Skip to main content

2008 ம் ஆண்டை குடும்பத்துடன் வரவேற்போம்

புது வருடம் பிறக்கும் முன் எல்லோரும் குடும்பத்துடன் சந்திக்கும் ஒரு நல்ல நிகழ்ச்சி நடந்தேற எல்லாம் வல்ல வல்லக்கோட்டை முருகனைப் பிரார்த்திக்கிறேன். இது என் ஆறு வருட கனவு. 1998 இல் சென்னை மாற்றலாகி வந்தபின் நான் அடிக்கடி சந்தித்த மூன்று பேர் சாயீ, Berger ரவி, மற்றும், நல்லவரெல்லாம் சீக்கிரமே இறைவனிடம் போய்விடுவார்கள் என்ற கூற்றை உண்மையாக்கிய, முகுந்தும்தான்.

பிறகு மெதுவாக ஷங்கர், குஞ்சிலி, முருகன் என்று மறுபடியும் வட்டம் பெரிதானாலும் அடிக்கடி சந்திப்பது என்பது மிக, மிக அரிதாகவே நடந்தது. பிறகு மெதுவாக ஷங்கர் பெங்களூர் சென்றதும், சேகர் மற்றும் குமாரை எதேச்சையாக ரவி ஒரு நாள் சந்தித்ததும், ராஜ்குமாருடன் மறுபடி தொலை தொடர்பு ஏற்பட்டதும், செழியனை அவன் அலுவகத்தில் சந்தித்ததும்(நீ வயசான மாதிரி ஆயிட்ட, ஆனா திடீர்னு எப்படி கடலூர்ல இருந்ததைவிட tall ஆயிட்ட? போன்ற செழியனின் கேள்விகளுக்கு என்னால் அப்போது பதில் சொல்ல முடியவில்லை), கோபாலபுரத்தில் ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறிய போது, அருகில் சென்ற காரில் இருந்து சாம்பா திடீரென வெளிப்பட்டது ஒரு ஆச்சர்யமான சம்பவம் என்றால், அவன் சொல்லாமல் கொள்ளாமல் டெல்லிசென்றதும், பின்னர் அவனே ஒரு நாள் தொலைபேசியில் கூப்பிட்டு Nestle க்காக event நடத்த முடியுமா என்று ஆசையை வளர்த்துவிட்டு பின் தொடர்பே இல்லாமல் போனதும், வேறு பல விஷயங்களும் நடந்தும், நடக்காமல் இழுத்துக்கொண்டே போன (போகும்?) விஷயம் நாம் எல்லோரும் குடும்பத்துடன் சந்திக்கும் விஷயம்தான்.

மறக்காமல், மறுக்காமல், எல்லோரும் 30 ம் தேதி மாலையில் சந்திக்கலாம். ரவி, உன்னுடைய மீட்டிங்கை சீக்கிரம் முடித்துவிட்டு வந்துவிடு. ஷங்கர் இதற்காக மெனக்கெட்டு அவனுடைய foreign tour ஐ முடித்துக்கொண்டு நேராக சென்னைக்கு குடும்பத்துடன் வருவதால் இந்த ஏற்பாடு.

இது வரை சேகர், நரசிம்மன், குமார், குஞ்சிலி, ரவி, ஷங்கர் ஆகியோர் சம்மதம் கொடுத்துவிட்டனர்.
செழியன், சாயீ, ராஜ்குமார், முருகன, ஸ்ரீதர்-சீக்கிரம், please.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...