Skip to main content

ஆஸ்கர் பரிசளிப்பு விழா - வெற்றி பெற்ற படங்கள்

தி ஃ பைட்டர்  (The Fighter) - திரைப்பட விமர்சனம்




பாக்சிங் எனப்படும் குத்துச் சண்டை போட்டிகளை மையமாக வைத்து ரேஜிங் புல் (Raging Bull ), ராக்கி (Rocky ), தி மில்லியன் டாலர் பேபி (The Million Dollar Baby ), அலி (Ali ) போல நிறைய படங்கள் வந்து விட்டன. இதில் அலி போன்ற படங்கள் "பயோ-பிக்" (Bio - pic ) என்ற வகையைச் சார்ந்தவை. அதாவது ஒரு பிரபலத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள படம் தி ஃ பைட்டர்  (The Fighter). 

குத்துச் சண்டை போட்டிகளில் ஹெவி வெயிட், லைட் ஹெவி வெயிட், மிடில் வெயிட், வெல்டர் வெயிட் (Welter weight ) என்று பல வகைகள் உண்டு.  இந்தப் போட்டிகளில் பங்குபெறும் போட்டியாளர்களின் உடல் கனம் (வெயிட்) அந்தந்த போட்டிகளுக்கு ஏற்றவாறு மாறும். 

ராக்கி, அலி போன்ற படங்கள் ஹெவி வெயிட் போட்டியாளர்களைப் பற்றிய படங்கள், தி ஃ பைட்டர் வெல்டர் வெயிட் போட்டியாளரை முன் வைத்து எடுத்த படம். வசூலில் மட்டுமல்லாது, சிறந்த திரைப்படம் என பல்வேறு குத்துச் சண்டை வல்லுனர்களும் பாராட்டிய படம் இது. கொஞ்சம் தாமதமாக இங்கு வந்திருக்கிறது.

இதில் மார்க் வால்பர்க்கின் அண்ணனாக, முன்னாள் வீரனாக, இந்நாள் போதை மருந்துக்கு அடிமையாக நடித்துள்ள கிறிஸ்டியன் பேல் மற்றும் இந்த இருவரின் தாயாராக நடித்துள்ள மெலிஸ்ஸா லியோ ஆகிய இருவருக்கும் ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன.

கதாநாயகன் மிக்கி வார்ட் (மார்க் வால்பர்க்) ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவன். அவனுடைய அண்ணன் டிக்கி எக்லன்ட் (கிறிஸ்டியன் பேல்) ஒரு முன்னாள் வெல்டர் வெயிட் சாம்பியன். ஆனால் இப்போது போதை மருந்துக்கு அடிமையானவன். என்னதான் திறமையானவன் என்றாலும் அவனுடைய பயிற்சியளிப்பு அவ்வளவாக சரியில்லாத காரணத்தினால் மிக்கி பங்குபெறும் எல்லா போட்டிகளிலும் தோல்வி அடைகிறான். டிக்கியை விடுத்தது அவன் வேறு யாரிடமும் பயிற்சி பெறக்கூடாது என அவன் தாய் பிடிவாதமாக இருக்கிறாள். 

தொடர்ந்து தோல்வியைச் சந்திக்கும் மிக்கி நொந்து போகிறான். அப்போது அவனுடைய முன்னாள் கல்லூரித் தோழி சார்லீன் (ஆமி ஆடம்ஸ் ) அவனுக்கு ஆதரவாக இருக்கிறாள். மிக்கி அந்தக் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வந்து ஒரு தேர்ந்த பயிற்சியாளரிடம் பயிற்சி பெற வேண்டும் என சொல்கிறாள். மிக்கிக்கும் அது சரி என்றே படுகிறது. ஆனால், அவனுடைய தாய் மற்றும் சகோதரிகள் அதை வன்மையாக எதிர்க்கிறார்கள். மிக்கி அவனுடைய சகோதரன் டிக்கியிடம் மட்டுமே பயில வேண்டும் என்கிறார்கள். 

இந்த சந்தர்பத்தில் மிக்கியின் தந்தை அவனுக்கு உதவ முன் வருகிறார். டிக்கி மற்றும் மிக்கியின் தாய் ஒருவரே என்றாலும் இருவருக்கும் வெவ்வேறு தந்தைகள். எனவே மாற்றான் தந்தைக்கு பிறந்த டிக்கி, மிக்கிக்கு சரியான முறையில் பயிற்சி அளிக்க முடியாது என்று மிக்கியின் தந்தையும் நம்புகிறார்.

குடும்பத்தின் பிடியிலிருந்து வெளியேறி வெற்றி மேல் வெற்றி பெரும் மிக்கி தன்னுடைய குடும்பத்தையோ, சகோதரனையோ வெறுப்பதில்லை. மாறாக தன்னுடைய சகோதரன் போதை பழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டுமென விரும்புகிறான். 

ஒரு உண்மையான சம்பவத்தை பின்னணியில் வைத்து மிகவும் அருமையான முறையில் எடுக்கப்பட்டுள்ள படம்.
  • 25  மில்லியன் அமெரிக்க டாலர்களில் மார்க் வால்பர்க் தயாரித்து நடித்துள்ள இந்தப் படம் ஏற்கனவே 300 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சம்பாதித்துவிட்டது. 
  • பேட் மேன் படங்களில் கதாநாயகனாக நடித்து பெரும் புகழ் பெற்ற கிறிஸ்டியன் பேல் ஒரு சாதாரணமான இரண்டாவது ஹீரோ பாத்திரத்தில், குறைந்த சம்பளத்தில் நடித்துள்ளார். 
  • போதைப் பழக்கத்துக்கு அடிமையாக நடிக்க பல நாட்கள் சரியாக சாப்பிடாமல், உடலை மெலிய வைத்து வெற்றிகரமாக நடித்த பேலுக்கு கிடைத்த விருது உண்மையிலேயே சரியான மரியாதை.
  • படத்துக்கு ஒரு பழைய லுக் வரவேண்டுமென 1990 களில் உபயோகப்படுத்திய கேமராக்களை வைத்து படமாக்கியுள்ளனர். 
  • கிறிஸ்டியன் பேல் மற்றும் மார்க் வால்பர்க் இருவரும் இதற்கு முன் சேர்ந்து நடித்ததில்லை என்றாலும் இந்தப் பாத்திரத்திற்கு பேல் மிகப் பொருத்தமாக இருப்பார் என மார்க் நம்பியதால் பேல் ஒப்புக்கொண்டார். 
ஆஸ்கர் விருது பெற்ற படங்களின் விமர்சனம் தொடரும்....

Comments

S. Ravichandran said…
Very Interesting and happy that you brought this to my light.
Thanks Sridhar

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்