Skip to main content

தினசரி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்


 திருப்பதி ஏழுமலையானை வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிப்பது என்பது இன்றைக்கு ஒவ்வொருவரின் வாழ்நாள் லட்சியமாகிவிட்டது.

ஆனால், ஒரே ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஏழுமலையானை அதிகாலையில் முதல் ஆளாகத் தரிசிப்பதும், இரவில் நடை அடைப்பதற்கு முன் இறுதியாக தரிசிப்பதும் இன்றும் நடந்து வருகிறது. யார் அவர்கள்? அவர்களின் பின்னணி என்ன? அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை?

திருமகளுக்கும் பெருமாளுக்கும் ஒரு முறை பிணக்கு ஏற்பட்ட போது, திருமகள் கோபித்துக் கொண்டு பூமிக்கு வந்துவிட, பின்னாலேயே பெருமாளும் வந்து அவளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு, அது முடியாததால் தவம் செய்கிறார். நாளடைவில் அவர் மேல் பெரும் புற்று மூடிவிட, அங்கு மாடுகளை மேய்க்கும் கோபாலன் என்பவன் தன்னுடைய பசுவைக் கொண்டு தினசரி அந்தப் புற்றுக்கு பால் அபிஷேகம் செய்ய, அதில் மனம் மகிழ்ந்த பெருமாள் அவனுடைய சந்ததிகளுக்கு தன்னை தினசரி தரிசனம் செய்யும் வரம் அளிக்கிறார் என்பது புராணம்.

அந்தத் தலைமுறையில் வந்த வேங்கட ராமையா என்பவர்தான் அந்த பாக்கியசாலி. தினமும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் வெங்கடராமையாவும், அவரது மகன்களும் எழுந்து குளித்து, நாமமிட்டு, கோவிலுக்குச் செல்கின்றனர்.

 "பங்காரு வகிலி' எனப்படும் மூலஸ்தான நடை திறந்தவுடன், பெருமாளின் முதல் தரிசனம் இவர்களுக்குத் தான் கிடைக்கிறது. பின் இவர்கள், பிரதான அர்ச்சகர்களின் வீடுகளுக்குச் சென்று, பூஜை செய்வதற்கு வரும்படி அழைக்கின்றனர். அதன் பின்னரே பிரதான அர்ச்சகர்கள், கோவிலில் தங்கள் கடமையை ஏற்க வருகின்றனர். இரவில் ஏகாந்த சேவை முடிந்த பின், பெருமாளின் அன்றைய இறுதி தரிசனம் வெங்கடராமையாவுக்குக் கிடைத்த பின் தான் நடை அடைக்கப்படுகிறது.

இதுகுறித்து வெங்கடராமையா கூறுகையில், "எனக்கு ஆறு வயதாக இருக்கும் போது, என் தாத்தாவுடன் இந்தச் சேவைகளில் பங்கேற்றேன்' என்று பெருமை பொங்கத் தெரிவிக்கிறார். தற்போது 70 வயதாகும் வெங்கடராமையாவுடன், அவரது மகன் பத்மநாபன், வெங்கடராமையாவின் சகோதரர் மகன் ரமேஷ் இருவரும் இணைந்து இறை பணியை உவப்புடன் செய்து வருகின்றனர்.

நன்றி: தினமலர் இணையதளம்

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்