Skip to main content

Super Bug என்ற பெயரில் இந்தியாவின் மேல் வீண்பழி

லண்டனிலிருந்து வெளிவரும் லான்செட் (Lancet) என்ற மருத்துவ இதழ் உலகப்  புகழ்பெற்றது. இதில் சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு சிகிச்சைக்காக செல்லும் அனைவரையும் அச்சுறுத்தும் வண்ணம் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் மூலம் எந்த மருந்துக்குமே கட்டுப்படாத ஒரு புதிய வகை நோய் தொற்றுக் கிருமி (NDM-1, Super bug) உலகமெங்கும் வேகமாகப் பரவுகிறது என்ற செய்திதான் இந்த பரபரப்புக்குக் காரணம்.

இதில் பெரிய வேதனை என்னவென்றால் இதை எழுதிய விஞ்ஞானிகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த கார்த்திகேயன் குமாரசாமி என்பவர். இந்த கட்டுரையின் உள்நோக்கம் என்னவாக இருந்தாலும் இந்தியாவைச் சேர்ந்த தலை சிறந்த விஞ்ஞானிகள் பலர் இதற்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பெரிய எதிர்ப்பை எதிர்பார்க்காத இந்திய விஞ்ஞானி கார்த்திகேயன் குமாரசாமி உடனே புத்திசாலித்தனமாக இந்தக் கட்டுரையில் இந்தியாவை இழிவுபடுத்தும் நோக்குடன் தான் எதுவும் எழுதவில்லை என்றும், அவை தன்னுடைய கவனத்திற்கு வராமல் வேறொரு விஞ்ஞானியால் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மெடிக்கல் டூரிசம் என்ற பெயரில் நம் நாட்டிற்கு சிகிச்சைக்காக வரும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிவருகிறது. இந்தியாவில் இதன் தற்போதைய மதிப்பு 1200 கோடிக்கு இருக்கலாம். இந்தியாவின் potential ஐ பார்க்கும்போது இந்தத் தொகை வெறும் ஜூஜூபிதான்.

பல்வேறு நாட்டினர் இந்தியாவுக்கு சிகிச்சைக்கு வர இங்குள்ள மருத்துவ வசதிகள் வெளிநாடுகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல என்றாலும், சிகிச்சை செலவு மற்ற பெரும்பாலான நாடுகளைக் காட்டிலும் மிக மிகக் குறைவே. இங்குள்ள மருத்துவர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள். நம்முடைய para-medical staff களும் உலகத் தரம் வாய்ந்தவர்கள்தான்.

UK, மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தியாவுக்கு சிகிச்சைக்காக செல்பவர்களை திசை திருப்பவே இந்த நாடகம் என நினைக்கத் தோன்றுகிறது. மேலும், இப்போது மிகப் பெரிய குரலில் மறுப்பு சொல்லும் இந்திய விஞ்ஞானி இதை முதலிலேயே செய்திருக்கலாமே?

இதையும் மீறி சமீபத்தில் International Society for Aesthetic Plastic Surgery வெளியிட்ட அறிக்கையில் Plastic Surgery இல் இந்தியாவை உலகின் முதல் 5 நாடுகளில் ஒன்றாக சேர்த்து பெருமைப்படுத்தியுள்ளது.

இந்த "Super Bug" சமாச்சாரமும் பன்றிக் காய்ச்சல் போல ஒரு புஸ்வானமாகட்டும். இதைப் போன்ற விஷயங்களை மறுபடி, மறுபடி வெளியிட்டு மக்களிடையே பீதியைக் கிளப்பும் பத்திரிக்கை/டிவிகளுக்கு கூடிய சீக்கிரம் மத்திய அரசு ஒரு பெரிய ஆப்பு வைக்கவேண்டும்.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...