Skip to main content

எந்திரனில் சுஜாதாவின் வசனம்

   
சில நாட்களுக்கு முன்னதாக, எழுத்தாளர் சுஜாதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் சென்னையில் நடந்தது. உயிர்மை பதிப்பகம், சுஜாதா அறக்கட்டளை  இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஷங்கர், வசந்த், பார்த்திபன், ராஜீவ் மேனன், பட அதிபர் வி.சி.சந்திரசேககரன், எழுத்தாளர்கள்  இந்திரா பார்த்தசாரதி, ஞானக்கூத்தன், மதன், ஏ.நடராஜன், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இயக்குனர் ஷங்கர் பேசியதாவது: சுஜாதா பன்முகம் கொண்டவர். அவரது எழுத்து திறமை மட்டுமே வெளியில் தெரிகிறது. மற்ற திறமைகள் மக்களுக்கு தெரியாமல் உள்ளது.

திரைத் துறையில் அவர் சாதனை படைத்தார். வசனங்கள் சிறிதாகவும், பவர்புல்லாகவும் இருக்க வேண்டும் என்று கூறுவார். ‘அந்நியன்’ படத்தில்  ரயிலில் சாப்பாடு சரியில்லை, மின்விசிறி சுழலவில்லை என்று அம்பி (விக்ரம்) புகார் சொல்வார். அதைக்கேட்ட டி.டி.ஆர், ‘அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க’  என்பார். உடனே விக்ரம் ‘அட்ஜட்ஸ்ட் பண்ணி பண்ணித்தான் இந்த தேசம் இப்படி இருக்கு’ என்பார். ‘அந்நியன்’ படத்தில் ‘சிறுதப்புக்கும் கொலை  செய்வதா?’ என்று ஒருவர் கேட்க,’ தப்பு என்ன பனியன் சைஸா, ஸ்மால், மீடியம், எக்ஸ்டிரா லார்ஜ் என்று பார்ப்பதற்கு’ என்பார். இதேபோல்  ‘சிவாஜி’ படத்திலும் வலுவான வசனங்கள் எழுதினார்.

இப்போது உருவாகி வரும் ‘எந்திரன்’ படத்துக்கும் நல்ல வசனம் எழுதி இருக்கிறார். வேலை செய்துவிட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு வீடு திரும்பும்  ரஜினியின் முகத்தில் நீண்ட தாடி வளர்ந்திருக்கும், அதைப்பார்க்கும் அவரது அம்மா, ‘என்னடா லீவுக்கு வந்த ரிஷி மாதிரி இருக்கே’ என்று கேட்பார்.  ஒரு சீனை ஒரு பக்கத்துக்கு மேல் எழுதக்கூடாது என்பார். எனக்கு ஏதாவது பிரச்னை வந்தால் ஒரு தந்தையிடம் ஆலோசனை கேட்பதுபோல்  அவரிடம் கேட்பேன். இவ்வாறு ஷங்கர் பேசினார். 

இதற்கு முன் ஒருமுறை எந்திரன் படத்திற்கான முழு வசனத்தையும் சுஜாதா மறைவதற்கு முன் எழுதிவிட்டார் என இயக்குனர் ஷங்கரே ஒருமுறை ஒரு வார இதழில் கூறியிருந்தார். ஆனால் சமீபத்தில் வெளியான அவருடைய பேட்டியில் (ஆனந்த விகடன் என நினைக்கிறேன்) சுஜாதா பாதி வசனங்களை மட்டுமே எழுதினார், மீதி வசனத்தை நானே எழுதியுள்ளேன், அதைப் பார்த்தால் நிச்சயம் சுஜாதா மகிழ்ச்சி அடைவார். மேலும் இந்தப்  படத்திற்கான  தொழில்நுட்ப விஷயங்களை எழுத கவிஞர் வைரமுத்துவின் மகன் கார்கி உதவினர் என சொல்லியிருந்தார். என் மனைவி (என்னைப் போல சுஜாதாவின் 
தீவிர ரசிகை) சொன்னது போல சுஜாதா உயிருடன் இருந்திருந்தால் மட்டுமே இதற்கான பதில் தெரிந்திருக்கும். 

இரண்டு நாட்களாக தினசரிகளில் ஏக்கர் கணக்கில் எந்திரன் பட விளம்பரங்கள் வருகின்றன. முக்கிய விளம்பரங்களில் வைரமுத்து, பா.விஜய், கார்கி இவர்களின் பெயர்கள்தான் பெரிதாக இருக்கின்றன. சுஜாதாவின் பெயர் இல்லை. ஒரு சில விளம்பரங்களில் எல்லா தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்களுடன் சுஜாதாவின் பெயரும் சிறிதாக இடம் பெற்றிருக்கிறது.

ஒரு படத்தில் முக்கிய பங்கு இயக்குனருக்கு என்றால், ஷங்கரின் பெரிய வெற்றி படங்களான முதல்வன், இந்தியன், அந்நியன், சிவாஜி ஆகிய படங்களில் வந்த சுஜாதாவின் "நெத்தியடி" வசங்களை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. ஆனால், அதே படங்களின் பாடல் வரிகளை எவ்வளவு பேரால் நினைவு கொள்ள முடியும்? அப்படியிருக்கும் போது, வைரமுத்து, பா.விஜய், கார்கி ஆகியோருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஏன் சுஜாதாவுக்கு தரப்படவில்லை?  

உன்னைப்போல் ஒருவன் படத்தில் வரும் இரா.முருகன் எழுதிய வசனம் நினைவுக்கு வருகிறது: "மறதி ஒரு தேசிய வியாதி."

Comments

நண்பரே இப்போது வெளிவரும் விளம்பரங்கள் இசை வெளியீட்டுக்கானது அதனால் பாடல் எழுதியோர், இசை அமைப்பாளர் என்பவர்களது பெயர்கள் அதிகம் பிரஸ்தாபிக்கப்படுகின்றன. படம் வெளிவருகையில் அவருக்கு ஓரளவு முக்கியத்துவம் தரப்படும் என நம்பலாம்.

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...