Skip to main content

நல்ல கவிதை ஒன்று...

அப்படி என்னதான் பிஸியோ, என்னதான் ஆயிற்று உன் பதிவுகளுக்கு, ஏன் இந்த இடைவெளி என்றெல்லாம் சில நல்ல நண்பர்கள் என்னை அலைபேசியில் குடைந்து எடுத்துவிட, இதோ, கிளம்பிடோம்ல? இனிமே நிச்சயம் வாரம் ரெண்டு பதிவாவது இருக்கும் மக்களே.

சமீபத்தில் நான் மிகவும் ரசித்த ஒரு கவிதையை கீழே கொடுத்துள்ளேன்: (அட்ரா சக்க வலைப்பதிவில் நண்பர் சி.பி செந்தில்குமார் கணையாழி கவுரவித்த என் முதல் கவிதை என்ற பெயரில் எழுதியது). நண்பருக்கு நன்றி.

ஒரு பார்வை இல்லாதவன் எழுதிய கவிதை மாதிரி
ஜோடனை இல்லாத பிம்பமாய்
உன் முகம் இருக்கும்.

சொர்க்கத்துக்குப்போடப்பட்ட
ஒற்றையடிப்பாதை மாதிரி
உன் தலை வகிடு இருக்கும்.

பளிங்குக்கற்களில் ஊற்றிய
பாதரசம் போல்
அலை பாய்ந்து கொண்டே
உன் கண்கள் இருக்கும்.

நிறத்தில்,நீளத்தில்,அடர்த்தியில்
இருட்டுக்கு சவால் விடும் கர்வத்தில்
உன் கூந்தல் இருக்கும்.

ஓஸோன் காற்றின் சுத்தீகரிப்புக்கேந்திரமாய்
உன் நாசி இருக்கும்.

தேனில் ஊறிய இரு துண்டுக்ள் போல்
உன் உதடுகள் இருக்கும்.


பருத்திப்பூக்களை இரண்டு பக்கமும்
வைத்துக்கட்டியது போல்
நத்தைக்கு ஒரு ஆழாக்கு அதிகமான
மென்மையில்
உன் கன்னக்கதுப்புகள் இருக்கும்.

இருக்கிறதா,இல்லையா என்ற சந்தேகத்தில்
கடவுளுக்கு அடுத்த சர்ச்சையாய்
நாத்திகவாதிகளுக்கு சவால் விடும்
சர்ச்சைப்பொருளாய்,
இல்பொருள் உவமை அணிக்கு
மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய்
உன் இடை இருக்கும்.

குயில்கள் வெட்கப்பட்டுக்கூட்டுக்குள்
ஒளிந்து கொள்ளும் விதமாய்
உன் குரல் இருக்கும்.

நல்லவரோ,கெட்டவரோ
எல்லா மனிதரிடத்தும்
ஒரு மனித நேயம் மறைந்து கிடப்பது மாதிரி
உனக்கும் ஒரு ஓரத்தில்
ஒரு இதயம் இருக்கும்.

அதில் எனக்கு ஒரு இடம் இருக்குமா?


(இதைப் போன்ற நல்ல கவிதைகளை தொடர்ந்து தர நண்பரை வேண்டுகிறேன்).

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்