Skip to main content

Posts

Super Bug என்ற பெயரில் இந்தியாவின் மேல் வீண்பழி

லண்டனிலிருந்து வெளிவரும் லான்செட் (Lancet) என்ற மருத்துவ இதழ் உலகப்  புகழ்பெற்றது. இதில் சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு சிகிச்சைக்காக செல்லும் அனைவரையும் அச்சுறுத்தும் வண்ணம் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் மூலம் எந்த மருந்துக்குமே கட்டுப்படாத ஒரு புதிய வகை நோய் தொற்றுக் கிருமி (NDM-1, Super bug) உலகமெங்கும் வேகமாகப் பரவுகிறது என்ற செய்திதான் இந்த பரபரப்புக்குக் காரணம். இதில் பெரிய வேதனை என்னவென்றால் இதை எழுதிய விஞ்ஞானிகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த கார்த்திகேயன் குமாரசாமி என்பவர். இந்த கட்டுரையின் உள்நோக்கம் என்னவாக இருந்தாலும் இந்தியாவைச் சேர்ந்த தலை சிறந்த விஞ்ஞானிகள் பலர் இதற்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பெரிய எதிர்ப்பை எதிர்பார்க்காத இந்திய விஞ்ஞானி கார்த்திகேயன் குமாரசாமி உடனே புத்திசாலித்தனமாக இந்தக் கட்டுரையில் இந்தியாவை இழிவுபடுத்தும் நோக்குடன் தான் எதுவும் எழுதவில்லை என்றும், அவை தன்னுடைய கவனத்திற்கு வராமல் வேறொரு விஞ்ஞானியால் எழுதப்பட்ட...

இந்தியர்களை தலை குனியச் செய்யும் கேவலப் பிறவி சுரேஷ் கல்மாடி

உலக அரங்கில் நமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்சம் நல்ல பெயரையும் குழி தோண்டிப் புதைத்து விட்டார் சுரேஷ் கல்மாடி. காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் ஏன் நடத்தவேண்டும் என்று உலகமெங்கும் ஆவேசமான கேள்விகள் எழும் வண்ணம் ஊழல் புகார்கள் அடுக்கடுக்காக வந்தும் அசராமல் எல்லாப் புகார்களுக்கும் பொய்க் காரணங்கள் சொல்லி கோடிக்கணக்கான ரூபாயை முழுங்கிவிட்டு வளைய வரும் இந்த இழிவான பிறவியை இன்னும் உள்ளே தள்ளாமல் மத்திய அரசு மௌனம் காப்பது பெரும் வெட்ககேடு. டைம்ஸ் ஆப் இந்தியா ஆரம்பித்து வைத்து இந்த exposure அசிங்கத்தை இப்போது அத்தனை பத்திரிக்கைகளும், தொலைக் காட்சிகளும் கிழி, கிழி என்று கிழித்து வந்தாலும் எதற்கும் அசராமல் ஊழலுக்கு மேல் ஊழலாக செய்து வருகிறார் இந்த வெட்கங்கெட்ட கேவலப் பிறவி கல்மாடி. வேறு யாராவது ஒருவராக இருந்திருந்தால் இத்தனை நேரம் தூக்கி மாட்டி தொங்கியிருப்பர்கள். இதை போன்ற அரசியல் வா(வியா)திகளுக்கு ஏது வெட்கம், மானம், ரோஷம் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

மூட நம்பிக்கையை வைத்து வியாபாரம் செய்யும் பகுத்தறிவு (?) கட்சியின் தொலைக் காட்சி சானல்கள்

சாமி இல்லை, பூதம் இல்லை என்றெல்லாம் சொல்லி பகுத்தறிவுக் காவலர்கள் என்று சொல்லிக் கொண்டு திரியும் திமுக வின் சன் மற்றும் கலைஞர் தொலைக் காட்சி சானல்கள் இரவு 10 மணியளவில் தினமும் நிஜம் என்ற பெயரில் நடத்தும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் மக்களின் மூட நம்பிக்கைகளை வைத்து பணம் பார்க்கும் நோக்கோடுதான் நடத்தப்படுகின்றன. தினமும் ஏதாவது ஒரு கிராமத்தில் பேய் உலாவுகிறது, பாம்பு சாமிக்கு பூசை செய்கிறது, மக்கள் மர்மமான முறையில் இறக்க காரணம் பழைய சாபம், பாம்புப் பெண்கள் பாம்பைப் போலவே சட்டை உரிக்கிறார்கள் என்றெலாம் ஏதாவது ஒரு கட்டுக் கதையை வைத்துக்கொண்டு மக்களின் மூட நம்பிக்கையை exploit செய்து பணம் சேர்க்கும் வேலையை இந்த இரண்டு சானல்களும் செய்கின்றன. இந்த மூட நம்பிக்கை வியாபாரத்தை ஆரம்பித்து வைத்த புண்ணியம் விஜய் டிவியைச் சேரும். இப்போது, ஜெயா டிவி உட்பட எல்லா சானல்களும் இதைபோன்ற உடான்ஸ் நிகழ்ச்சிகளை தினமும் ஒளிபரப்புகின்றன. மற்ற சானல்களை விட இந்த நிகழ்ச்சிகளை சன் மற்றும் கலைஞர் டிவி ஒளிபரப்பும்போது இது பெரும்பாலான மக்களை சென்று அடைகிறது. ஒரு பக்கம் சாதியே இல்லை என்று சொல்லிக் கொண்டு சாதி அடிப்டை...

எந்திரனில் சுஜாதாவின் வசனம்

    சில நாட்களுக்கு முன்னதாக, எழுத்தாளர் சுஜாதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் சென்னையில் நடந்தது. உயிர்மை பதிப்பகம், சுஜாதா அறக்கட்டளை  இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஷங்கர், வசந்த், பார்த்திபன், ராஜீவ் மேனன், பட அதிபர் வி.சி.சந்திரசேககரன், எழுத்தாளர்கள்  இந்திரா பார்த்தசாரதி, ஞானக்கூத்தன், மதன், ஏ.நடராஜன், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இயக்குனர் ஷங்கர் பேசியதாவது: சுஜாதா பன்முகம் கொண்டவர். அவரது எழுத்து திறமை மட்டுமே வெளியில் தெரிகிறது. மற்ற திறமைகள் மக்களுக்கு தெரியாமல் உள்ளது. திரைத் துறையில் அவர் சாதனை படைத்தார். வசனங்கள் சிறிதாகவும், பவர்புல்லாகவும் இருக்க வேண்டும் என்று கூறுவார். ‘அந்நியன்’ படத்தில்  ரயிலில் சாப்பாடு சரியில்லை, மின்விசிறி சுழலவில்லை என்று அம்பி (விக்ரம்) புகார் சொல்வார். அதைக்கேட்ட டி.டி.ஆர், ‘அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க’  என்பார். உடனே விக்ரம் ‘அட்ஜட்ஸ்ட் பண்ணி பண்ணித்தான் இந்த தேசம் இப்படி இருக்கு’ என்பார். ‘அந்நியன்’ படத்தில் ‘சிறுதப்புக்கும் கொலை  செய்வதா?’...

மாஸ்டரின் 48வது செஞ்சுரி

  சிகரங்கள் தொட்டுவிடும் தூரம்தான் என்று விளையாடி வரும் "மாஸ்டர் ப்ளாஸ்டர்" சச்சினின் நேற்றைய சாதனை 48வது செஞ்சுரி. இவர் இதுவரை அடித்த செஞ்சுரிகள் 94 (ODI யில் அடித்தது 46, டெஸ்ட் போட்டிகளில் அடித்தது 48!) கூடிய விரைவில் செஞ்சுரியில் செஞ்சுரி அடித்துவிடுவார் என நினைகிறேன். இதை சச்சின் செய்து முடிக்க ஆண்டவனை வேண்டுகிறேன். 2008ம் ஆண்டின் முடிவில் சச்சின் 41 செஞ்சுரிகள் (டெஸ்ட் போட்டிகளில்) அடித்திருக்கும் போது  ஆஸ்திரேலியாவின் குரங்கு ரிக்கி பாண்டிங் 37 செஞ்சுரிகள் அடித்திருந்தார். கிட்டத்தட்ட எல்லா ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளிலும் விரைவில் பாண்டிங் சச்சினின் சாதனையை முறியடித்துவிடுவார் என செய்திகள் வந்தன. போதாக்குறைக்கு, அப்போது பாண்டிங்கின் டெஸ்ட் சராசரி 57.2 என்பது சச்சினின் சராசரியான 54.3 விட அதிகமாக இருந்தது. இந்த இடைப்பட்ட நாட்களில் சச்சின் 48 செஞ்சுரிகள் அடித்துவிட, குரங்கு பாண்டிங் இன்னும் 39 இல்தான் இருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் சச்சின் 1219 ரன்கள் அடித்து (12 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே) சராசரியை 55.9 க்கு கொண்டு சென்றுவிட்டார்.பாண்டிங் சராசரி இப்போது 54.7...

(Deja Vu) டேஜா வூ

டேஜா வூ என்ற ஆங்கில சொல்லுக்கு அர்த்தம் ஒரு நிகழ்வு நம்மைச் சுற்றியோ, அல்லது நமக்கே நடக்கும்போதோ நம்மில் பலருக்கு இந்த நிகழ்வு/அனுபவம் ஏற்கனவே நிகழந்த/அனுபவித்த ஒன்று போல இருக்கிறதே என்றுதோன்றும் ஒரு விஷயம். என் நண்பர் நாகுவுக்கு இந்த டேஜா வூ சற்று வேறுமாதிரி நிகழ்கிறது. அவருக்கு சமீப காலமாக சில ஆங்கிலப் படங்களைப் பார்க்கும்போதெல்லாம் இந்த படத்தின் கதை அப்படியே எழுத்தாளர் சுஜாதாவின் கதையை சுட்ட மாதிரி இருக்கிறதே என்ற உணர்வுதான் அது. சில நாட்களுக்கு முன், Shutter Island என்ற ஆங்கில படத்தைப் பாத்துவிட்டு இதன் கதை அப்படியே சுஜாதா எழுதி 1971 இல் வெளிவந்த "ஒரு அராபிய இரவு" என்ற சிறுகதை போலவே உள்ளது என்றார். பிறகு, ஸ்டார் மூவீஸ் சானலில் The Day The Earth Stood Still என்ற படத்தைப் பார்த்து விட்டு, இதன் கதை சுஜாதா எழுதி (வருடம் ஞாபகம் இல்லை) வெளிவந்த "திசை கண்டேன், வான் கண்டேன்" என்ற கதையைப் போலவே உள்ளது என்றார். இதைப் போன்ற டேஜா வூ வரக் காரணம், நண்பர் நாகுவுக்கு (என்னைப் போலவே) அறிவுஜீவி எழுத்தாளர் சுஜாதா மேலிருக்கும் ஒரு அபரிமிதமான அபிமானம், மரியாதை. Shutter Island ...

தமிழில் பதிய....

என் நண்பர் சுவாமி என்கிற சிவா என்னுடைய blog எழுதுவது பற்றிய பதிவைப் படித்து விட்டு, நிறைய பேர் தமிழ் மொழியில் பதிவு செய்ய கஷ்டப்படுகிறார்கள் அது எப்படி என்று சொல்லிவிடுங்கள் எனக் கேட்டிருந்தார். blog பதிவுக்கு முதல் தேவை ஒரு ஜி-மெயில் ஐடி, பிறகு ஒவ்வொரு முறை நீங்கள் பதிய நினைக்கும் போதும் நியூ போஸ்ட் என்பதைக் கிளிக்கினால் ஒரு விண்டோ திறக்கும். அதில் நீங்கள் தமிழில்  பதிவு செய்ய வேண்டுமெனில் அந்த விண்டோவின் தலையில் இருக்கும் பல்வேறு பட்டன்களில் "அ" என்ற எழுத்து இருக்கும். தமிழில் டைப் செய்யவேண்டிய வார்த்தை 'vanakkam" என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அந்த வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்பி விட்டு, அதை மௌஸ் மூலம் செலக்ட் செய்துவிட்டு பின் அந்த "அ" பட்டனை அழுத்தினால் அது தமிழ் வணக்கமாக மாறி விடும். இது முதன்முதலில் நீங்கள் தமிழில் டைப்பும் போது மட்டும். இதன் பிறகு எந்த வார்த்தையை வேண்டுமானாலும் ஆங்கிலத்தில் டைப்பி விட்டு பிறகு CTRL G அழுத்தினால் அது தமிழ் வார்த்தையாக மாறிவிடும்.  இதில் சில நடைமுறை கஷ்டங்கள் உள்ளன. உதாரணமாக நீங்கள் சிங்கப்பூர் என தமிழில் டைப் செய்ய...