Skip to main content

மனதை மயக்கும் மதுரை மல்லி


மதுரை நகரில் உள்ள மலர் சந்தை (மதுரை மக்களுக்கு "பூக்கடை" என்றால்தான் தெரியும்) எப்போதுமே கசகசவென கூட்டம் நிரம்பி வழியும் ஒரு இடம். கூச்சலும், இரைச்சலும் இங்கு நிரந்தரமாக இருக்கும். ஆனால், உலகப் புகழ் பெற்ற கிறிஸ்டியன் டியோர் (Christian Dior) என்ற நறுமண பொருள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் பிரான்கோய் டிமாகி  (Francois Demachy) என்பவருக்கு இது ஒரு நறுமண வங்கி (smell bank). இவர் இங்கு ஒவ்வொரு வருடமும் நேரில் வந்து தன்னுடைய உலகப் புகழ் பெற்ற டியோர் நறுமண பொருட்களுக்கு (fragrance products) தேவையான மல்லிகை பூக்களை தேர்ந்து எடுக்கிறார்.

ஜாடோர் (J'Adore) என்ற இவர்களின் உலகப் புகழ் பெற்ற வாசனை திரவியம் (perfume). இதன் மூலப்பொருள் நம்முடைய மதுரை மல்லிதான். மதுரை மல்லியுடன், வேறு சில பூக்களின் பங்கும் இதன் நறுமணத்துக்கு காரணம் என்றாலும், டிமாகி மதுரை மல்லியின் நறுமணமும், மதுரை மண்ணின் சிறப்புமே முக்கிய காரணம் என்கிறார்.


மனிதரை மயங்க வைக்கும் சிறப்பு, மல்லிகைப் பூவுக்கு உள்ளது. அதிலும், மதுரை மல்லிக்கு இத்தகுதி அதிகம். மதுரையில்தான். மதுரை மல்லி, குண்டு, குண்டாய், கொள்ளை வெள்ளையாய், இதழ் தடிமனாய், எளிதில் உதிராமல், இரண்டு நாட்கள் இருந்தாலும் வாடி வதங்காமல், மருத்துவ குணம் கொண்டது.இந்த மல்லிகைப் பூக்கள், மதுரையில் பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைக்கின்றன. மல்லிகையின், தாய்ச்செடி ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் இருந்து பதியன்களாக பல்வேறு இடங்களுக்கும் செல்கிறது. திண்டிவனம், சேலம், கோவை, சத்தியமங்கலம், மதுரை, நெல்லை என எந்தப் பகுதிக்குச் சென்றாலும், மதுரை பகுதியில் விளையும் மல்லிகைக்குத்தான் மணக்கும் குணம் அதிகம்.


 மதுரை மார்க்கெட்டுக்கு, தினமும் 10 டன் உட்பட, 6 மார்க்கெட்டுகளிலும் 50 டன்னுக்கும் மேலாக மல்லிகைப்பூ விற்பனைக்கு வருகிறது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், இவற்றின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு லட்சம் பேராவது இத்தொழிலில் இருப்பர்.ஜனவரி முதல் ஏப்ரல் வரை மல்லிகைப்பூ உற்பத்தி அதிகமாக இருக்கும்.

ஒவ்வொரு வருடமும் மதுரை வரும் டிமாகி, நேரடியாக மல்லி விளையும் இடங்களுக்கு சென்று அங்குள்ள தொழிலாளிகளுடன் பேசுகிறார். மல்லி விளைவதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி அவர்களுடன் ஆராய்கிறார். பின்னர், மல்லிகை மலர்களிலிருந்து இவருடைய டியோர் நிறுவனத்திற்கு தேவையான extracts எனப்படும் பூக்களின் சாறு கொண்ட மூலப் பொருளை எந்தெந்த முறையில், அதன் குணமும் மணமும் மாறாமல் தயாரிக்க வேண்டும் என்பது பற்றி விளக்குகிறார்.

எங்கேயோ இருக்கும் ஒரு உலகப் புகழ் நிறுவனம் அதனுடைய perfume தயார் செய்ய நம்முடைய மல்லிகையை பயன்படுத்துகிறது. நம்மூர் பெண்கள் பூக்களை தலையில் சூடினால் அது பட்டிகாட்டுத்தனம் என்று மல்லி போன்ற மலர்களை புறக்கணித்து விட்டனர். ஹ்ம்ம்ம்ம்....எதுக்கோ தெரியாதாம் மல்லிகையின் வாசனை...

Comments

மணக்கிறது..!

வாழ்த்துக்கள்...

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...