Skip to main content

ஒரே ஒரு சிகரெட்




சிகரெட்டினால் என்னென்ன தீமைகள் விளையலாம் என்று பட்டியலிட்டாலும் படித்தவர்களே அதையெல்லாம் லட்சியம் செய்யாதபோது, மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது? என்னதான் பொது இடங்களில் புகைப்பது குற்றம் என்று அரசு அறிவித்தாலும், சிகரெட் விற்பனை ஒன்றும் குறைந்தமாதிரி எனக்குத் தெரியவில்லை.

சிகரெட் சம்பந்தமான சில சுவையான [?] தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைகிறேன்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரே ஒரு சிகரெட்டில் 4400 வெவ்வேறு ரசாயனப் பொருட்கள் [chemicals] இருக்கின்றன; இவற்றில் கிட்டத்தட்ட 599 addictive வகையைச் சார்ந்தவை [அதாவது, மறுபடியும், மறுபடியும் உங்களைப் புகைக்க வைக்கக் கூடிய போதைப் பொருட்கள்], இந்த 599 இல் 43 பொருட்கள் புற்றுநோய் [cancer] உண்டாக காரணமாக இருப்பவை.

இவற்றில் சில மிக, மிக மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடியவை; அவை, Carbon Monoxide, Nitrogen Oxide, மற்றும் Hydrogen Cyanide ஆகியவை.

இவை எல்லாவற்றையும் மீறிய பிரதான வில்லன், நிகோட்டின் [Nicotine] . நிகோட்டின் போதை உண்டாகக் காரணம் அது உடனடியாக நம் உடம்பில் உள்ள epinephrine என்ற ஹார்மோனைச் அதிக அளவில் சுரக்கச் செய்து, அதன் மூலம் சிகரெட் புகைப்பவர்களுக்கு "கிக்" உண்டாக வழி வகுக்கிறது. இதுவே பின்னர் அந்த பழக்கம் நிரந்தரமானதாக மாற காரணமாகிறது.

இதில் இன்னொரு ஆச்சரியமான சங்கதி இருக்கிறது; நம்மைச் சுற்றிலும் இருப்பவர்கள் பெரும்பாலான நேரம் சிகரெட் புகைத்துக் கொண்டே இருந்தால், அருகில் இருக்கும் நமக்கும் எல்லாவிதமான கெடுதல்களும் நேர வாய்ப்பு இருக்கிறது என்பது மட்டுமிலாமல், நாமும் அந்த secondary smoke க்கு அடிமையாக [addict] வாய்ப்பு இருக்கிறது. நாம் நேரடியாக புகைக்க மாட்டோம் என்றாலும், அந்த புகையை சுவாசிக்க மாட்டோமா என்று ஏங்க ஆரம்பிக்கும் ஒரு அபாயம் இருக்கிறது.

இதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்; பெங்களூரில் உள்ள என் நண்பி ஒருவருக்கு இந்தப் பழக்கம் இருந்தது. அவருடைய பாஸ், மற்றும் வேறு சில சக ஊழியர்கள், அவருடைய சிறிய office இல் புகைத்து, புகைத்து, அந்த புகையை நேரடியாக சுவாசித்து வந்ததால், அது ஒரு பழக்கமாக ஆகிவிட்டது.

அவருடைய பாஸ் தீடீரென இறந்த பிறகு, என் நண்பி சொந்தமாக ஒரு கன்ஸல்டன்சி ஆரம்பித்து விட்டார். எனவே இப்போது அந்த பழக்கம் அவருக்கு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இதில் கொடுமை என்னவென்றால், இதைப் போன்ற ஒரு பழக்கம் அவருக்கு இருந்தது என்பது அவருடைய வீட்டில் அவர் கணவர் உட்பட யாருக்கும் தெரியாது என்பதுதான்.

புள்ளி விவரங்களின்படி [statistics] புகைப்பதை விட்டு ஒழிக்க வேண்டும் என நினைப்பவர்களில் 7% மட்டுமே வெற்றி பெறுகிறார்களாம். நிறைய புத்தகங்களிலும், தொலைக் காட்சியிலும் காட்டுவதைப் போல படிப்படியாக சிகரெட் பழக்கத்தை விடவே முடியாது. இந்த சனியனை விட்டொழிக்க ஒரே வழி, அதை அப்படியே abrupt ஆக நிறுத்துவதுதான்.

என்னுடைய நெருங்கிய நண்பர்கள் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக இதை விட முடியாமல் இருப்பதைப் பார்க்கிறேன். என் அருமை நண்பர், ரவி, எனக்குத் தெரிந்து ஒரு நாளைக்கு 20-30 சிகரெட்டுகள் வரை ஊதித் தள்ளுவார். அவருடன் சிறுது நேரம் இருந்து விட்டு வந்தால் என்னுடைய தலைமுடி, சட்டை, பனியன் வரை அந்த நாற்றம் இருக்கும்.

ஆனால், ஒரு நாள் அவர் திடீரென அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டார். இன்று வரை அவர் அதை மறுபடியும் ஆரம்பிக்கவில்லை. மற்ற நண்பர்கள் "இப்போதெல்லாம் நான் ஒன்றோ, இரண்டோ தான் புகைக்கிறேன்" என்றெல்லாம் சாக்கு சொன்னாலும், அவர்களால் அதை விட முடியவில்லை என்பதுதான் உண்மை.

Comments

SethuMandapam said…
It was great piece of article on smoking and its effects. Neatly written with an expectation as what prompted you to pen this. Thanks for quoting my example for addiction and de-addiction. It is by the Grace of God and my belief that one will get out of desire only if he fulfills it to its core and by quenching the thirst of desire by flooding it. Any habit is left with difficulty as is well said by the old verses; "If you leave H- ABIT is there, if you leave A- BIT is there, if you leave B- IT is still there. Only when you leave "I", IT gets disappeared, but never matter if 'T' is with you.
Thanks again Sridhar for giving me a space to post my comment.
Hi,happy to be here for the first time Ram Sridhar.Delighted to read ur Tamil blog.It is a superb narrative writing.Thanks for sharing this great article.

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்