Skip to main content

நிஷ்களங் மகாதேவ்: கடல் நடுவே ஒரு சிவன் கோயில். கடல் உள்வாங்கும் ஒரு அதிசயம்!

நிஷ்களங் மகாதேவ் கோயில்-கடற்கரையில் இருந்து 


கடல் உள்வாங்கிய பிறகு -கோயிலின் தோற்றம் 

கடல் நடுவே இருக்கும் சிவனுக்கு ஆராதனை

சமீபத்தில் சன் டி.வியில் ஒளிபரப்பட்டு மிகப் பிரபலமடைந்த கடல் கோயில்  நிகழ்ச்சியை பார்க்கவில்லையா என என் நண்பர் ஒருவர் கேட்டபோது, இன்டர்நெட் துணை இருக்கும்போது என்ன கவலை என்று நினைத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியையும், அதன் பின்புல தகவல்களையும் தேடிய போது பல ஆச்சரியமான விஷயங்களை சந்திக்க முடிந்தது.

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் கொலியாக் என்ற இடத்தில் இருக்கும் இந்த அற்புதமான கோயிலைப் பற்றி:

கொலியாக் பாவ்நகரில் இருந்து 23 கி.மீ. கிழக்கில் இருக்கிறது. அரபிக் கடலின் ஓரத்தில் இருக்கும் இந்த சின்ன கிராமத்தில் மாதம் ஒருமுறை  இந்த அற்புதம் நிகழ்கிறது. 

இங்கு கடல் நடுவே ஒரு கொடிக் கம்பமும், ஒரு கல் தூணும் மிகத் தொலைவிலிருந்தே தெரிகின்றன. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு அடுத்த நாள் காலை கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் கூடுகிறது.  காலை சுமார் 9  மணிக்கு மேல் மெதுவாக கடல் உள்வாங்குகிறது. கொஞ்சம், கொஞ்சமாக கல் தூண் மற்றும் கொடிக்கம்பம் தெளிவாகத் தெரிவதுடன், ஒரு பெரிய சமவெளியில் சிறிய இடைவெளியில் 5 சிவலிங்கங்களும் காட்சி தருகின்றன. பக்தர்கள் நிதானமாக கடல் உள்வாங்கிவிட்ட மணல் பரப்பில் நடந்து சென்று கோயிலை அடைகிறார்கள். கையில் கொண்டுவந்துள்ள பூ மற்றும் பால் ஆகிவற்றை அங்குள்ள லிங்கம் ஒவ்வொன்றின் மேலும் படைக்கிறார்கள். பஜனை செய்கிறார்கள். கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட
1.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த கடல் கோயில். நிஷ்களங் மகாதேவ் என்றால் பாவத்தைப்  போக்குகிறவர், எந்தவித களங்கமும் இல்லாதவர் என்று பொருள் சொல்கிறார்கள்.

மாலை நெருங்குகிறது. ஒவ்வொருவராக கடற்கரைக்கு திரும்பி வர ஆரம்பிக்கும்போது கடல் மீண்டும் அந்தக் கோயிலை முழுதாக ஆக்கிரமிக்கிறது. மீண்டும் கொடிக் கம்பமும், கல் தூணும் மட்டுமே தெரிகின்றன. நண்பர் சிவா இந்தப் பதிவை படித்துவிட்டு, இதுபோன்ற கடல் உள்வாங்கும் சமாச்சாரம் இந்தியாவிலேயே அந்தமான், லட்சத்தீவு ஆகிய இடங்களில் மாதம் ஒரு முறை கடல் உள்வாங்குகிறது, ஆங்கிலத்தில் இதை இஸ்துமஸ் (Isthumus) என்று சொல்லியிருக்கிறார். நன்றி நண்பரே. உண்மைதான், பல இடங்களில் கடல் இது போல உள்வாங்கலாம், ஆனால், அந்தக் கடல் நடுவே ஒரு புராதனமான சிவன் கோயில் இருப்பது இங்கு மட்டுமே, அதுவே இந்த இடத்தின் சுவாரசியம்.

பாண்டவர் காலத்து கோயில் என்கிறார்கள். உண்மை அந்த சிவனுக்கே வெளிச்சம். இத்துடன் சன் டி.வியில் ஒளிபரப்பிய நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பை இணைத்திருக்கிறேன்.



                                              கடல் கோயில் - வீடியோ பகுதி 1


                                             
                                             கடல் கோயில் - வீடியோ பகுதி 2

(நன்றி: சன் டி.வி மற்றும் இந்த வீடியோவை You Tube இல் இணைத்த அந்த முகம் தெரியாத நண்பருக்கும்).

Comments

படங்கள் அருமை..தகவலுக்கு நன்றி..
புதிய தகவல்.

ஆச்சரியம் ஆனால் உண்மை!!!!!

அறியத் தந்தமைக்கு நன்றி.
Arun Ambie said…
மிக நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி. நமச்சிவாய வாழ்க.

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்