Skip to main content

தமிழில் விக்கிப் பீடியா!

தொடர்ந்து பல்வேறு ஆண்டுகளாக இண்டர்நெட்டில் மேய்ந்து வரும் எனக்கு இன்று இந்து நாளிதழில் வந்த ஒரு செய்தி ஆச்சரியமாக இருந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து தமிழில் விக்கிப் பீடியா செயல்பட்டு வருகிறது என்ற செய்திதான் அது. நம்மில் பலருக்கு விக்கிப் பீடியா பற்றி தெரிந்திருக்கக் கூடும்.

விக்கிப் பீடியா பல்வேறு மொழிகளில் இருக்கும் ஒரு இலவச என்சைக்ளோ பீடியா. இதில் யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். ஏற்கனவே பதிவு செய்துள்ள செய்திகளைத் திருத்தலாம் என ஏராளமான சுதந்திரம் உள்ள ஒரு நல்ல முயற்சி.

இது 2001 இல ஜிம்மி வேல்ஸ் [Jimmy Wales] மற்றும் லேரி சாங்கர் [Larry Sanger]ஆகிய இருவரால் தொடங்கப் பட்டது. இன்று கிட்டத்தட்ட 260 மொழிகளில் உலகெங்கும் பல்வேறு மக்களால் உபயோகிக்கப் படுகிறது.

இதன் தமிழ் பதிப்பு அவ்வளவாக பிரபலம் அடையவில்லை, இது தமிழில் இருப்பதே நிறைய பேருக்குத் தெரியவில்லை என ஆதங்கத்துடன் இந்து நாளிதழில் வந்த செய்தி குறிப்பிட்டிருந்தது. இதன் தமிழ் தளத்துக்கு [http://ta.wikipedia.org] சென்று பார்க்கலாம் என்று முயற்சித்தேன். அரைமணி நேரம் கூட என் ஆர்வம் நீடிக்கவில்லை; காரணம் அதன் தமிழாக்கம்! நடை முறையில் இல்லாத வாக்கியங்களை உபயோகித்து ஏராளமான செய்திகள், ஆனால் எதையுமே நம்மில் பெரும்பாலானோர் படிக்க மாட்டோம்.

முதல் பக்கத்தில் Swine Flu பற்றி செய்தி: பன்றிக் காய்ச்சல் என்று தமிழ் தலைப்பு கொடுத்து அதைப் பற்றி விலாவாரியாக செய்தி. ஓகே, நன்றாக இருக்கிறதே என்று படிக்கத் தொடங்கினால், இரண்டாவது வரியிலேயே தடுக்கியது.

பன்றிக் காய்ச்சல் ஒரு குறிப்பிட்ட "தீ நுண்மத்தினால்" வரும் ஒரு "உயிரிழக்கும் நோய்" என்று குறிப்பிட்டிருந்தது. தீ நுண்மம் என்றால் என்ன என்று உங்களைப் போலவே எனக்கும் தெரிந்து கொள்ள ஆசை. அது virus இன் தமிழாக்கம். அடப்பாவிகளா! virus என்பது என்ன என்பது பலபேருக்குத் தெரியும் போது, அதை வைரஸ் என்று போடாமல் தீ நுண்மம் என்று வாயில் நுழையாத பெயர் எதற்கு? பிறகு அந்த கட்டுரையில் வரும் மற்ற பயமுறுத்தும் சொற்கள்: "கட்டுப்பட்ட கலத்துள் உயிருறிஞ்சி [Obligate intracellular parasite]", "கோலுரு நுண்ணுயிர் திண்ணி [Bacteriophage]", "ஓம்புயிர் [host]" இன்னும் பல.

இப்படியெல்லாம் வார்த்தைகளைப் போட்டால் யாரால் இதை படிக்க முடியும்? எப்படி இதை புரிந்துகொள்ள முடியும்? மறைந்த மாபெரும் எழுத்தாளர் சுஜாதா அடிக்கடி சொல்லுவார்: "அமெரிக்கா செல்லும் பல IT துறையைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கு சிலிகான் வாலியில் [Silicon Valley] வேலைக்குச் சேர்ந்த பிறகு மிகவும் சிரமப் படுகிறார்கள், ஏனென்றால் இதில் தமிழ் மீடியத்தில் படித்த பலபேர் மேலே சொன்ன மாதிரி தேவையில்லாத வார்த்தைகளை தமிழில் கற்றுக் கொண்டு பின் அதற்கு நிகரான ஆங்கில வார்த்தைகள் தெரியாமல் அவதிப் பட நேரிடுகிறது. ஜப்பான், சைனா, ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகளில் எல்லோருமே அவரவர் தாய் மொழியில்தான் படிக்கிறார்கள். ஆனால், நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் என்னவென்றால் நம்மைப் போல அவர்கள் கம்ப்யூட்டரை "கணினி" என்றோ, வைரஸை " தீ நுண்மம்" என்றோ, protoplasm என்பதை "உயிரணுப் பாயாசம்" என்றோ படிப்பதில்லை. இந்த பெயர்ச் சொற்கள் எல்லாம் தமிழ் நாட்டிலேயே பலருக்குப் புரியாதபோது, வெளிநாட்டில் இருப்போருக்கு எப்படிப் புரியும்?

தமிழ் பற்று என்பது முக்கியமான ஒன்று. அது நமக்குத் தேவையான் ஒன்று. ஆனால், வடிவேலு சொல்லுவது போல நமக்கு என் இந்த கொலைவெறி? இப்படி எல்லாம் technical வார்த்தைகளை தமிழ் படுத்தி நம்மை ஏன் படுத்தவேண்டும்?

தமிழ் மொழியே மெல்ல மெல்ல மறந்து வரும் நிலையில் முதலில் நாம் காப்பாற்ற வேண்டியது பேச்சு வழக்கில் உள்ள தமிழை, பிறகு காப்பற்ற வேண்டியது இதைப் போன்ற நடைமுறைக்கு உதவாத தமிழ் சொற்களை; இதை எல்லாம் நான் சொன்னால் உடனே நம் "so called" தமிழ் அறிஞர்கள் என்னை தமிழினத் துரோகி என்று கூட சொல்லலாம், பரவாயில்லை.

தமிழை வளர்க்க வேண்டுமென்றால் தமிழ் மீடியத்தில் படிப்பவர்கள் கிணற்று தவளைகள் என்ற எண்ணத்தைப் போக்கவேண்டும், இதனால் அவர்களுக்கு தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஆங்கிலம் சரியாகத் தெரியவில்லை என்பதால் வரும் தாழ்ந்த மனப்பான்மை [inferiority complex] அகல ஆவன செய்ய வேண்டும்.

தமிழ் படிக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தினால், உயிரணு பாயாசம், ஓம்புயிர் போன்ற அபத்தமான வார்த்தைகளை விட்டுவிட்டு, technical வார்த்தைகளை அப்படியே ஆங்கிலத்திலேயே விட்டுவிட வேண்டும். அதற்குண்டான அர்த்தத்தை தமிழில் சொல்லித் தர எந்த தடையம் இல்லாத போது இதை ஏன் செய்யக் கூடாது?

சத்யராஜ் நடித்து இங்லீஷ்காரன் என்று ஒரு அபத்தமான படம் வந்தது. இதில் ஒரு காட்சியை நான் சமீபத்தில் டிவீயில் பார்த்தேன்; அதில், தமிழ் வார்த்தைகளை எல்லாவற்றுக்குமே பயன்படுத்த முடியாது என்பதை, சத்யராஜ் அவருக்கே உரிய லொள்ளுடன் சொல்லியிருப்பார். நாம் தினசரி பார்க்கும் ஒரு சைக்கிளின் எந்த பாகத்தையும் தமிழில் சொல்ல முடியுமா என்று கேட்பார். அவர் சொல்வதைப் போல pedal, break, handlebar, stand, tyre ஆகிய வார்த்தைகளை அப்படியே தமிழில் உபயோகித்தால் தமிழ் அழிந்து விடாது. அதை விட்டுவிட்டு மிதிப்பான், நிறுத்துவான் என்றெல்லாம் அந்த வார்த்தைகளை ஏன் தமிழ் படுத்த வேண்டும்?

Comments

Swami said…
ரொம்ப சரியா சொன்னீங்க ஸ்ரீதர்! மொழிப்பற்றுக்கும் மொழிவெறிக்கும் வித்தியாசம் தெரியாம போச்சு! ஜப்பான்ல television-க்கு பேரு தெரெபி! Remote Control-க்கு பேரு ரெமொகான்! இப்படி புது வார்த்தைகளை உருவாக்கினாலும் எல்லாமே மூல-வார்த்தைகளை தழுவி பண்ணியிருக்காங்க. அத விட்டுட்டு......

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்