Skip to main content

(Deja Vu) டேஜா வூ

டேஜா வூ என்ற ஆங்கில சொல்லுக்கு அர்த்தம் ஒரு நிகழ்வு நம்மைச் சுற்றியோ, அல்லது நமக்கே நடக்கும்போதோ நம்மில் பலருக்கு இந்த நிகழ்வு/அனுபவம் ஏற்கனவே நிகழந்த/அனுபவித்த ஒன்று போல இருக்கிறதே என்றுதோன்றும் ஒரு விஷயம்.

என் நண்பர் நாகுவுக்கு இந்த டேஜா வூ சற்று வேறுமாதிரி நிகழ்கிறது. அவருக்கு சமீப காலமாக சில ஆங்கிலப் படங்களைப் பார்க்கும்போதெல்லாம் இந்த படத்தின் கதை அப்படியே எழுத்தாளர் சுஜாதாவின் கதையை சுட்ட மாதிரி இருக்கிறதே என்ற உணர்வுதான் அது.

சில நாட்களுக்கு முன், Shutter Island என்ற ஆங்கில படத்தைப் பாத்துவிட்டு இதன் கதை அப்படியே சுஜாதா எழுதி 1971 இல் வெளிவந்த "ஒரு அராபிய இரவு" என்ற சிறுகதை போலவே உள்ளது என்றார். பிறகு, ஸ்டார் மூவீஸ் சானலில் The Day The Earth Stood Still என்ற படத்தைப் பார்த்து விட்டு, இதன் கதை சுஜாதா எழுதி (வருடம் ஞாபகம் இல்லை) வெளிவந்த "திசை கண்டேன், வான் கண்டேன்" என்ற கதையைப் போலவே உள்ளது என்றார். இதைப் போன்ற டேஜா வூ வரக் காரணம், நண்பர் நாகுவுக்கு (என்னைப் போலவே) அறிவுஜீவி எழுத்தாளர் சுஜாதா மேலிருக்கும் ஒரு அபரிமிதமான அபிமானம், மரியாதை.

Shutter Island நாவல் ஆங்கிலத்தில் மிகப் புகழ் பெற்ற எழுத்தாளர் "Denis Lehane" எழுதி 2003 இல் வெளிவந்தது. டெனிஸ் மிகப் பெரிய எழுத்தாளர், அவருக்கு தமிழ் தெரிந்த யாராவது ஒருவர், சுஜாதாவின் அராபிய இரவு கதையை சொல்லியிருக்க வாய்ப்பு மிகவும் குறைவே. இரண்டாவது, இரண்டு கதைகளின் கருவுமே எல்லோருக்கும் தெரிந்த "delusion" என்ற ஒருவித மன வியாதியின் பின்புலம்தான். மூன்றாவது, மார்டின் ஸ்கோர்ஸேஸே (Martin Scorsese) போன்ற முதல் தர இயக்குனர் நாடும் எழுத்தாளர்கள் இதைப் போல கதை திருட மாட்டார்கள்.

அடுத்தது, The Day The Earth Stood Still படம் ஏற்கனவே 1951 இல் வெளிவந்த ஒரு படத்தின் ரீமேக் ஆகும். அந்தப் படம், 1940 இல் வெளிவந்த "Farewell to the Master" என்ற விஞ்ஞானச் சிறுகதையைத் தழுவி எடுத்தாகும்.

சுஜாதா ஒரு மிகத் தேர்ந்த எழுத்தாளர். கிட்டத்தட்ட எல்லாவிதமான கதைகளையும் அவர் எழுதிவிட்டார். எனவே அவருடைய தீவிர ரசிகர்களுக்கு இதைப் போல தோன்றுவதில் தவறில்லை.

Orkut எனப்படும் வலைத் தளத்தில் கமல் ரசிகர்கள் ஒரு குழுமம் ஒன்று வைத்துக் கொண்டு தினசரி கமல் துதி பாடி வருகிறார்கள். இதிலும் தவறேதும் இல்லை. ஆனால், கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு ரசிகர் "Bourne Identity" படத்தைப்  பார்த்துவிட்டு அது கமல் நடித்து '80 களில் வெளிவந்த "வெள்ளி விழா" படத்தின் காப்பி என்று சொன்னதும் இதே டேஜா வூ ரகம்தான். காரணம், கமல் நடித்த வெள்ளி விழா படத்தின் இயக்குனர் பிரதாப் போத்தன் பார்ப்பதற்கு கேனயன் போல இருப்பாரே தவிர, நல்ல புத்திசாலி. இவர் '80 களின் ஆரம்பத்தில் வெளிவந்து மிகப் பிரபலமான "Bourne Identity" நாவலைத் தழுவிதான் வெற்றி விழாவை எடுத்தார். அந்த நாவல் புகழ் பெற்ற எழுத்தாளர் ராபர்ட் லுட்லம் (Robert Ludlum) எழுதியது.

ஆங்கிலத்தில் இந்த நாவலை 2002 இல் தான் படமாக எடுத்தார்கள். பிறகு அவரே "Bourne Supremacy" "Bourne Ultimatum" என்றெல்லாம் நாவல்கள் எழுதி அவையனைத்தும் திரைப் படங்களாக வந்து மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன. இதே போல orkut வலைத் தளத்தில் Tom Hanks நடித்து 1994 இல் வெளிவந்த "Forrest Gump" என்ற படம் கமல் நடித்து '80 களில் வெளிவந்த சுவாதி முத்யம் (சிப்பிக்குள் முத்து) என்ற படத்தின் காப்பி என்று சின்னப் பிள்ளைத்தனமாக குறிப்பிடப்பட்டிருந்தது. Forrest Gump 1986 ம் வருடம் அதே பெயரில் வெளிவந்த நாவலைத் தழுவி எடுத்ததாகும். எனவே இதவும் ஒரு தவறான ஆர்வக் கோளாறில் ஏற்பட்ட டேஜா வூ கேஸ்தான். மேலும் orkut இணைய தளத்தில் இந்த கமல் குழுமத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் பள்ளி/கல்லூரி மாணவர்கள். எனவே அவர்களிடம் அவ்வளவாக exposure இருக்கும் என எதிர்பாக்க் முடியாது.

இதே போல ஆங்கிலத்தில் மற்றொரு புகழ் பெற்ற எழுத்தாளர் "Irwing Wallace" எழுதி 1982 இல் வெளிவந்த "The Miracle"  என்ற நாவலைத் தழுவி "ஆத்மா" என்ற பெயரில் பிரதாப் போத்தன் ஒரு படம் வெளியிட்டார். இது இன்னும் ஆங்கிலத்தில் படமாக வரவில்லை. எதிர்காலத்தில் வந்தால் யாரவது இதை பிரதாப் போத்தனின் படமான ஆத்மாவின் காப்பி என்று டேஜா வூ வந்து சொல்லலாம்.

நம்மில் பெரும்பாலோருக்கு நம்முடைய அரசியல் நிகழ்வுகளைப் பார்க்கும் போது இது ஏற்கனவே நடந்த நிகழ்வு போல இருக்கிறதே எனத் தோன்றலாம். அது நிச்சயமாக டேஜா வூ கிடையாது. அது உண்மையாகவே ஏற்கனவே நிகழ்ந்திருக்கும். காரணம், அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

Comments

Unknown said…
நாடு சுதந்திரம் அடைஞ்சு அறுபது வருஷம் ஆனால் கூட இன்னும் சில பேருக்கு "வெள்ளைத் தோல் மோகம்" தீரவில்லை :-)

அது என்ன நண்பா!! "அங்கிருந்துதான் இங்கே" காப்பி அடிக்க முடியும்; "இங்கிருந்து அங்கே" முடியவே முடியாது'ன்னு ஒரு மனப்பான்மை. Even yesterday I saw the movie "Bullet proof monk" whose end credits had the lyrics of Bhagawad Gita. ஸ்பஷ்டமாக ஒரு வெள்ளைக்கார பெண்மணி "பரித்ராணாய சாதூனாம்" பாடுகிறார். அதே போல் SHUTTER ISLAND டைரக்டர்; உப டைரக்டர் எவனாவது ஒருத்தன் அந்த சிறு கதையை படித்திருந்தால் போதுமே. அதற்க்கான சாத்தியக்கூறு நிச்சயமாக இருக்கிறது.
Ram Sridhar said…
என்னுடைய கருத்துக்கு பெயர் "வெள்ளைத் தோல் மோகம்" இல்லை, சிம்பிள் காமன் சென்ஸ். Shutter Island கதையின் பின்புலம் delusion என்பது போலவே சுஜாதாவின் சிறுகதையும் delusion என்பதைத் தவிர இந்த இரண்டு இரண்டு கதைகளுக்கும் ஸ்நானப் ப்ராப்தி கூட இல்லை. இதையும் மீறி, இது சுஜாதா கதையின் காப்பி என்றால் நண்பருக்கும் delusion என்றுதான் சொல்லவேண்டும், ஏனென்றால் "delusion" என்ற பின்னணியை வைத்து ஏராளமான கதைகளும், படங்களும் ஏற்கனவே வந்துவிட்டன.

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்