Skip to main content

கமலின் சமீபத்திய உளறல்

சமீப காலமாக தொடர்ச்சியாக (back to back) கொடுக்கும் எல்லா பேட்டிகளிலும் கமலின் உளறல் அதிகமாக ஆகியிருக்கிறது. என்னதான் பேசுகிறோம் என்று வகை தொகை தெரியாமல் கமலின் உளறல்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

இளையராஜா மற்றும் எம்.எஸ்.வி ஆகியோருக்குப் பிறகு அந்த இடம் காலியாக இருக்கிறது அதை நிரப்பும் தகுதி தேவிஸ்ரீ பிரசாத் அவர்களுக்கு இருக்கிறது என்பது கமலின் லேட்டஸ்ட் அபத்தமான உளறல்.

வயதாகி விட்டதால், இந்தியாவே பெருமைப்படும் இரண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கியிருக்கும் ஏ. ஆர். ரஹ்மானின் சாதனைகள் இந்தாளுக்குத் தெரியவில்லையா அல்லது வேண்டுமென்றே சொல்கிறாரா என்று தெரியவில்லை. சமீப காலமாக ஹிட்டுக்கு மேல் ஹிட்டாக கொடுத்துக் கொண்டிருக்கும் யுவன் ஷங்கர் ராஜா, ஜீ. வி. பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் கமல் கண்களுக்குத் தெரியவில்லையா.

இதைப் பற்றி பெரும்பாலான இசை அமைப்பாளர்கள் கருத்து சொல்ல மறுத்திருப்பது அவர்களுக்கு இருக்கு மெச்சுரிட்டி லெவலை காட்டுகிறது. கமலுக்கு ஆதரவாக சிலர் அவர் தேவிஸ்ரீ பிரசாத் பெரிய அளவில் வரவேண்டும் என்று அப்படி சொல்லியிருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஓகே, கமல் எப்படி இதை சொல்லிருக்க வேண்டுமென்றால் தேவிஸ்ரீ பிரசாத் இளையராஜா மற்றும் எம்.எஸ்.வி லெவலுக்கு வரவேண்டும், அதற்காக இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கலாம்.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையைப் பற்றி நான் குறை கூற விரும்பவில்லை. அவருடைய சமீபத்திய பாடல்கள் எல்லாமே நல்ல ஹிட்டாகி உள்ளன. சிங்கம் படப் பாடல்கள் போல மன்மதன் அம்பு பாடல்களும் பெரிய ஹிட்டாகி இருக்கலாம், ஆனால் கமல் அதிலும் தன்னுடைய மூக்கை நுழைத்தால் இந்தப் படத்தின் எந்த பாடலுமே பெரிய அளவில் ரீச்சாகாமல் போய்விட்டன. இந்த லட்சணத்தில் இந்த மாதிரி அபத்தமான கமெண்ட் தேவையா? 

Comments

mouravi said…
கமலை தெய்வமாக கொண்டாடிய நீயா இப்படி கமலை திட்டுவது?

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்