Skip to main content

துபாய்! துபாய்!! துபாய்!!!

பல நாடுகளை ஏற்கனவே பார்த்து விட்டாலும், இதோ வெகு அருகிலேயே இருக்கும் துபாய் மற்றும் இலங்கையை இன்னும் பார்க்கவில்லை என்ற குறை எனக்குள் ரொம்ப நாட்களாக இருந்து வந்தது. நெருங்கிய நண்பர் ஒருவர் இலங்கைக்கு சென்றுவிட்டு வந்து, "என்னடா, அப்பிடியே கேரளாவுக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கு," என்று சொல்லவே, இலங்கை செல்லும் ஆசை குறைந்துவிட்டது.

துபாய் செல்லும் சந்தர்ப்பம் கடந்த 30 ம் தேதி கிட்டியது. என்னுடைய அலுவலக வேலை நிர்பந்தத்தின் காரணமாக என்னுடைய பெரும்பாலான பயணங்கள் தனியாகவே அமைந்துவிடும். ஒரு சில பயணங்கள் என் நெருங்கிய நண்பர்களுடன். ஒரே ஒரு முறை குடும்பத்துடன் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து சென்று வந்தேன்.

துபாயில் காலை ஆறு மணிக்கு விமான நிலையத்திலிருந்து வெளிவந்தபோது ஏதோ அடுப்புக்குள் வந்த மாதிரி ஒரு சூடு. உடனடியாக காத்திருந்த காரில் ஏறி ஹோட்டலுக்கு சென்றுவிட்டோம். என் மனைவி தீவிர சைவம் என்பதால், ஒரு வேளை சாப்பிட சரியாக கிடைக்காவிட்டால் எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு சர்விஸ் அப்பார்ட்மென்ட்டை புக் செய்து வைத்திருந்தேன். நல்ல காற்றோட்டமாக, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் என்று சகல வசதிகளுடன் இருந்த அந்த  சர்விஸ் அப்பார்ட்மென்ட்டைப் பார்த்தவுடன் என் மனைவிக்கு குஷி வந்துவிட்டது. சாப்பாடு சரியில்லை என்றால் நானே சமைத்து விடுகிறேன் என்று சொல்லியவுடன், ஒரு நாள் வாடகை நம் இந்திய மதிப்பில் ரூ.14,000/- என்றாலும், நானும் குஷியாகிவிட்டேன்.

துபாய் நண்பர் வெங்கடேஷ் அருகிலிருக்கும் சுக் சாகர் என்ற இந்திய உணவகத்துக்கு அழைத்து சென்றார். சூடாக இட்லி, வடை சாப்பிட்ட பிறகு துபாயில் 5 நாட்களை கடத்திவிடலாம் எனத் தோன்றியது. ஒரு பாலைவனத்தை இப்படி ஒரு மெகா நகரமாக மாற்றி அமைத்ததற்காகவே துபாய் அரசை பாராட்டவேண்டும். தண்ணீர், காய்கறிகள், பழங்கள், அரிசி அனைத்து பொருட்களுமே இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயம் என்றாலும் எதிலுமே குறை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் எல்லாமே ரொம்ப, ரொம்ப விலை அதிகம். எனக்குத் தெரிந்து துபாயில் விலை குறைந்த ஒரே சமாசாரம் பெட்ரோல்தான். ஒரு லிட்டர் கிட்டத்தட்ட ரூ.22 என்று கேட்டவுடன் பேசாமல் ஒரு டேங்கர் பெட்ரோலை சென்னைக்கு கடத்தினால் என்ன என்று கூட அபத்தமாக தோன்றியது. பல நாடுகளில் பெரிய, பெரிய ஷாப்பிங் மால்களை ஏற்கனவே பார்த்துவிட்டதால், மாறுதலுக்கு வேறு எங்காவது செல்லலாம் என்று துபாய் தங்க வீதிக்கு (கோல்ட் சூக்-gold souk ) சென்றோம். ஜாய் ஆலுக்காஸ் இங்கும் பெரிய கடை ஒன்றைத் திறந்து அட்சய திரிதியை முன்னிட்டு தங்கம் வாங்கினால் தங்கம் இலவசம் என்று கூவி, கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள். தங்கம் வாங்கும் ஆசை இருந்தாலும், டப்பு அதிகமில்லை என்பதால் "விண்டோ ஷாப்பிங்" செய்துவிட்டு (பிளாட்டினம் காயின் முதற்கொண்டு எல்லாம் கிடைக்கிறது), வண்டி ஏறினோம்.

ஆனால், சில பிரபல மால்களையும் விடவில்லை. துபாய் மால், தேரா மால், எமிரேட்ஸ் மால் ஆகியவை மிக பிரமாதமாக இருக்கின்றன. துபாய் ஷேக்குக்கு துட்டு அதிகம் என்ற காரணத்தினால், ஊரையே ஏசி செய்து வைத்ததோடு நில்லாமல், பஸ்சுக்கு காத்திருக்கும்போதும் பொது மக்கள் வெயிலில் வாடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் பஸ் ஸ்டாப் வரை ஏசி செய்திருக்கிறார் (படம் கீழே);


மறுநாள், துபாய் பாலைவனத்திற்கு சென்றோம் (Desert Safari ). எல்லாமே இருந்தும் சுற்றுலா மூலம் நல்ல வருவாய் வரும் என்று தெரிந்தும், சர்வ அலட்சியத்துடன் இருக்கும் நாம் எங்கே, வெறும் பாலைவனத்தை மட்டும் வைத்துக் கொண்டு, அதன் மூலம் விதவிதமான சுற்றுலா திட்டங்களை வைத்து வெளிநாட்டு பயணிகளைக் கவரும் துபாய் எங்கே! பாலைவன சவாரி, அதிகாலையில் பாலைவனத்தில் இருந்து பெரிய, பெரிய பலூன்கள் மூலம் சூரிய உதயத்தை ரசிக்க பிரமாதமாக ஏற்பாடுகள், பாலைவனத்தில் இரவு பிரத்யேக கூடாரங்களில் தாங்கும் வாய்ப்பு, இரவு நடனத்துடன் (belly dance ) உணவு என்று ஏராளமாக இருக்கின்றன.




பாலைவன மணலில் சும்மா சர்வ சாதாரணமாக ஒரு கையிலேயே காரை ஓட்டிய (மறு கையில் செல் போன்) அந்த ஓட்டுனரைப் பாராட்டவேண்டும். 

மறு நாள் அலுவலக வேலையாக துபாய் இண்டர்நேஷனல் ட்ரேட் சென்டர் வரை சென்று விட்டு, மதியம் உலகின் மிக உயரமான கட்டிடமான "புர்ஜ் காலிபா (Burj Khalifa ) சென்றோம். 




மேலே இருக்கும் மூன்று படங்களுமே புர்ஜ் காலிபாவின் 124 லெவலில் இருந்து எடுத்தவை
ஏறத்தாழ 2718 அடி உயரம் கொண்ட இந்தக் கட்டிடத்தில் 164 மாடிகள் உள்ளன. பொதுமக்கள் 124 மாடிகள் வரைதான் அனுமதிக்கப்படுகிறார்கள்.  உலகின் மிக உயரமான கட்டிடம் என்பது தவிர மேலும் சில பெருமைகளும் இதற்கு உண்டு:
  • உலகின் மிக உயரமான தனித்த கட்டிடம் (tallest free - standing )
  • உலகில் அதிக மாடிகள் உள்ள கட்டிடம்
  • உலகில் அதிக உயரத்துக்கு செல்லும் மின்-தூக்கி (lift )
  • உலகில் அதிக உயரத்தில் இருக்கும் கண்காணிப்பு மேடை (observation  desk )
இந்தக் கட்டிடத்தில் இருந்து பார்க்கும்போது துபாய் பரப்பளவில் எவ்வளவு சிறியது என்பது தெரிகிறது. 





பெட்ரோல் வளம் அதிகம் என்பதால் தங்கம் கூட ATM மெஷின் மூலம் கிடைக்கிறது. (படம் கீழே)


துபாயில் திருட்டு பயம் என்பது அறவே கிடையாது. திருட்டுக்கு மிகக் கடுமையான தண்டனை என்பதால் எந்தப் பிரச்னையும் இல்லை. பெட்ரோல் விலையும், கார்கள் விலையும் குறைவு என்பதால் சிறிய கார்களைக் காண்பது அரிதாகவே இருந்தது. 

சாலைகள் மிக சுத்தமாக, பெரும்பாலும் காலியாகவே இருக்கின்றன (நம் சென்னை நெரிசலோடு  ஒப்பிடும்போது அப்படித் தெரிகிறதோ?) 






நான் சந்தித்த வரையில் இந்தியர்கள் (குறிப்பாகத் தமிழர்கள்) சற்று அதிருப்தியாகவே இருக்கிறார்கள். கடுமையான வேலை செய்தும் விலைவாசி மிக அதிகம் என்பதால் சேமிப்பு குறைவாகவே இருக்கிறது, குடும்பத்துடன் இருப்பது மிக கஷ்டமான காரியம் என்கிறார்கள்.

துபாயில் என்னை மிகவும் உறுத்திய விஷயம் இந்தியர்களை அவர்கள் நடத்தும் விதம். விமான நிலையத்திலேயே சுற்றுலா பயணிகள் என்று தெரிந்தும் மரியாதை குறைவாகவே நடத்துகிறார்கள். இமிக்ரேஷன் வரிசையில் நிற்கும்போதே தேவையே இல்லாமல் ஒரு செக்யூரிட்டி அதிகாரி "லைன் மே ஜாவ்" என்று நாய் மாதிரி குலைத்துக் கொண்டிருந்தான். பெரும்பாலான இந்தியர்கள் பலி கடா மாதிரி தலையைக் குனிந்து கொண்டே செல்கிறார்கள். இமிக்ரேஷன் வரிசை எவ்வளவு நீளமாக இருந்தாலும் தெரிந்தவர்கள் வந்தால் (குறிப்பாக இஸ்லாமியர்கள்) செக்யூரிட்டி அதிகாரிகள் அவர்களைப் போற்றி பாதுகாத்து கொண்டுபோய் வரிசையில் முதலில் நிற்க வசதி செய்கிறார்கள்.

பயணம் முடிந்து விமானம் ஏறியபோது என் மனைவியிடம் இருந்து ஒரு கேள்வி, "இவ்வளவு முறை சிங்கப்பூர் சென்று வருகிறீர்களே, எது பெஸ்ட், சிங்கப்பூரா, துபாயா?"

என்னைப் பொறுத்த வரை துபாய் என்ன முக்கினாலும், எவ்வளவு புர்ஜ் காலிபா வந்தாலும் சிங்கப்பூரை நெருங்கக் கூட முடியாது. எல்லாவற்றையும் விட சிங்கப்பூரில் மனிதாபிமானம் அதிகம் என்பதே என் கருத்து.

Comments

very useful information
Thank u

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...