Skip to main content

என்கௌண்டர் மற்றும் சட்ட சிக்கல்கள்

சமீபத்தில் எல்லோரையும் மிகவும் வருத்தமடையச் செய்த கோவை இரட்டை கொலை வழக்கில் கைதான அரக்கன் முத்து கிருஷ்ணன் நேற்று கோவை அருகே காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். இதை பொதுமக்கள் முழு மனதோடு வரவேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடியிருக்கிறார்கள்.

இந்த முத்து கிருஷ்ணன் கொடூரமாக ஒரு 10 வயது சிறுமியைக் கற்பழித்துக் கொன்றதோடு இல்லாமல், அந்த சிறுமியின் 7 வயது தம்பியையும் கொன்றுள்ளான்.

இந்த கொலைகாரனை விசாரணை செய்ய அழைத்துச் சென்ற போது அவன் கூட சென்ற இரு காவல் அதிகாரிகளை சுட்டுவிட்டு தப்ப முயன்ற போது மற்ற காவல் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான்.

உண்மையிலேயே இது மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒரு விஷயம். எந்த ஒரு குற்றவாளிக்கும் இது வரை சரியான தண்டனை கிடைத்ததாக இந்தியாவில் சரித்திரம் இல்லை. சட்டம் மிகவும் சோம்பேறித்தனமாக செயல்படும் போது நம் நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் கோடிக்கணக்கில் இருக்கின்றன.

Justice can be delayed, but it can't never be denied என்று எப்போதோ ஒரு சோம்பேறி சொன்னதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு நம்முடைய சட்டம் யாரையுமே சரிவர விசாரித்து இதுவரை தண்டிக்கவில்லை. கற்பழிப்பு, கொலை, ஊழல், கொள்ளை போன்ற எந்த குற்றத்தை செய்தாலும் முதலில் அதற்குண்டான விசாரணை சீக்கிரம் முடிக்கப் படவேண்டும். பிறகு அதற்கேற்ற கடுமையான தண்டனை அதைவிட விரைவாக கொடுக்கப்பட வேண்டும். அப்படி செய்யாவிடில் சட்டத்தின் மேல் யாருக்கும் பயமோ, மரியாதையோ இருக்காது. இப்போது நம் நாட்டில் அதுதான் நடக்கிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கொஞ்சம் கூட ஈவு, இரக்கம் இல்லாமல் பலபேரை சுட்டுத் தள்ளிய பாகிஸ்தான் கொலைகாரன் கசாபை இன்னமும் தூக்கில் போடாமல் விசாரணை என்ற பேரில் மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடித்துக் கொண்டிருக்கிறது நம் அரசு. வேறு எந்த நாட்டிலும் இது போன்ற ஒரு அவலம் நடக்காது.

நம் நாட்டு சட்டம் மற்றும் காவல் துறைக்கு சவாலாக ஒரு பெரிய 5 நட்சத்திர ஹோட்டலை தன் வசமாகிக் கொண்டு அந்த அழகான கட்டிடத்தைக் கொளுத்தி, அதில் ஏராளமான உயிர்களைக் கொன்று வெறியாட்டம் ஆடிய ஒரு காட்டுவெறிக் கும்பலின் அங்கமான கசாபை தண்டிப்பதில் என்ன தயக்கம்? இதற்கு பெயர் ஜனநாயகம் என்றால் அப்பேற்பட்ட ஜனநாயகம், நீதித்துறை நமக்கு தேவையே இல்லை.

போலி என்கௌண்டர் என்ற பெயரில் இதைப் போன்ற கொலைகளை நடத்தும் காவல் அதிகாரிகளை கொலைக் குற்றம் சுமத்தி விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளான ஜஸ்டிஸ் தல்வீர் பண்டாரியும், ஜஸ்டிஸ் தீபக் வர்மாவும் நேற்று கருத்து சொல்லியிருக்கிறார்கள். அய்யா, ரொம்பவும் நியாமான கருத்துதான். ஆனால், உங்களுடைய சட்டம், நீதி எல்லாம் தூங்கப் போய் ரொம்ப நாட்கள் ஆகிவிட்டனவே. நீங்கள் குறட்டை விட்டு தூங்குவதால் என் போன்ற சாமானியர்களுக்கு சட்டத்தின் மேல் உள்ள நம்பிக்கை, மரியாதை இவை எல்லாம் காற்றில் பறந்து போய் வெகு நாட்களாகிவிட்டன.

சட்டத்தை தூசு தட்டி தண்டனைகளை மிகவும் கடுமையாக்குங்கள். நீதி எல்லருக்கும் பாரபட்சமின்றி கிடைக்க ஆவன செய்யுங்கள், எந்த ஒரு வழக்கையும் வழவழ என்று வருடக் கணக்கில் ஜவ்வு மாதிரி இழுக்காமல் உடனடியாக தீர்ப்பு வழங்கி அதற்கேற்ற தண்டனையும் வழங்குங்கள். பிறகு இது போன்ற என்கௌண்டர்களைப் பற்றி வாய்கிழிய பேசலாம்.

முத்து கிருஷ்ணனைப் போட்டுத் தள்ளிய காவல் துறையின் செயல் மிக, மிக பாராட்டப்படவேண்டிய ஒரு செயல். காவல் துறையின் இந்த நடவடிக்கை பொதுமக்களின் கொந்தளிப்பின் விளைவால் வந்தது என்று சில வழக்கறிஞர்கள் சொல்லி இருக்கிறார்கள். இருக்கட்டுமே. அதில் என்ன தவறு? என்கௌன்டரில் போட்டுத் தள்ளாமல் விசாரணை நடத்தி இருந்தால் இதே வழக்கறிஞர்கள் காசுக்கு ஆசைப்பட்டுக்கொண்டு  இதே குற்றவாளிக்கு வக்காலத்து வாங்கி இருக்க மாட்டார்களா?


இவ்வளவாவது மனசாட்சியுடன் காவல்துறை செயல் பட்டது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இந்த மாதிரி மனசாட்சியே இல்லாமல் குழந்தைகளைக் கற்பழிப்பது, கொல்வது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடும் முத்து கிருஷ்ணன் போன்ற வெறி நாய்களுக்கு இதுபோன்ற தண்டனை தொடர வேண்டும். எதுவும் செய்யாமல் சம்பளம் மற்றும் லஞ்சம் என்று வாங்கிக் கொண்டு தூங்கி வழியும் சட்டம் மற்றும் நீதித் துறையைச் சேர்ந்த வாய்சொல் வீரர்கள் செயலில் இறங்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...