Skip to main content

எந்திரனில் சுஜாதாவின் வசனம்

   
சில நாட்களுக்கு முன்னதாக, எழுத்தாளர் சுஜாதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் சென்னையில் நடந்தது. உயிர்மை பதிப்பகம், சுஜாதா அறக்கட்டளை  இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஷங்கர், வசந்த், பார்த்திபன், ராஜீவ் மேனன், பட அதிபர் வி.சி.சந்திரசேககரன், எழுத்தாளர்கள்  இந்திரா பார்த்தசாரதி, ஞானக்கூத்தன், மதன், ஏ.நடராஜன், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இயக்குனர் ஷங்கர் பேசியதாவது: சுஜாதா பன்முகம் கொண்டவர். அவரது எழுத்து திறமை மட்டுமே வெளியில் தெரிகிறது. மற்ற திறமைகள் மக்களுக்கு தெரியாமல் உள்ளது.

திரைத் துறையில் அவர் சாதனை படைத்தார். வசனங்கள் சிறிதாகவும், பவர்புல்லாகவும் இருக்க வேண்டும் என்று கூறுவார். ‘அந்நியன்’ படத்தில்  ரயிலில் சாப்பாடு சரியில்லை, மின்விசிறி சுழலவில்லை என்று அம்பி (விக்ரம்) புகார் சொல்வார். அதைக்கேட்ட டி.டி.ஆர், ‘அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க’  என்பார். உடனே விக்ரம் ‘அட்ஜட்ஸ்ட் பண்ணி பண்ணித்தான் இந்த தேசம் இப்படி இருக்கு’ என்பார். ‘அந்நியன்’ படத்தில் ‘சிறுதப்புக்கும் கொலை  செய்வதா?’ என்று ஒருவர் கேட்க,’ தப்பு என்ன பனியன் சைஸா, ஸ்மால், மீடியம், எக்ஸ்டிரா லார்ஜ் என்று பார்ப்பதற்கு’ என்பார். இதேபோல்  ‘சிவாஜி’ படத்திலும் வலுவான வசனங்கள் எழுதினார்.

இப்போது உருவாகி வரும் ‘எந்திரன்’ படத்துக்கும் நல்ல வசனம் எழுதி இருக்கிறார். வேலை செய்துவிட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு வீடு திரும்பும்  ரஜினியின் முகத்தில் நீண்ட தாடி வளர்ந்திருக்கும், அதைப்பார்க்கும் அவரது அம்மா, ‘என்னடா லீவுக்கு வந்த ரிஷி மாதிரி இருக்கே’ என்று கேட்பார்.  ஒரு சீனை ஒரு பக்கத்துக்கு மேல் எழுதக்கூடாது என்பார். எனக்கு ஏதாவது பிரச்னை வந்தால் ஒரு தந்தையிடம் ஆலோசனை கேட்பதுபோல்  அவரிடம் கேட்பேன். இவ்வாறு ஷங்கர் பேசினார். 

இதற்கு முன் ஒருமுறை எந்திரன் படத்திற்கான முழு வசனத்தையும் சுஜாதா மறைவதற்கு முன் எழுதிவிட்டார் என இயக்குனர் ஷங்கரே ஒருமுறை ஒரு வார இதழில் கூறியிருந்தார். ஆனால் சமீபத்தில் வெளியான அவருடைய பேட்டியில் (ஆனந்த விகடன் என நினைக்கிறேன்) சுஜாதா பாதி வசனங்களை மட்டுமே எழுதினார், மீதி வசனத்தை நானே எழுதியுள்ளேன், அதைப் பார்த்தால் நிச்சயம் சுஜாதா மகிழ்ச்சி அடைவார். மேலும் இந்தப்  படத்திற்கான  தொழில்நுட்ப விஷயங்களை எழுத கவிஞர் வைரமுத்துவின் மகன் கார்கி உதவினர் என சொல்லியிருந்தார். என் மனைவி (என்னைப் போல சுஜாதாவின் 
தீவிர ரசிகை) சொன்னது போல சுஜாதா உயிருடன் இருந்திருந்தால் மட்டுமே இதற்கான பதில் தெரிந்திருக்கும். 

இரண்டு நாட்களாக தினசரிகளில் ஏக்கர் கணக்கில் எந்திரன் பட விளம்பரங்கள் வருகின்றன. முக்கிய விளம்பரங்களில் வைரமுத்து, பா.விஜய், கார்கி இவர்களின் பெயர்கள்தான் பெரிதாக இருக்கின்றன. சுஜாதாவின் பெயர் இல்லை. ஒரு சில விளம்பரங்களில் எல்லா தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்களுடன் சுஜாதாவின் பெயரும் சிறிதாக இடம் பெற்றிருக்கிறது.

ஒரு படத்தில் முக்கிய பங்கு இயக்குனருக்கு என்றால், ஷங்கரின் பெரிய வெற்றி படங்களான முதல்வன், இந்தியன், அந்நியன், சிவாஜி ஆகிய படங்களில் வந்த சுஜாதாவின் "நெத்தியடி" வசங்களை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. ஆனால், அதே படங்களின் பாடல் வரிகளை எவ்வளவு பேரால் நினைவு கொள்ள முடியும்? அப்படியிருக்கும் போது, வைரமுத்து, பா.விஜய், கார்கி ஆகியோருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஏன் சுஜாதாவுக்கு தரப்படவில்லை?  

உன்னைப்போல் ஒருவன் படத்தில் வரும் இரா.முருகன் எழுதிய வசனம் நினைவுக்கு வருகிறது: "மறதி ஒரு தேசிய வியாதி."

Comments

நண்பரே இப்போது வெளிவரும் விளம்பரங்கள் இசை வெளியீட்டுக்கானது அதனால் பாடல் எழுதியோர், இசை அமைப்பாளர் என்பவர்களது பெயர்கள் அதிகம் பிரஸ்தாபிக்கப்படுகின்றன. படம் வெளிவருகையில் அவருக்கு ஓரளவு முக்கியத்துவம் தரப்படும் என நம்பலாம்.

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்