Skip to main content

Blog பதிவு அவ்வளவு கடினமான வேலை அல்ல

சந்தடி சாக்கில் அப்படியே என் படத்தையும் போட்டு விடலாம்.

என் நண்பர் ரவி, கொல்கத்தாவிலிருந்து நேற்று என்னுடன் பேசும் போது, என் பதிவுகளைப் பற்றி சிலாகித்துவிட்டு, "அது எப்படி காலை 8 மணிக்கு உன்னால் அவ்வளவு நீளமான தமிழ் விமரிசனங்களை எல்லாம் எழுத முடிகிறது?" என்று ஆர்வமாகக் கேட்டார்.

நண்பரே, blog பதிவு எனக்கு ஒரு creative வடிகால். நாள் முழுக்க அலுவலக வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பும் போது, தப்பித் தவறி கூட வீட்டிலிருந்து கொண்டு எந்த அலுவலக வேலைகளையும் நான் செய்வதில்லை. அதே போல, என்னுடைய நிறைய பதிவுகளை முழுக்க, முழுக்க நானே தயாரிப்பதில்லை (தட்டச்சுவதில்லை).

எப்போதெல்லாம் சுவாரசியமான பதிவுகளைப் பார்க்கிறேனோ, அப்போதே அதை draft ஆக சேமித்து விடுகிறேன். பிறகு நேரம் கிடைக்கும் போது, அதை தூசு தட்டி, கொஞ்சம் நகாசு வேலைகளையும் (என் பங்குக்கு) சேர்த்து அதை அப்படியே பதிந்து விடுகிறேன். அந்தப் பதிவு நேரம் காலை 8 மணியாக இருக்கலாம், அதற்காக நான் 8 மணிக்குத்தான் அதை நான் தயார் செய்கிறேன் என்று அர்த்தமல்ல.

பெரும்பாலான சுவாரசியமான தகவல்கள் ஏராளமான வலைத் தளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. என் பணி அவற்றை அலசிப் பார்த்து ஏதாவது news worthy யாக இருந்தால் அதை பதிந்துவிட்டு அந்தந்த வலைத் தளங்களுக்கு நன்றியும் சொல்லி விடுகிறேன். களவாணி விமரிசனம் ஒரு உதாரணம்; என்னதான் நான் அந்தப் படத்தை மிகவும் ரசித்திருந்தாலும், ஒரு தேர்ந்த விமரிசகர் அதைப் பற்றி நன்றாக எழுதியிருக்கும் போது, அதை பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை என நினைக்கிறேன். அதே சமயம், என்னுடைய எண்ணங்களையும் நான் அதனுடன் சேர்க்கத் தவறுவதில்லை. மறக்காமல் அந்தந்த வலைத் தளங்களுக்கு என்னுடைய நன்றியையும் சொல்லிவிடுகிறேன். 

என்னுடைய பல நண்பர்கள், நண்பர் ரவியைப் போலவே ஆர்வமாக அது எப்படி தமிழில் இவ்வளவு எழுத முடிகிறது எனக் கேட்கிறார்கள்.இந்த ஆர்வத்தின் முதல் பின்னணி, நம்மில் பலபேர் தமிழ் மொழியை மறந்து வருவது, இரண்டாவது, தமிழில் எழுதுதுவது என்பதே எதோ நடைமுறைக்கு ஒவ்வாத செயல் என நினைப்பது, மூன்றாவது, தமிழில் எழுதுவது என்பது எதோ ஒரு மட்டமான வேலை என நினைப்பது.

முயன்று பாருங்கள். இது ஒன்றும் மலையைப் புரட்டும் வேலை இல்லை.

Comments

Swami said…
இன்னொரு காரணத்தை விட்டுவிட்டீர்கள். எப்படி type செய்வது என்பதும் பலருக்குப் புரியாத புதிராக உள்ளது. நீங்கள் உங்கள் editor பற்றிச் சொன்னால் பலருக்கும் உபயோகமாக இருக்கும்.

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்