Skip to main content

பெட்ரோல் விலையும் பாவப்பட்ட பொது மக்களும்!

பிப்ரவரி 2008 ம் ஆண்டில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.49.61 அப்போதைய கச்சா (crude) விலை ஒரு பேரலுக்கு $92 (அமெரிக்க டாலர்கள்). உலகச் சந்தையில் நேற்றைய கச்சா ஒரு பேரலுக்கு $93. ஆனால் நேற்றைய பெட்ரோல் விலை சென்னையில் ரூ.63.36!!!

ஏன் இப்படி என்றால், 2008 ம் ஆண்டில் பெட்ரோல் விலை நம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது அது பெட்ரோலிய நிறுவனங்கள் வசம் உள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதம் மத்திய அரசு பெட்ரோல் விலைகளை ஏற்றவும், இறக்கவும் (?) முழு அனுமதியை பெட்ரோலிய நிறுவனங்களிடம் தாரை வார்த்துவிட்டது. எப்போதெல்லாம் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் விலை ஏறுகிறதோ, அப்போதெல்லாம் இங்கே பெட்ரோலின் விலையை ஏற்ற அந்த நிறுவனங்களுக்கு முழு அதிகாரமும் தந்தது. 

கடந்த ஆறு மாதங்களில் ஆறு முறை பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டது என்பது என் வீட்டு நாய்க்குக்கூட தெரியும். முன்பு பெட்ரோல் விலை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது APM (Administered Pricing Mechanism) என்று ஒரு வரைமுறை இருந்தது. இதன்படி பெட்ரோல் விலையை ஏற்றியும் (பெரும்பாலான சமயம்), இறக்கியும் (ஒரு சில சமயம்) வந்தது.

பெட்ரோலிய நிறுவனங்கள் இந்த நடைமுறையை எதிர்த்ததால், மத்திய அரசு, உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையை ஒட்டி, பெட்ரோல் விலையை நிர்ணயிக்கலாம் என்று அறிவித்துவிட்டது. இதில் பலியானோர் நம்மைப் போன்ற கோடிக்கணக்கான பொதுமக்கள்தான்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் ஒரு பேரல் விலை $75 க்கு மேலே சென்றால் மத்திய அரசு தலையிட்டு பெட்ரோலிய விலையை சமன் செய்யும் என்று முன்பு கூறி வந்தது. இப்போது அதன் விலை $100 ஐத் தொடப் போகிறது என்று உலகமெங்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. நம் அரசு ஊழல் செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்யாமல் இருக்கிற பட்சத்தில் நாமெல்லாம் பெருத்த அவதிக்குள்ளாகப் போகிறோம். இதைவிடவா என்று கேட்டால், ஆமாம் இதை விட இன்னும் மோசமாகத்தான் போகிறது நிலைமை.

Comments

Unknown said…
இதில் அரசு எண்ணெய் பொதுதுறைக்கு உள்ள ஈடுபாட்டை விட தனியாரான ரிலையன்ஸ்க்கும் எஸ்ஸாருக்கும் நல்ல லாபம் உள்ளது எனக்கு தெரிந்தவரை இந்த நிலைமை பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்திருந்தால் கூட வந்திருக்கும்.
அவர்கள் எங்களுக்கு விலை கட்டுபடி ஆகவில்லை என்று என்றைக்கு கடையை சாத்தினார்களோ அன்றே அரசியல்வாதிகளிடம் இது போல விலை நிர்ணயிக்கும் பேரத்தை ஆரம்பித்து இப்போது வெற்றியும் அடைந்துவிட்டார்கள். இதுவும் ஒருவிதமான பிளாக் மெயில்தான். இப்போது விலை நிர்ணயம் செய்வதெல்லாம் அவர்கள் தான். அரசு எண்ணெய் பொதுதுறையை குறைச் சொல்ல இதில் எதுவும் இல்லை. நமது மானம் கெட்ட இந்தியர்கள் அந்த தனியார் எண்ணெய் கடைகளை மொத்தமாக பகிஷ்கரிப்பு செய்தால்தான் அவர்களுக்கும் இந்த பரதேசி அரசியல்வாதிகளுக்கும் அறிவு வரும். நமக்கு ஏது சூடும் சொரணையும்?

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...