Skip to main content

மனதை மயக்கும் மதுரை மல்லி


மதுரை நகரில் உள்ள மலர் சந்தை (மதுரை மக்களுக்கு "பூக்கடை" என்றால்தான் தெரியும்) எப்போதுமே கசகசவென கூட்டம் நிரம்பி வழியும் ஒரு இடம். கூச்சலும், இரைச்சலும் இங்கு நிரந்தரமாக இருக்கும். ஆனால், உலகப் புகழ் பெற்ற கிறிஸ்டியன் டியோர் (Christian Dior) என்ற நறுமண பொருள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் பிரான்கோய் டிமாகி  (Francois Demachy) என்பவருக்கு இது ஒரு நறுமண வங்கி (smell bank). இவர் இங்கு ஒவ்வொரு வருடமும் நேரில் வந்து தன்னுடைய உலகப் புகழ் பெற்ற டியோர் நறுமண பொருட்களுக்கு (fragrance products) தேவையான மல்லிகை பூக்களை தேர்ந்து எடுக்கிறார்.

ஜாடோர் (J'Adore) என்ற இவர்களின் உலகப் புகழ் பெற்ற வாசனை திரவியம் (perfume). இதன் மூலப்பொருள் நம்முடைய மதுரை மல்லிதான். மதுரை மல்லியுடன், வேறு சில பூக்களின் பங்கும் இதன் நறுமணத்துக்கு காரணம் என்றாலும், டிமாகி மதுரை மல்லியின் நறுமணமும், மதுரை மண்ணின் சிறப்புமே முக்கிய காரணம் என்கிறார்.


மனிதரை மயங்க வைக்கும் சிறப்பு, மல்லிகைப் பூவுக்கு உள்ளது. அதிலும், மதுரை மல்லிக்கு இத்தகுதி அதிகம். மதுரையில்தான். மதுரை மல்லி, குண்டு, குண்டாய், கொள்ளை வெள்ளையாய், இதழ் தடிமனாய், எளிதில் உதிராமல், இரண்டு நாட்கள் இருந்தாலும் வாடி வதங்காமல், மருத்துவ குணம் கொண்டது.இந்த மல்லிகைப் பூக்கள், மதுரையில் பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைக்கின்றன. மல்லிகையின், தாய்ச்செடி ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் இருந்து பதியன்களாக பல்வேறு இடங்களுக்கும் செல்கிறது. திண்டிவனம், சேலம், கோவை, சத்தியமங்கலம், மதுரை, நெல்லை என எந்தப் பகுதிக்குச் சென்றாலும், மதுரை பகுதியில் விளையும் மல்லிகைக்குத்தான் மணக்கும் குணம் அதிகம்.


 மதுரை மார்க்கெட்டுக்கு, தினமும் 10 டன் உட்பட, 6 மார்க்கெட்டுகளிலும் 50 டன்னுக்கும் மேலாக மல்லிகைப்பூ விற்பனைக்கு வருகிறது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், இவற்றின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு லட்சம் பேராவது இத்தொழிலில் இருப்பர்.ஜனவரி முதல் ஏப்ரல் வரை மல்லிகைப்பூ உற்பத்தி அதிகமாக இருக்கும்.

ஒவ்வொரு வருடமும் மதுரை வரும் டிமாகி, நேரடியாக மல்லி விளையும் இடங்களுக்கு சென்று அங்குள்ள தொழிலாளிகளுடன் பேசுகிறார். மல்லி விளைவதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி அவர்களுடன் ஆராய்கிறார். பின்னர், மல்லிகை மலர்களிலிருந்து இவருடைய டியோர் நிறுவனத்திற்கு தேவையான extracts எனப்படும் பூக்களின் சாறு கொண்ட மூலப் பொருளை எந்தெந்த முறையில், அதன் குணமும் மணமும் மாறாமல் தயாரிக்க வேண்டும் என்பது பற்றி விளக்குகிறார்.

எங்கேயோ இருக்கும் ஒரு உலகப் புகழ் நிறுவனம் அதனுடைய perfume தயார் செய்ய நம்முடைய மல்லிகையை பயன்படுத்துகிறது. நம்மூர் பெண்கள் பூக்களை தலையில் சூடினால் அது பட்டிகாட்டுத்தனம் என்று மல்லி போன்ற மலர்களை புறக்கணித்து விட்டனர். ஹ்ம்ம்ம்ம்....எதுக்கோ தெரியாதாம் மல்லிகையின் வாசனை...

Comments

மணக்கிறது..!

வாழ்த்துக்கள்...

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்