Skip to main content

இந்தியா பாகிஸ்தானை மண் கவ்வச் செய்தது!

ஒரு அட்டகாசமான அரையிறுதி ஆட்டம் முடிந்தது. இதற்கு முன் இலங்கை-நியூசிலாந்து இடையே நடந்த போட்டியைப் போல இந்தப் போட்டி உப்புசப்பு இல்லாத ஆட்டமாக இல்லாதது ஒரு பெரிய ஆறுதல். சச்சின், சேவாக், சுரேஷ் ரைனா ஆகியோர் மிக அற்புதமாக விளயாடி இந்தியாவின் ஸ்கோரை 260 ரன்களுக்கு உயர்த்த உதவி செய்தனர் என்பதை மறுக்க முடியாது என்றாலும், நம்முடைய பௌலர்கள் ஐவரும் ஆளுக்கு தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்தார்கள்.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் அப்ரிதி ஆரம்பம் முதல் மிகவும் மிதப்பாகவே இருந்தது போல எனக்கு தோன்றியது. பாகிஸ்தான் அணி இதற்கு முன் நம்முடன் மோதிய எந்த உலகக்கோப்பை போட்டியிலும் வென்றதில்லை என்பதை மறந்துவிட்டு எதோ இந்தியாவை ஏற்கனவே தோற்கடித்துவிட்ட மாதிரி ரொம்பவும் தெனாவெட்டாக இருந்ததாலோ என்னவோ போட்டியில் அசிங்கமாகத் தோற்க நேர்ந்தது என நினைக்கிறேன்.

உலககோப்பை இறுதி போட்டிக்கு செல்லும் இந்தியாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இங்கு சில நெருடலான விஷயங்களையும் சொல்ல வேண்டும்.

  1. பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் விராத் கோலி இன்னமும் நம் அணியில் இருக்க வேண்டுமா?
  2. தோனியின் பேட்டிங் இன்னமும் தேறவில்லை. பரிதாபமாக இருக்கிறது. என்ன ஆயிற்று தோனி?
  3. பீல்டிங்கில் இன்னமும் தேர்ச்சி வேண்டும். குறிப்பாக, ஹர்பஜன் சென்னை 28 இல் வரும் பிரேம்ஜி மாதிரி ஒரு பந்தைக்கூட பிடிக்க முடியாது திணறுகிறார். ஜாக்கிரதை பாஜி.
  4. இறுதிப் போட்டியில் கௌதம் காம்பிர் இன்னமும் ஜாக்கிரதையாக விளையாட வேண்டும்.
வெற்றிப் பயணம் தொடரட்டும். கோப்பையை வெல்லுவோம். ஜெய்ஹிந்த்!!

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்