Skip to main content

தாய்லாந்தின் மொழி வெறி

   (நான் பட்டயாவில் தங்கியிருந்த Furama Jomtien Beach Resort முன் இருந்த நம் பிரம்மாவின் அழகான சிலை. இதை அவர்கள் புத்தர் என்கிறார்கள்)


என்னுடைய சமீபத்து பதிவு ஒன்றில் தமிழ் நம்மீது திணிக்கபடுகிறது என்று குறை கூறியிருந்தேன். அதை இப்போது, என்னுடைய தாய்லாந்து பயணத்திற்கு பிறகு, தவறு என்று உணருகிறேன்.

தாய்லாந்து நாட்டின் தலைநகரான  பாங்காக் நகரம் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் பார்த்தபோது இருந்ததைவிட பல மடங்கு முன்னேறியுள்ளது. அருமையான சாலைகள், வசதியான மேம்பாலங்கள், நல்ல தண்ணீர் என்று பல்வேறு வகையிலும் முன்னேற்றம்.

ஆனால் எனக்கு மிகவும் எரிச்சலூட்டிய விஷயம் ஒன்று இருக்கிறதென்றால் அது தாய்லாந்து நாட்டின் மொழி வெறி.

எல்லா இடங்களிலும் தாய் மொழி (அதாவது தாய்லாந்து மொழி) தவிர வேறு எதுவும் இல்லை. சாலை மற்றும் கடைகளின் பெயர்கள் உட்பட எல்லாமே அவர்களின் மொழி மட்டுமே. ஒரு இடத்தில கூட ஆங்கில மொழியை நாங்கள் பார்க்கவில்லை. தாய் மொழி முக்கியத்துவம் புரிகிறது, அதற்காக வெளிநாட்டு பயணிகள் புரிந்து கொள்ள ஏதுவாக ஒரு இடத்தில கூட ஆங்கில மொழி இல்லாமலா செய்ய வேண்டும்? இரண்டாவது டாக்சி ஓட்டுனர் உட்பட யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை. மிகவும் கடினமான நிலையில் இனி தப்பித் தவறி கூட இந்த மாதிரி கேடுகெட்ட இடத்திற்கு போகக் கூடாது என நினைத்துள்ளேன்.

இந்த மாதிரி ஒரு மொழி வெறியர்களைப் பார்க்கும் போது நாம் தமிழ் உபயோக்கிக்க வேண்டும் என்பதில் எந்தத் தவறுமில்லை.

Comments

Unknown said…
அதாவது வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து வரும் இன்னொரு பயணியும் சாரைப்போலவே "இனி தப்பித் தவறி கூட இந்த மாதிரி கேடுகெட்ட இடத்திற்கு போகக் கூடாது" என நினைக்கவேண்டும் போல இருக்கிறது
Anonymous said…
India rule by British so their English Language is spread overall India Easily. But, Thailand ruled by British so that the reason English not spread over there like India. Now only they understood the value of English and Learning.

That is not "Mozhiveri"

Without English the small country Thailand developed this much. But our Tamil Nadu.....Shame..Shame...

First change your rubbish mind man.

SR Balaji
balajiazp@yahoo.co.in
Ram Sridhar said…
@Anonymous: Your comment about India being ruled by British so the language is used frequently here, but that is not the case in Thailand is not correct. For that fact many countries like Singapore, Malaysia were all under British rule for a very long time and the spread of English is very limited there. In Hong Kong, which was till recently under British rule (till Dec'99), people seldom speak English. When I point out the problem, it is because I have faced that during my travel and not because I am having a rubbish mind. When you are commenting know the fact and comment. Don't blabber.

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்