Skip to main content

வேண்டாம் இந்த ஐ.பி.எல்.! - தினமணி நாளிதழின் இணைய தளத்தில் 17 மே அன்று வெளியான கட்டுரை

 
இந்தியன் பிரீமியர் லீக்' (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டியில் "ஸ்பாட் பிக்ஸிங்' செய்ததாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 பேர் தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், ஐ.பி.எல். விளையாட்டுப் போட்டிகள் தடை செய்யப்பட வேண்டிய நேரம் வந்தாகிவிட்டது என்பதைத்தான் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 

இந்த நிகழ்வுகளுக்கு அடிப்படைக் காரணம், கிரிக்கெட் ஒரு மிகப்பெரும் வர்த்தகமாக மாற்றப்பட்டிருப்பதுதான் என்பதையும், அளவுக்கு அதிகமான லாபம் கொழிக்கும் வியாபாரத்தில் முறைகேடுகளும் அதிகமாக மண்டிக்கிடக்கும் என்பதையும் புரிந்துகொண்டால், கிரிக்கெட் ரசிகர்களே இந்த ஐ.பி.எல். விளையாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்புவார்கள்.

"டுவிட்டர்', "பேஸ்-புக்' போன்ற சமூக வலைத்தளங்களில் இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் பலரும் கேட்கும் கேள்விகள் நியாயமானவை.

ஐ.பி.எல். விளையாட்டில் பங்குபெறும் அணியின் முதலாளிகள் தங்களுக்குள் பேசி முடித்து "மேட்ச் பிக்ஸிங்' செய்வதே கிடையாதா? அது குற்றமில்லையா? என்று நாம் கேட்கவில்லை, டுவிட்டரில் கேட்கிறார் ஒருவர்.

குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் மூவரையும் சஸ்பெண்ட் செய்த பி.சி.சி.ஐ.யின் செயல் மிகவும் அவசரமான முடிவு என்று நாம் சொல்லவில்லை, பேஸ்புக்கில் பதிவு செய்கிறார் மற்றொருவர். 

விளையாட்டின் நடுவே, இன்றியமையாத வேளையில், வேண்டுமென்றே தவறு செய்தல் அல்லது சரியாக விளையாடாமல் இருப்பதற்காக (ஸ்பாட் பிக்ஸிங்) முன்பணம் வாங்கியதாக ஸ்ரீசாந்த் மீதான குற்றம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் தில்லி போலீஸாரால் கைது செய்யப்படுவாரேயானால், ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி பல கோடி ரூபாய் அன்னிய முதலீட்டை ஏற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட் வாரிய (பி.சி.சி.ஐ.) நிர்வாகிகள், ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை? என்று நாம் கேட்கவில்லை, விவரம் தெரிந்த அனைவருமே கேட்கிறார்கள்.

ஐ.பி.எல். அணிகள் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இன்டியன்ஸ் ஆகியன மோரிஷஸ், பகாமா, பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலண்ட் ஆகிய நாடுகள் வழியாக அன்னிய முதலீட்டைக் கொண்டுவந்திருப்பது குறித்து, ரிசர்வ் வங்கி அறிக்கையின் அடிப்படையில் இந்தக் குற்றத்துக்காக பி.சி.சி.ஐ. மற்றும் ஐ.பி.எல். நிர்வாகிகள் அனைவரும் நாடாளுமன்றக் குழுவால் விசாரிக்கப்பட்டனர். 

ஐ.பி.எல். நடத்திய போட்டிகளின் லாபத்தில் ரூ.160 கோடி வருமான வரி ஏய்ப்பு செய்திருக்கிறது. இதற்காக வருமான வரித் துறை 96 நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் 2011-இல் ஒரு கேள்விக்குப் பதில் அளித்தபோது குறிப்பிட்டார். அன்னிய செலாவணிச் சட்டத்தை மீறி ரூ.1,077 கோடி பணம் ஐ.பி.எல். அணிகளுக்கு வந்துள்ளது குறித்து அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருவதாகவும் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார். ஆனால் யார் மீதும் எந்த ஒரு குற்றத்துக்காகவும் இன்றுவரையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்காதீர்கள். காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் சசி தரூர், ராஜீவ் சுக்லா, பாஜகவின் அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக குடும்பத்தைச் சேர்ந்த "சன்' குழுமத் தலைவர் கலாநிதி மாறன் என்று இதில் தொடர்புடையவர்கள் எல்லோரும் அரசியல் பெரும்புள்ளிகள் எனும்போது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்?
ஒவ்வொரு ஐ.பி.எல். விளையாட்டின்போதும் ஒளிபரப்பு, பார்வையாளர் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் தொகைக்கு ஏற்ப வரியை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்பதை அரசு கட்டாயப்படுத்தியிருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?

இந்திய விளையாட்டுக்கும், இந்திய கலாசாரத்துக்கும் பொருந்தாத வகையில் விளையாட்டு அரங்கில் பார்வையாளர்களுக்குக் கிளர்ச்சியூட்ட "சியர் கேர்ள்ஸ்' (கிளுகிளுப்புக் காரிகையர்) நடனம் குறித்து எழுந்த விமர்சனங்களைக்கூட பி.சி.சி.ஐ. கண்டு கொள்ளவில்லை. அரசு இந்த விரசத்தைத் தடுத்திருக்க வேண்டாமா?

ரசிகர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கத்தான் இந்த விளையாட்டு என்றால், "ஸ்பாட் பிக்ஸிங்கை'விட மிக மோசமான சூதாட்டம் இவர்களது விளையாட்டல்லவா? அதைத் தடை செய்திருக்க வேண்டாமா அரசு?
இந்த விவகாரத்தில் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகவும், தொலைபேசி உரையாடல்கள் இந்த "ஸ்பாட் பிக்ஸிங்' பேரத்தை, முன்பணத்தை உறுதி செய்திருப்பதாகவும் தில்லி போலீசார் கூறுகின்றனர். இந்த கிரிக்கெட் "ஸ்பாட் பிக்ஸிங்' விவகாரத்தில் தலைமறைவுக் குற்றவாளி தாவூத் இப்ராஹிமின் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஒவ்வொரு ஐ.பி.எல். ஆட்டத்தின்போதும் ரூ.400 கோடி அளவுக்குப் பந்தயம் கட்டுதல் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. பந்தயம் கட்டுவதற்கே இந்த அளவுக்குப் பணம் புழங்கும் என்றால் நிச்சயமாக இந்த விளையாட்டில், "புக்கிங் ஏஜண்டுகள்' நட்டம் அடையாமல் இருக்க, "ஸ்பாட் பிக்ஸிங்', "மேட்ச் பிக்ஸிங்' ஆகியவற்றை நடத்தவே செய்வார்கள். 

தாவூத் இப்ராகிம் ஆட்கள் இதில் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள் என்று கூறப்படும் நிலையில், கிரிக்கெட் வீரர்கள் தன்னளவில் விருப்பம் இல்லாத நிலையிலும், மிரட்டப்பட்டு, அதனால் இத்தகைய "ஸ்பாட் பிக்ஸிங்' செய்ய ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் நேர்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது. இதெல்லாம் அரசுக்கும் காவல்துறைக்கும் தெரியாதா என்ன?

போதும் இந்த சூதாட்ட விபரீதம்; ஐ.பி.எல். உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும்!

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்