Skip to main content

சிலை சிலையாம் காரணமாம் - 1: 

கடல் தாண்டி விரியும் கடத்தல் வலை...

2011 அக்டோபர் 30... பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் (Frankfurt) பன் னாட்டு விமான நிலையம். இன்னும் சற்று நேரத்தில் அங்கிருந்து நியூ யார்க் புறப்படுவதற்காக, முதலா வது ஓடுதளத்தில் தன்னை ஆயத் தப்படுத்திக் கொண்டிருக்கிறது யுனை டெட் ஏர்லைன்ஸ் விமானம். அதில் பயணிக்கக் காத்திருக்கும் பயணி களுக்கு இமிக்ரேஷன் சடங்குகளை முடிப்பதற்காக அவசரகதியில் இயங் கிக் கொண்டிருக்கிறார்கள் விமான நிலைய அதிகாரிகள்.

ஆண்டுக்கணக்கில் கூண்டுக்குள் சிக்க வைக்கப் போகும் ஆபத்து தன்னை நெருங்கிக் கொண்டிருப்பது தெரியா மல், 60 வயது மதிக்கத்தக்க அந்தப் பெரியவர் கைப்பேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருக்கிறார். திடீரென பரபரப்பாகிறது விமான நிலையம். வந்திருப்பது சர்வதேச போலீஸான ‘இன்டர்போல்’ என்றதும் வணக்கம் வைத்து வழிவிடுகிறார்கள் விமான நிலைய அதிகாரிகள். அடுத்த சில நிமிடங் களில் ‘இன்டர்போல்’ (Interpol) வாகனத்தில் இறுக்கமான முகத்துடன் பயணித் துக் கொண்டிருந்தார் சுபாஷ் சந்திர கபூர் என்ற அந்தப் பெரியவர்.


சுபாஷ் சந்திர கபூர் - சர்வதேச அளவில் செயல்படும் சிலைக் கடத் தல் மாஃபியாக்களின் அதி முக்கியப் புள்ளி என்றும்; கடந்த 5 ஆண்டுகளாக சென்னை புழல் சிறையில் இருக்கும் கபூர், கடந்த 35 ஆண்டுகளில் இந்தியா வில் இருந்து சுமார் 50 ஆயிரம் கலைப் பொக்கிஷங்களை வெளிநாடுகளுக்குக் கடத்தியிருப்பதாகவும் சொல்கிறது ‘இன்டர்போல்’. இவரால் கடத்தி விற்கப் பட்ட இந்திய கலைப் பொருட்கள் உலகின் அத்தனை பிரபல மியூசியங்களிலும் இப்போது காட்சியில் உள்ளன. கபூர் சரித்திரத்தைப் புரட்டுவதற்கு முன்பாக, இந்தியாவில் இருந்து பழம் சிலைகள் உள்ளிட்ட கலை பொக்கிஷங்கள் கடத்தப்படுவதன் பின்னணியைப் பார்க்கலாம்.

ஆங்கிலேயர்கள் நமது செல்வங் களைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக காலம்காலமாக பொதுப்படை பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், இந்திய கலைச் செல்வங்களையும் தொன்மையான புராதனச் சின்னங்களையும் வெளிநாடுகளுக்குக் கடத்துவதையும் சேதப்படுத்தப்படுவதையும் தடுக்கும் நோக்கில் கடுமையான சட்டங்களை அமல்படுத்தியது ஆங்கிலேய அரசுதான்!

இந்திய பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு 1784-ல் ‘ஆசியவியல் கழகம்’ ஏற்படுத்தப்பட் டது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் மொழியியல் அறிஞருமான சர் வில்லியம் ஜோன்ஸ் (Sir. William Jones) தலைமையில் செயல்பட்ட இந்த அமைப்பு, இந்தியாவில் உள்ள பண்பாட்டு மரபுச் சின்னங்களைப் பாது காத்தல், அழிந்துபோன தொன்மை நகரங் கள்குறித்த வரலாற்றை மீட்டெடுத்தல், நல்ல நிலையில் உள்ள வரலாற்று எச்சங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தியது.

சுபாஷ் கபூரின் நியூயார்க் ஆர்ட் கேலரி சிலைகள்
இந்தியா முழுமையும் நில அளவை செய்து எல்லைகள் வகுத்தவர் சர்வேயர் ஜெனரல் லெப்டினென்ட் கர்னல் மெக்கன்ஸி. நில அளவை பணிக்குச் சென்ற இடங்களில் இருந்த புராதனச் சின்னங்கள் உள்ளிட்டவைகளை, தனது கைகளாலேயே ஓவியங்களாக வரைந்த மெக்கன்ஸி, 8,076 கல்வெட்டுகளையும் தொகுத்தார். இவர் வரைந்த ஓவியங்கள் மொத்தம் 2,630. இவை அரிய பொக் கிஷங்களாகப் பாதுகாக்கப்பட்டன. 1861-ல் இந்திய தலைமை ஆளுநர் அலெக்சாண்டர் கன்னிங்காம்
(Alexander Cunnigham) தலைமை யில் ‘இந்திய தொல்லியல் துறை’ உரு வாக்கப்பட்டது. இதன் பிறகுதான் கோயில்கள், சிலைகள், புராதனச் சின்னங்கள் பாதுகாக்க சட்டம் வகுக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, 1878-ல் பிரிட்டிஷ் இந்திய அரசின் செயலாளராக இருந்த சாலிஸ்பரி பிரபு (Lord Salisbury) இந்திய புதையல் சட்டத்தை (Indian Treasure Trove Act) கொண்டுவந்தார். இதன்படி, பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுக்கும் பொருட்கள் 100 ஆண்டுகள் பழமை யானதாக இருந்தால் அது அரசுக் குச் சொந்தம். அதன் மதிப்பு 10 ரூபாய்க்குக் கீழிருந்தால் அதை நிலத்தின் உரிமையாளரே அனுபவிக்கலாம். 10 ரூபாய் மதிப்புக்கு அதிகமாக இருந் தால் அதை அரசிடம் ஒப்படைக்க வேண் டும். ஒப்படைக்கப்படும் பொருளின் மதிப் பில் நான்கில் ஒரு பங்குக்கான தொகையை நிலத்தின் உரிமை யாளருக்கும் புதையலை எடுக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளிக்கும் அரசே ஊக்கப் பரிசாக வழங்கும். பூமியில் இருந்து கிடைக்கும் பழம்பொருட்களை மக்கள் மறைத்துவிடவோ, அழித்து வேறு பொருளாக மாற்றிவிடவோ கூடாது என்பதற்காக இப்படியொரு வழிமுறையைக் கையாண்டது ஆங்கிலேயே அரசு.

1904-ல் ‘பழங்கால நினைவுச் சின்னங் கள் பாதுகாப்புச் சட்டம்’ இயற்றப்பட் டது. இச்சட்டம், பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து தொன்மையான பழம்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்வதற்கும் தடை விதித் தது. இதை மீறுவோருக்கு ரூ. 5,000 அபராதம் (அ) 3 ஆண்டுகள் சிறை, அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட்டது. 1947-ல் இச்சட்டத்தை கடுமையாக்கி ‘பழம் பொருட்கள் ஏற்றுமதி கட்டுப்பாட் டுச் சட்டம்’ கொண்டுவரப்பட்டது. இதன் படி, 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த பொருட்கள் அனைத்தும் நாட்டுக் குச் சொந்தம் எனவும் தொல்லியல்துறை யின் பொது இயக்குநர் தொன்மை அல்லாத கலைப் பொருட்கள் ஏற்றுமதிக்கான உரிமம் வழங்கும் அதிகாரம் படைத்தவர் எனவும் அறிவிக்கப்பட்டது.



1950 ஜனவரி 26-ல் இந்திய அரசியல மைப்புச் சட்டம் உருவானபோது, அதன் 7-வது அட்டவணையின் பட்டியல் ஒன்று இனம் 67-ல் வரலாற்றுச் சின்னங்கள், ஆவணங்கள், பாரம்பரிய பொருட்கள், உள்ளிட்டவைகளைப் பாதுகாப்பது குறித்து சட்ட வரைவுகள் ஏற்படுத்தப் பட்டன. இதன் பிறகு 1958, 1972, 1976 என மூன்றுமுறை, பாரம்பரியக் கலை மற்றும் புராதனச் சின்னங்கள் பாதுகாப் புச் சட்டத்தில் (The Antiquities and Art Treasures Act) திருத்தங்கள் கொண்டு வரப்பட்டாலும் சிலைகள் உள்ளிட்ட தொன்மைப் பொருட்கள் கடத்தல் சம்பவங்களில் பெரிதாக யாரும் தண்டிக்கப்படவில்லை. ஏன் தெரியுமா?

தமிழக கோயில்களுக்குச் சொந்தமான சிலைகளைக் கடத்தியதாக தீனதயாள் அவரது கூட்டாளி லட்சுமி நரசிம்மன் ஆகியோரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு (சி.ஐ.டி) போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். தீனதயாளிடம் இருந்து ஓவியங்கள், ஐம்பொன் மற்றும் கற்சிலைகள் நூற்றுக்கணக்கான பழமையான கலைப் பொருட்களும் லட்சுமி நரசிம்மனிடம் இருந்து 9 ஐம்பொன் சிலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களது கிளைகளை நோக்கி விசாரணை போய்க்கொண் டிருக்கும் நிலையில்.., 

சிலைக் கடத்தல் மர்மங்களை அம்பலப்படுத்துகிறது இந்தத் தொடர்....

நன்றி: குள.சண்முகசுந்தரம், தமிழ் இந்து 

Comments

Unknown said…
I read your post is very interactive. I really read the post good feel. I shared information Vehicle towing company. It is best technology provide. Thanks for posting.

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்