Skip to main content

"டை" யில் முடிந்த இந்திய-இங்கிலாந்து போட்டி - அலசல் ரிப்போர்ட்

 

நல்ல வேளை, தோற்கவில்லை மேட்ச் டையில் முடிந்தது என்று சமாதானம் சொல்லிக்கொண்டாலும், இந்த மேட்சில் சுலபமாக இந்திய அணி வெற்றி பெற்றிருக்க முடியும் என்பதே என் கருத்து.

முதலில் மேட்சில் நமக்கு சாதகமாக நடந்த விஷயங்களை அலசி விடுவோம்:

சச்சின்- தொடரும் சாதனைகள்!
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ரன், அதிக சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், உலக கோப்பை அரங்கிலும் பல சாதனைகள் படைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், 115 பந்தில் 120 ரன்கள் (5 சிக்சர், 10 பவுண்டரி) எடுத்த சச்சின், உலக கோப்பை வரலாற்றில் அதிக சதம் (5) கடந்து புதிய உலக சாதனை படைத்தார். இதுவரை இவர், 38 போட்டியில் பங்கேற்று 5 சதம், 13 அரைசதம் உட்பட 1944 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் கங்குலி, ஆஸ்திரேலியாவின் குரங்கு பாண்டிங், மார்க் வா உள்ளிட்டோர் தலா 4 சதம் அடித்து 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
 

சச்சின், உலக கோப்பை அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை இலங்கையின் ஜெயசூர்யா, பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலியாவின்  குரங்கு பாண்டிங் (41 போட்டி), மெக்ராத் (39 போட்டி) ஆகியோர் உள்ளனர்.

உலக கோப்பை அரங்கில், 2000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்ட, சச்சினுக்கு இன்னும் 56 ரன்கள் தேவைப்படுகிறது. இதுவரை இவர் 38 போட்டியில் பங்கேற்று 1944 ரன்கள் எடுத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில், ஒருநாள் (47) மற்றும் டெஸ்ட் (51) போட்டியில் சேர்த்து மொத்தம் 98 சதம் அடித்துள்ள சச்சின், இன்னும் இரண்டு சதம் அடிக்கும் பட்சத்தில், சதத்தில் சதம் கடந்து மேலும் ஒரு புதிய சாதனை படைக்கலாம்.
 
இந்தப் போட்டியில் மொத்தம் 10 பவுண்டரி அடித்த சச்சின், தனது 7வது பவுண்டரியை கடந்த போது, உலக கோப்பை அரங்கில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட பவுண்டரி அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். இதுவரை இவர் 38 போட்டியில் 203 பவுண்டரி அடித்துள்ளார்.
 
இந்தப் போட்டியில் 5 சிக்சர் விளாசிய சச்சின், அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார். இவர் இதுவரை 24 சிக்சர் விளாசியுள்ளார். முதலிடத்தில் மற்றொரு இந்திய வீரர் கங்குலி (25 சிக்சர்) உள்ளார்.

இந்தப் போட்டியில் 35 ரன்கள் எடுத்த இந்திய துவக்க வீரர் சேவக், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக சச்சின் (1455 ரன்கள்), யுவராஜ் சிங் (1187 ரன்கள்) உள்ளிட்டோர், இப்பெருமை பெற்றனர்.

சரி, நம் அணி எங்கே, எதில் சொதப்பியது என்பதையும் பார்ப்போம்: 
  • 305 / 4  என்றிருந்த ஸ்கோர் சட்டென 338 ஆல் அவுட் என்று ஆனது பெரிய கொடுமை. 
  • யூசுப் பதானை முதலில் விளையாட விடாமல் தோனி வந்தது ஏன்? 
  • தோனி 25 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தாலும், அந்த இடத்தில் பதான் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க முடியும்.
  • விராட் கோலி, பதான் இருவருமே கொஞ்சம் பொறுமையாக விளையாடி இன்னும் ஒரு 15 - 20 ரன்களை சேர்த்திருக்கலாம்.
  • ஜாகிர் ஓவர்களை முதலிலேயே காலி செய்துவிட்டு கடைசியில் சாவ்லாவின் ஸ்பின் பௌலிங்கில் இங்கிலாந்து ரன்களை குவிக்க நாமே வழி செய்தது இன்னும் கொடுமை.
  • இதைவிட சொதப்பலாக பீல்டிங் செய்ய முடியாது. 
ம்ம்ம்ம்...இன்னும் நிறைய போட்டிகள் இருக்கின்றன. இந்திய அணி வெற்றி மேல் வெற்றி பெறட்டும்.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...