Skip to main content

தினசரி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்


 திருப்பதி ஏழுமலையானை வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிப்பது என்பது இன்றைக்கு ஒவ்வொருவரின் வாழ்நாள் லட்சியமாகிவிட்டது.

ஆனால், ஒரே ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஏழுமலையானை அதிகாலையில் முதல் ஆளாகத் தரிசிப்பதும், இரவில் நடை அடைப்பதற்கு முன் இறுதியாக தரிசிப்பதும் இன்றும் நடந்து வருகிறது. யார் அவர்கள்? அவர்களின் பின்னணி என்ன? அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை?

திருமகளுக்கும் பெருமாளுக்கும் ஒரு முறை பிணக்கு ஏற்பட்ட போது, திருமகள் கோபித்துக் கொண்டு பூமிக்கு வந்துவிட, பின்னாலேயே பெருமாளும் வந்து அவளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு, அது முடியாததால் தவம் செய்கிறார். நாளடைவில் அவர் மேல் பெரும் புற்று மூடிவிட, அங்கு மாடுகளை மேய்க்கும் கோபாலன் என்பவன் தன்னுடைய பசுவைக் கொண்டு தினசரி அந்தப் புற்றுக்கு பால் அபிஷேகம் செய்ய, அதில் மனம் மகிழ்ந்த பெருமாள் அவனுடைய சந்ததிகளுக்கு தன்னை தினசரி தரிசனம் செய்யும் வரம் அளிக்கிறார் என்பது புராணம்.

அந்தத் தலைமுறையில் வந்த வேங்கட ராமையா என்பவர்தான் அந்த பாக்கியசாலி. தினமும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் வெங்கடராமையாவும், அவரது மகன்களும் எழுந்து குளித்து, நாமமிட்டு, கோவிலுக்குச் செல்கின்றனர்.

 "பங்காரு வகிலி' எனப்படும் மூலஸ்தான நடை திறந்தவுடன், பெருமாளின் முதல் தரிசனம் இவர்களுக்குத் தான் கிடைக்கிறது. பின் இவர்கள், பிரதான அர்ச்சகர்களின் வீடுகளுக்குச் சென்று, பூஜை செய்வதற்கு வரும்படி அழைக்கின்றனர். அதன் பின்னரே பிரதான அர்ச்சகர்கள், கோவிலில் தங்கள் கடமையை ஏற்க வருகின்றனர். இரவில் ஏகாந்த சேவை முடிந்த பின், பெருமாளின் அன்றைய இறுதி தரிசனம் வெங்கடராமையாவுக்குக் கிடைத்த பின் தான் நடை அடைக்கப்படுகிறது.

இதுகுறித்து வெங்கடராமையா கூறுகையில், "எனக்கு ஆறு வயதாக இருக்கும் போது, என் தாத்தாவுடன் இந்தச் சேவைகளில் பங்கேற்றேன்' என்று பெருமை பொங்கத் தெரிவிக்கிறார். தற்போது 70 வயதாகும் வெங்கடராமையாவுடன், அவரது மகன் பத்மநாபன், வெங்கடராமையாவின் சகோதரர் மகன் ரமேஷ் இருவரும் இணைந்து இறை பணியை உவப்புடன் செய்து வருகின்றனர்.

நன்றி: தினமலர் இணையதளம்

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...