Skip to main content


ஓம் பர்வத மலை

(Om Parbat)

இமயமலையில் அமைந்துள்ள ஓம் பர்வத மலை (Om Parbat) என்பது ஆதி கைலாஷ் என்று பலரால் அறியப்படுகிறது. இதற்கு சிறிய கைலாஷ், ஜாங்லிங்காங் பீக் (Jonglingkong Peak), பாபா கைலாஷ் என்றும் பல பெயர்கள் உண்டு.
இமயமலையின் ஒரு பகுதியில் கருத்த மலையின் பின்னணியில், படர்ந்திருக்கும் வெண்மை நிற பனியானது, இந்துக்கள் வழிபடும் ஓம்காரத்தின் (ஹிந்தி ஓம் [ॐ} எழுத்து) வடிவில் அமைந்திருப்பதே இந்த கைலாச மலையின் சிறப்பம்சமாகும். இது கூர்ந்து கவனித்தால் தெரிவதாகவோ, அவ்வாறு தோன்றுவதாகவோ இல்லாமல், மிகத் தெளிவாக ஓம் காரத்தைப் பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும், இங்கு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில்       ஓம்காரத்தில் அந்த புள்ளியும் தென்படுவது விசேஷமாகும்.
இந்து பெரியவர்களின் கூற்றுப்படி, இமயமலைப் பகுதியில் இதுபோன்ற ஓம்காரம் எட்டு இடங்களில் இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், அதில் இதுவரை உலகம் பார்த்து அறிந்த ஒரே ஓம்காரம் இந்த ஓம் பர்வத மலையில் மட்டும்தான்.
ஓம் பர்வத மலைக்கு அருகே பர்வத ஏரி மற்றும் ஜாங்லிங்காங் ஏரி அமைந்துள்ளன. ஜாங்லிங் ஏரியை இந்துக்கள் மானசரோவர் என்று அழைக்கின்றனர்.
இமயமலைத் தொடரில் தார்சுலா மாவட்டத்தில் 6,191 மீ உயரத்தில் அமைந்துள்ள ஓம் பர்வதம் மலையானது இந்து, பௌத்தம், சமண மதங்கள் புனிதத் தலமாக வழிபடும் இடமாகத் திகழ்கிறது.
இந்தோ - நேபாள் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்த மலையில் இருந்து பனி சூழ்ந்திருக்கும் அன்னப்பூர்ணா சிகரங்களைக் காண இயற்கை விரும்பிகள் அதிகம் விரும்புவர்.
ஓம் பர்வத மலைக்குச் சென்றாலும், அந்தஓம்காரத்தைக் காண வேண்டும் என்றால், அதற்கு இயற்கை ஒத்துழைக்க வேண்டும். பனிச் சிகரத்தை மூடியிருக்கும் மேக கூட்டங்கள் முழுமையாக அகண்டால்தான், ஓம்காரத்தை முழுவதுமாக கண்டு தரிசிக்க இயலும். அதுவும் ஒரு சில நிமிடங்கள்தான் மீண்டும் மேகக் கூட்டங்கள் அந்த தரிசனத்தை மறைத்துவிடுக் கூடும்.
இங்கு செல்லும் பயணிகள், வழியோடே காளி ஆறு, நீர் வீழ்ச்சி, அடர்ந்த வனம், நாராயண் ஆசிரமம், கெளரி குண்ட், மலையின் பிம்பத்தை அப்படியே பிரதிபலிக்கும் நீரோடை என இயற்கை அழகின் எல்லைகளைக் கண்டு கொண்டே செல்லலாம்.
இவ்விடத்துக்குச் செல்ல வேண்டும் என்றால், நேபாளத்தின் எல்லைக்குள் சென்றுவிட்டுத்தான் ஓம் பர்வத மலையை அடைய வேண்டும். இதற்காக சிறப்பு அனுமதி பெற வேண்டியது அவசியமாகிறது.
தற்போது ஏராளமான சுற்றுலா மையங்கள், ஓம் பர்வத மலைக்குச் சுற்றுலா அழைத்துச் செல்வது அதிகரித்துள்ளது. மேலும், இங்கு செல்ல பல ஹெலிகாப்டர் சேவைகளும் வழங்கப்படுவது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகுந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Hari said…
GOD WHEN SHOULD SEE TGE OHM

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...