Skip to main content

"அப்புசாமி - சீதா பாட்டி இசைக் கூடல்' ஓர் வித்தியாசமான இசைவிழா

 
சென்னையில் வாழும் ரசிகர்களின் ரசனையும், ருசியும் அலாதியானது. நல்ல சாப்பாடு, சங்கீதம், எழுத்து, நாடகம், நாட்டியம், ஓவியம் எல்லாவற்றையுமே அவரவர்களின் தேடலுக்கு ஏற்ப அணு அணுவாக ரசிக்கும் ரசனை உடையவர்களில் முதலிடம், சென்னைவாசிகளுக்கே உண்டு.

ரசனை - ரசிக்கும் தன்மை மக்களிடையே நல்ல உறவை வளர்க்கும். பரஸ்பர அன்புடன் நல்ல சமுதாயத்தையும் உருவாக்க முடியும்.

"அப்புசாமி - சீதா பாட்டி' இசைக் கூடல் அமைப்பும், ரசனையை வளர்க்கும் நல்லதொரு விஷயத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள அமைப்பாகும் .

இந்த இசைக் கூடலில், சிறந்த சமூக சேவகியான டாக்டர் ஷ்யாமா, பத்திரிகையாளர் காந்தலட்சுமி சந்திரமவுலி, தேஜோமயி கல்வி மையங்களின் தலைவர் உமாயோகேஸ்வரன் இவர்களுடன், பிரபல நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். அக்கறை என்னும் அமைப்பையும் இவர்கள் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

"அப்புசாமி - சீதா பாட்டி' நகைச்சுவை பாத்திரத்தை உலவவிட்டு நிலை நிறுத்தியவர் எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசன் ஆவார். அவர் இதை நடத்தும் குழுவில் முக்கியமானவர்.

மகாத்மா காந்தி பிறந்த நாளன்று, மயிலை கற்பகாம்பாள் நகரில் கோகலே சாஸ்திரி இன்ஸ்டிடியூட் கலையரங்கத்தில் அப்புசாமி - சீதா பாட்டி இசைக் கூடலின் இசை நிகழ்ச்சி நடந்தது. மகாத்மா காந்தியுடன் மறைந்த பிரபல சங்கீத விதூஷி சங்கீத கலாநிதி டி.கே.பட்டம்மாளுக்கும் இசையஞ்சலி செலுத்தும் விதமாக, அவருடைய மாணவி பெங்களூரைச் சேர்ந்த ஜெயந்தி ரங்கராஜனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், டி.கே.பி.,யின் புகழ்பெற்ற பாடல்களான குருவருளும் (ஆபோகி) (கவுரிசங்கர் ஸ்தபதி) ஸ்ரீமன் நாராயணா (பவுளி) (அன்னமய்யா) சுஜன ஜீவன (கமாஸ், ரூபகம், தியாகராஜர்) குறிப்பாக ரங்கநாயகம் (நாயகி) (ஆதி) (ஸ்ரீதீட்சிதர்) சுருக்கமாக தோடி ராகம் ஜீவனை தந்து தொடர்ந்து சுப்ரமண்யோம் (ஸ்ரீதீட்சிதர் - ஆதி) பட்டம்மாள் புகழ் சுதானந்த பாரதியின் எப்படிப் பாடினரோ (பீம்ப்ளாஸ்) (ஆதி) எனத் தொடர்ந்தது.

காந்திக்கு மிகவும் பிரியமான வைஷ்ணவ ஜனதோ (பஜன்) நிறைவாக வாழிய செந்தமிழ் பாடலுடன், குருவை நினைவுபடுத்தும் கச்சித சங்கதிகளுடனும் பட்டு கத்தரித்த நயத்துடனும், சம்பிரதாய சுத்தமாகவும் இசையை வழங்கினார்.

அமரர் டி.கே.பி.,யின் மறக்க முடியாத இசை வாரிசு இவர் என்பதையும், காந்திக்கு இதுவே இந்த இசைக் கூடலின் ஒப்பற்ற அஞ்சலியென்றும் கூற வைத்தது.பக்கவாத்தியத்தில், வயலினில் இளம் கலைஞர் சுதா ஆர்.எஸ்.அய்யர் (வயலின்) சுருதி சுத்தம் மதுரமாகவும் இருந்தது. குரு ராகவேந்திராவின் நயமான லயமும், கூடுதல் மெருகை தந்து ரசிகர்களை மகிழ்வித்தது.

இப்படிப்பட்ட ரசனை பரிமாற்றங்களை செய்யும் இந்த அப்புசாமி - சீதா பாட்டி இசைக் கூடல், மாறுபட்ட அமைப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது .

நன்றி: தினமலர்

Comments

ராமு,
//சென்னையில் வாழும் ரசிகர்களின் ரசனையும், ருசியும் அலாதியானது. நல்ல சாப்பாடு, சங்கீதம், எழுத்து, நாடகம், நாட்டியம், ஓவியம் எல்லாவற்றையுமே அவரவர்களின் தேடலுக்கு ஏற்ப அணு அணுவாக ரசிக்கும் ரசனை உடையவர்களில் முதலிடம், சென்னைவாசிகளுக்கே உண்டு.//

நீங்க சொல்ற சென்னை என்பது மாம்பலம், மயிலாப்பூர், தில்லக்கேணி மட்டுமே அடங்கிய சென்னையா இருக்கும், இப்போ கிரேட்டர் மெட்ராஸ்ல அதை எல்லாம் தாண்டி வந்துட்டோமே(அப்போ ரசமட்டம் ஆகி இருக்குமோ)
வித்தியாசமான பதிவு வாழ்த்துக்கள்

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...