Skip to main content

2008 ம் ஆண்டை குடும்பத்துடன் வரவேற்போம்

புது வருடம் பிறக்கும் முன் எல்லோரும் குடும்பத்துடன் சந்திக்கும் ஒரு நல்ல நிகழ்ச்சி நடந்தேற எல்லாம் வல்ல வல்லக்கோட்டை முருகனைப் பிரார்த்திக்கிறேன். இது என் ஆறு வருட கனவு. 1998 இல் சென்னை மாற்றலாகி வந்தபின் நான் அடிக்கடி சந்தித்த மூன்று பேர் சாயீ, Berger ரவி, மற்றும், நல்லவரெல்லாம் சீக்கிரமே இறைவனிடம் போய்விடுவார்கள் என்ற கூற்றை உண்மையாக்கிய, முகுந்தும்தான்.

பிறகு மெதுவாக ஷங்கர், குஞ்சிலி, முருகன் என்று மறுபடியும் வட்டம் பெரிதானாலும் அடிக்கடி சந்திப்பது என்பது மிக, மிக அரிதாகவே நடந்தது. பிறகு மெதுவாக ஷங்கர் பெங்களூர் சென்றதும், சேகர் மற்றும் குமாரை எதேச்சையாக ரவி ஒரு நாள் சந்தித்ததும், ராஜ்குமாருடன் மறுபடி தொலை தொடர்பு ஏற்பட்டதும், செழியனை அவன் அலுவகத்தில் சந்தித்ததும்(நீ வயசான மாதிரி ஆயிட்ட, ஆனா திடீர்னு எப்படி கடலூர்ல இருந்ததைவிட tall ஆயிட்ட? போன்ற செழியனின் கேள்விகளுக்கு என்னால் அப்போது பதில் சொல்ல முடியவில்லை), கோபாலபுரத்தில் ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறிய போது, அருகில் சென்ற காரில் இருந்து சாம்பா திடீரென வெளிப்பட்டது ஒரு ஆச்சர்யமான சம்பவம் என்றால், அவன் சொல்லாமல் கொள்ளாமல் டெல்லிசென்றதும், பின்னர் அவனே ஒரு நாள் தொலைபேசியில் கூப்பிட்டு Nestle க்காக event நடத்த முடியுமா என்று ஆசையை வளர்த்துவிட்டு பின் தொடர்பே இல்லாமல் போனதும், வேறு பல விஷயங்களும் நடந்தும், நடக்காமல் இழுத்துக்கொண்டே போன (போகும்?) விஷயம் நாம் எல்லோரும் குடும்பத்துடன் சந்திக்கும் விஷயம்தான்.

மறக்காமல், மறுக்காமல், எல்லோரும் 30 ம் தேதி மாலையில் சந்திக்கலாம். ரவி, உன்னுடைய மீட்டிங்கை சீக்கிரம் முடித்துவிட்டு வந்துவிடு. ஷங்கர் இதற்காக மெனக்கெட்டு அவனுடைய foreign tour ஐ முடித்துக்கொண்டு நேராக சென்னைக்கு குடும்பத்துடன் வருவதால் இந்த ஏற்பாடு.

இது வரை சேகர், நரசிம்மன், குமார், குஞ்சிலி, ரவி, ஷங்கர் ஆகியோர் சம்மதம் கொடுத்துவிட்டனர்.
செழியன், சாயீ, ராஜ்குமார், முருகன, ஸ்ரீதர்-சீக்கிரம், please.

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்