Skip to main content

ஊழலை எதிர்ப்போம்

 
 


அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போரைப் பற்றி செய்தித்தாள்களும், தொலைக் காட்சி சானல்களும் வரிந்து கட்டிக் கொண்டு எழுதிவரும் இந்த நேரத்தில் சில தேவையில்லாத சம்பவங்களும் நடக்கின்றன.  

ஊழலின் மொத்த உருவமான சில அரசியல்வாதிகளும், மக்களுக்கு இதுவரை எந்தவித நன்மையையும் செய்திராத சில அரசியல் கட்சிகளும் இதில் குளிர் காய்ந்து ஆதாயம் காண முனைந்துள்ளன. 

பொது மக்களின் வரலாறு காணாத ஆதரவு அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு கிடைத்துள்ளதைக் கண்டு, என்ன நடந்தாலும் மக்களுக்கு நல்லது நடக்கக் கூடாது என்ற முனைப்பில் இருக்கும் நம் மத்திய அரசு, விதவிதமாக இந்த அறப் போராட்டத்துக்கு இடையூறு செய்து வருகிறது. 

இன்று அன்னாவுக்கு ஆதரவாக சேர்ந்து வரும் கூட்டம், நம்முடைய அரசியல் கட்சிகள் கூட்டுவதுபோல குவாட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் சேரும் கூட்டம் அல்ல. நாடெங்கிலும் சாதி, மதம், தொழில், கல்வி என்று எந்தவிதமான வேறுபாடும் பார்க்காமல், ஊழலையும், அரசியல்வாதிகளையும் கண்டு சலித்துப்போன சாமானியர்களின் கூட்டம்.

இதில் லேட்டஸ்ட், இந்தப் போராட்டம் மேல் சாதியினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இதில் தலித் மக்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று ஒரு செய்தியை (வதந்தியை) பரப்ப முயன்று வருகிறது நம்முடைய முட்டாள் மத்திய அரசு.

ஊழல் என்பது ஒரு நாடு தழுவிய நோய், இதிலிருந்து நாம் மீள வேண்டுமென்றால் இது போன்ற செய்திகளை ஒதுக்கித் தள்ள வேண்டும். முக்கியமாக நம்மால் தனிப்பட்ட முறையில் யாருக்கும் லஞ்சம் என்ற பேரில் எந்தவிதமான கைமாறும் இருக்கக்கூடாது.

"நான் அன்னா" ஒவ்வொரு இந்தியனும் நினைக்க வேண்டும். ஊழல் எதிர்ப்பு என்பது நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய ஒன்று.


Comments

KOMATHI JOBS said…
முக்கியமாக நம்மால் தனிப்பட்ட முறையில் யாருக்கும் லஞ்சம் என்ற பேரில் எந்தவிதமான கைமாறும் இருக்கக்கூடாது.

Lets start from ourself.., from today!
ஊழல் இந்தியாவில் மட்டுமல்ல, இங்கும் உலகெங்கும் ஒழிக்கப்படுவது அவசியம்.
ஊழல் இந்தியாவில் மட்டுமல்ல, இங்கும் உலகெங்கும் ஒழிக்கப்படுவது அவசியம்.

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...