Skip to main content

Controversies Behind the deaths of Subash Chandra Bose & Hitler

பிரபாகரனைப் பற்றிய என்னுடைய முந்தய வலைப் பதிவை படித்த நண்பரொருவர், வேறு எங்கேனும் இதைப் போலவே முக்கிய தலைவரின் மரணத்தில் குழப்பம் வந்திருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிரண்டு இல்லை, ஏராளமான குழப்பங்கள் இருந்திருக்கின்றன; முக்கியமான ஒரு தலைவர், நம்முடைய சுபாஷ் சந்திர போஸ். இவருடைய மரணத்தில் ஏராளமான சந்தேகங்கள் இதுவரை தீர்க்கப் படாமலேயே இருக்கின்றன.

இரண்டாவது உலகப் போரின் நடுவே, ஜப்பானில் நடந்த ஒரு விமான விபத்தில் அவர் இறந்து விட்டதாக செய்திகள் பரவலாக இருந்தாலும் இதுவரை பெரும்பாலான இந்தியர்கள் அதை நம்பவில்லை.

அடுத்ததாக, ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டு இறந்தபோது இதேபோல பெரிய குழப்பம் இருந்தது. ஹிட்லர் இறந்ததாக சொல்லப்பட்ட பின் சில வருடங்கள் கழித்து ஒரு ஓவியம் ஏலத்துக்கு வந்தபோது பெரும் சர்ச்சை வெடித்தது; அந்த ஓவியம் ஒரு கரிக் கோடு ஓவியமாகும் [charcoal line drawing]. ஹிட்லர் அதைப் போல் ஓவியங்கள் சிலவற்றை பொழுதுபோக்காக வரைந்திருந்தார். கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் ஒரு ஓவியம் 1950 இல் ஏலத்துக்கு வந்த போது, பெரும்பாலான செய்தித் தாள்கள் இது ஹிட்லர் வரைந்த ஓவியம் என்றால் அவர் தற்கொலை செய்து கொண்டு இறக்கவில்லை, உயிரோடுதான் இருக்க வேண்டும் என திகில் கிளப்பின. இதற்கு முக்கிய காரணம் அந்த ஓவியத்தில் இருந்த ஒரு இடிந்த கட்டிடம்; ஹிட்லர் தற்கொலை செய்துகொண்ட பின்னர் அந்த ஓவியத்தில் இருந்த கட்டிடம் Allied Nations தாக்குதலில் சேதமுற்றது. எனவே அந்த சேதமுற்ற கட்டத்தை அப்படியே வரைய வேண்டும் என்றால் நிச்சயம் ஹிட்லர் உயிரோடு இருந்தால் மட்டுமே முடியும் என conspiracy theory உலா வந்தது.

நல்ல வேளையாக அந்த ஓவியம் ஹிட்லரின் ஸ்டைலைப் பார்த்து அப்படியே வரைந்த [copy cat] ஒரு ஓவியரின் கைவண்ணம் என்று தெரிந்து மக்கள் பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவத்தை மிக அழகாக தன்னுடைய கற்பனையைக் கலந்து பிரபல ஆங்கில எழுத்தாளர் Irwing Wallace, The Seventh Secret என்று ஒரு அருமையான நாவலை எழுதினார்.

இதைப் போல இன்னும் ஏராளமான சந்தேகங்கள், conspiracy theories ஆகியவை இன்றும் இருக்கின்றன.

Comments

Anonymous said…
Sorry for my bad english. Thank you so much for your good post. Your post helped me in my college assignment, If you can provide me more details please email me.

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்