Skip to main content

Controversies Behind the deaths of Subash Chandra Bose & Hitler

பிரபாகரனைப் பற்றிய என்னுடைய முந்தய வலைப் பதிவை படித்த நண்பரொருவர், வேறு எங்கேனும் இதைப் போலவே முக்கிய தலைவரின் மரணத்தில் குழப்பம் வந்திருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிரண்டு இல்லை, ஏராளமான குழப்பங்கள் இருந்திருக்கின்றன; முக்கியமான ஒரு தலைவர், நம்முடைய சுபாஷ் சந்திர போஸ். இவருடைய மரணத்தில் ஏராளமான சந்தேகங்கள் இதுவரை தீர்க்கப் படாமலேயே இருக்கின்றன.

இரண்டாவது உலகப் போரின் நடுவே, ஜப்பானில் நடந்த ஒரு விமான விபத்தில் அவர் இறந்து விட்டதாக செய்திகள் பரவலாக இருந்தாலும் இதுவரை பெரும்பாலான இந்தியர்கள் அதை நம்பவில்லை.

அடுத்ததாக, ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டு இறந்தபோது இதேபோல பெரிய குழப்பம் இருந்தது. ஹிட்லர் இறந்ததாக சொல்லப்பட்ட பின் சில வருடங்கள் கழித்து ஒரு ஓவியம் ஏலத்துக்கு வந்தபோது பெரும் சர்ச்சை வெடித்தது; அந்த ஓவியம் ஒரு கரிக் கோடு ஓவியமாகும் [charcoal line drawing]. ஹிட்லர் அதைப் போல் ஓவியங்கள் சிலவற்றை பொழுதுபோக்காக வரைந்திருந்தார். கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் ஒரு ஓவியம் 1950 இல் ஏலத்துக்கு வந்த போது, பெரும்பாலான செய்தித் தாள்கள் இது ஹிட்லர் வரைந்த ஓவியம் என்றால் அவர் தற்கொலை செய்து கொண்டு இறக்கவில்லை, உயிரோடுதான் இருக்க வேண்டும் என திகில் கிளப்பின. இதற்கு முக்கிய காரணம் அந்த ஓவியத்தில் இருந்த ஒரு இடிந்த கட்டிடம்; ஹிட்லர் தற்கொலை செய்துகொண்ட பின்னர் அந்த ஓவியத்தில் இருந்த கட்டிடம் Allied Nations தாக்குதலில் சேதமுற்றது. எனவே அந்த சேதமுற்ற கட்டத்தை அப்படியே வரைய வேண்டும் என்றால் நிச்சயம் ஹிட்லர் உயிரோடு இருந்தால் மட்டுமே முடியும் என conspiracy theory உலா வந்தது.

நல்ல வேளையாக அந்த ஓவியம் ஹிட்லரின் ஸ்டைலைப் பார்த்து அப்படியே வரைந்த [copy cat] ஒரு ஓவியரின் கைவண்ணம் என்று தெரிந்து மக்கள் பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவத்தை மிக அழகாக தன்னுடைய கற்பனையைக் கலந்து பிரபல ஆங்கில எழுத்தாளர் Irwing Wallace, The Seventh Secret என்று ஒரு அருமையான நாவலை எழுதினார்.

இதைப் போல இன்னும் ஏராளமான சந்தேகங்கள், conspiracy theories ஆகியவை இன்றும் இருக்கின்றன.

Comments

Anonymous said…
Sorry for my bad english. Thank you so much for your good post. Your post helped me in my college assignment, If you can provide me more details please email me.

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...