்த நிலைமை பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்திருந்தால் கூட வந்திருக்கும்.
அவர்கள் எங்களுக்கு விலை கட்டுபடி ஆகவில்லை என்று என்றைக்கு கடையை சாத்தினார்களோ அன்றே அரசியல்வாதிகளிடம் இது போல விலை நிர்ணயிக்கும் பேரத்தை ஆரம்பித்து இப்போது வெற்றியும் அடைந்துவிட்டார்கள். இதுவும் ஒருவிதமான பிளாக் மெயில்தான். இப்போது விலை நிர்ணயம் செய்வதெல்லாம் அவர்கள் தான். அரசு எண்ணெய் பொதுதுறையை குறைச் சொல்ல இதில் எதுவும் இல்லை. நமது மானம் கெட்ட இந்தியர்கள் அந்த தனியார் எண்ணெய் கடைகளை மொத்தமாக பகிஷ்கரிப்பு செய்தால்தான் அவர்களுக்கும் இந்த பரதேசி அரசியல்வாதிகளுக்கும் அறிவு வரும். நமக்கு ஏது சூடும் சொரணையும்?

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்