Skip to main content

"அப்புசாமி - சீதா பாட்டி இசைக் கூடல்' ஓர் வித்தியாசமான இசைவிழா

 
சென்னையில் வாழும் ரசிகர்களின் ரசனையும், ருசியும் அலாதியானது. நல்ல சாப்பாடு, சங்கீதம், எழுத்து, நாடகம், நாட்டியம், ஓவியம் எல்லாவற்றையுமே அவரவர்களின் தேடலுக்கு ஏற்ப அணு அணுவாக ரசிக்கும் ரசனை உடையவர்களில் முதலிடம், சென்னைவாசிகளுக்கே உண்டு.

ரசனை - ரசிக்கும் தன்மை மக்களிடையே நல்ல உறவை வளர்க்கும். பரஸ்பர அன்புடன் நல்ல சமுதாயத்தையும் உருவாக்க முடியும்.

"அப்புசாமி - சீதா பாட்டி' இசைக் கூடல் அமைப்பும், ரசனையை வளர்க்கும் நல்லதொரு விஷயத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள அமைப்பாகும் .

இந்த இசைக் கூடலில், சிறந்த சமூக சேவகியான டாக்டர் ஷ்யாமா, பத்திரிகையாளர் காந்தலட்சுமி சந்திரமவுலி, தேஜோமயி கல்வி மையங்களின் தலைவர் உமாயோகேஸ்வரன் இவர்களுடன், பிரபல நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். அக்கறை என்னும் அமைப்பையும் இவர்கள் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

"அப்புசாமி - சீதா பாட்டி' நகைச்சுவை பாத்திரத்தை உலவவிட்டு நிலை நிறுத்தியவர் எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசன் ஆவார். அவர் இதை நடத்தும் குழுவில் முக்கியமானவர்.

மகாத்மா காந்தி பிறந்த நாளன்று, மயிலை கற்பகாம்பாள் நகரில் கோகலே சாஸ்திரி இன்ஸ்டிடியூட் கலையரங்கத்தில் அப்புசாமி - சீதா பாட்டி இசைக் கூடலின் இசை நிகழ்ச்சி நடந்தது. மகாத்மா காந்தியுடன் மறைந்த பிரபல சங்கீத விதூஷி சங்கீத கலாநிதி டி.கே.பட்டம்மாளுக்கும் இசையஞ்சலி செலுத்தும் விதமாக, அவருடைய மாணவி பெங்களூரைச் சேர்ந்த ஜெயந்தி ரங்கராஜனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், டி.கே.பி.,யின் புகழ்பெற்ற பாடல்களான குருவருளும் (ஆபோகி) (கவுரிசங்கர் ஸ்தபதி) ஸ்ரீமன் நாராயணா (பவுளி) (அன்னமய்யா) சுஜன ஜீவன (கமாஸ், ரூபகம், தியாகராஜர்) குறிப்பாக ரங்கநாயகம் (நாயகி) (ஆதி) (ஸ்ரீதீட்சிதர்) சுருக்கமாக தோடி ராகம் ஜீவனை தந்து தொடர்ந்து சுப்ரமண்யோம் (ஸ்ரீதீட்சிதர் - ஆதி) பட்டம்மாள் புகழ் சுதானந்த பாரதியின் எப்படிப் பாடினரோ (பீம்ப்ளாஸ்) (ஆதி) எனத் தொடர்ந்தது.

காந்திக்கு மிகவும் பிரியமான வைஷ்ணவ ஜனதோ (பஜன்) நிறைவாக வாழிய செந்தமிழ் பாடலுடன், குருவை நினைவுபடுத்தும் கச்சித சங்கதிகளுடனும் பட்டு கத்தரித்த நயத்துடனும், சம்பிரதாய சுத்தமாகவும் இசையை வழங்கினார்.

அமரர் டி.கே.பி.,யின் மறக்க முடியாத இசை வாரிசு இவர் என்பதையும், காந்திக்கு இதுவே இந்த இசைக் கூடலின் ஒப்பற்ற அஞ்சலியென்றும் கூற வைத்தது.பக்கவாத்தியத்தில், வயலினில் இளம் கலைஞர் சுதா ஆர்.எஸ்.அய்யர் (வயலின்) சுருதி சுத்தம் மதுரமாகவும் இருந்தது. குரு ராகவேந்திராவின் நயமான லயமும், கூடுதல் மெருகை தந்து ரசிகர்களை மகிழ்வித்தது.

இப்படிப்பட்ட ரசனை பரிமாற்றங்களை செய்யும் இந்த அப்புசாமி - சீதா பாட்டி இசைக் கூடல், மாறுபட்ட அமைப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது .

நன்றி: தினமலர்

Comments

ராமு,
//சென்னையில் வாழும் ரசிகர்களின் ரசனையும், ருசியும் அலாதியானது. நல்ல சாப்பாடு, சங்கீதம், எழுத்து, நாடகம், நாட்டியம், ஓவியம் எல்லாவற்றையுமே அவரவர்களின் தேடலுக்கு ஏற்ப அணு அணுவாக ரசிக்கும் ரசனை உடையவர்களில் முதலிடம், சென்னைவாசிகளுக்கே உண்டு.//

நீங்க சொல்ற சென்னை என்பது மாம்பலம், மயிலாப்பூர், தில்லக்கேணி மட்டுமே அடங்கிய சென்னையா இருக்கும், இப்போ கிரேட்டர் மெட்ராஸ்ல அதை எல்லாம் தாண்டி வந்துட்டோமே(அப்போ ரசமட்டம் ஆகி இருக்குமோ)
வித்தியாசமான பதிவு வாழ்த்துக்கள்

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்