Skip to main content

யாதுமாகி நின்றாய் நீ....




ஆகஸ்டில் சிங்கப்பூரில் ஒரு "கொல்டி" ரெஸ்டாரன்டில் சாப்பிட சென்றபோது இந்த அதிசய படம் கண்ணில் பட்டது. உடனே க்ளிக்கினேன். நெடிதுயர்ந்த உயரம். சிவனின் புலித்தோல் ஆடை, தலையில் பிறை, வலது கையில் சூலாயுதம் மற்றும் உடுக்கை, நடராஜரின் நாட்டிய நிலை, கழுத்தில் பின்னிக் கிடக்கும் நாகம், விஷ்ணுவின் சங்கு, சக்கரம், நெற்றியில் ஸ்ரீசூர்ணம், இடது கையில் ராமரின் வில், மற்ற இரு கைகளில் கிருஷ்ணரின் புல்லாங்குழல்... யாரு சாமி நீ? எங்கே இந்த மாதிரி வினோத கோலத்தில் இருக்கிறாய்? இந்த படத்திற்கு விளக்கம் சொல்ல அங்கு யாருக்கும் தெரியவில்லை. முதலாளி இல்லை. அவருக்கு ஒரு வேளை தெரிந்திருக்கலாம் என்று ஒருவர் யூகம் செய்தார்.

பரவாயில்லை. இப்போது நவம்பரில் போகும்போது கேட்டுவிடலாம் என இருக்கிறேன்.

Comments

Dear Uncle,
This is kannan, Mr Murugan's co-brother's son ... Shocked to see the above. HERE IS THE SECRET REVELATION:

"பண்ணிரு தேவ சன்னதஙஙள் (தங்கள் திருக்கரங்களில் ரேகைகளாக) பெற்று வரும் அவதார மூர்தியே சிவன்" - வீரப்பிரம்மம்


மேலே னீஙகள் குறிப்பிட்டுளள உருவம், மிக அரிய தீர்க்க தரிசனம்.

உலகின் கடைசி காலத்தில் வரும் க்லகி ( Naaradha maha munivar - hinduism) ; மஹ்தி (Prophet Muhammad - islam);
கடைசி மெசையா (as told by - Deniel - judaism), இயேசுவின் இரண்டாம் வருகை (as told by -Jesus Christ);மைத்ரேய புத்தர் (as told by - Lord Buddha - buddhism);
வீரபோக வசந்தராயர் -சிவன் (as told by - veera brahmam - andhra); சாலை ஆண்டவர் (as told by - ramalinga vallalar - vadalur) - WILL BE HAVING THE ABOVE SAID தேவ சன்னதஙஙள் (explicitly in his hands)

1.உலகில் இதுவரை யாரும் பெறாத கில்னாமம் (தலையில் பிறை)
2. பூமி அதிரும் ஓசையை உடைய கடல் அரியாத திரு வலம்புரிச்சங்கு
3. ராமரின் கோதன்டம் (வில்)
4.பராஙுசம்
5.திருமுருகரின் வேல்
6.யமனின் பாசம்
7.உயிர் சக்கரம்
8.கவனக்குளிகை
9.திரிசூலாயுதம்
10. தன்டாயுதம்
11.மாயயை ஆய்ந்து மேந்துரங்கும் இருபுரமும் கருக்கேரிய பட்டயம்
12.துடிஉடுக்கை
இப்படிப்பட்ட ஏகநாயகன் என்னும் சர்வ சாட்சி வித்தாகிய சர்வேஸ்வரனால் முத்திரை அங்க சன்னதங்கள் பெற்றுள்ளவரர்கள் - மெய்வழி சாலை ஆண்டவர்கள் .
சாலை ஆண்டவர்கள் மார்க்கம்பட்டியில் பிறந்தவர்கள், துவக்கத்தில் சுமார் 24 ஆண்டுகள் கடுமையான தவமும், தம் வாழ்நாள் முழுவதிலும் சுமார் 72 ஆண்டுகள் கடுமையான தவமும் புரிந்து இதுவரை எவரும் அடையமுடியாத ஞானத்தின் எல்லையையும் அதைத்தாண்டி பண்ணிரு தேவ சன்னதஙகளையும் அடைந்தவர்கள். அதற்கு சாட்சியாக அவர்கள் இயற்றியுள்ள மிகவும் ஆழமான தமிழிலே ஆன வேதநூல்களும், அவற்றில் அவர்கள் விளக்கிய ஞானபோதனா மந்திரங்களும் சாட்சியாக விளங்குகின்றன. சுமார் 1901 (கலியுக முடிவு - 5000) லிருந்து சாலை ஆண்டவர்களால் உருவாக்கப்பெற்ற மெய்வழிச்சாலை, ஆண்டவர்கள் பூரணசமாதி அடைந்து இருப்பதால், ஆண்டவர்களால் நியமிக்கப்பெற்ற கமிட்டி உறுப்பினர்களால் நடத்தப்பெற்று வருகிறது.


மெய்வழி சாலை ஆண்டவர்கள் ஸ்தாபித்தருளிய மதச்சார்பினையுடைய மக்களே அடைந்து உய்யும் உய்கின்ற பெரும்பதப் பேரின்ப சாகாக்கலை பெற்றவர்கள் ஜீவப்பிரயாணம் ஆன தூல அடையாளம்:

உலகத்தில் செத்தவர்களுக்கு இறுதி நேரத்தில் தீட்டு என்று ஏற்படுகிற ‍ ஆணுக்கு சுக்கில ஜலமாகிய கசப்பு ஜலம் வெளியாகிப்பிண நாற்றம் எழும்புகிறதும் பெண்ணுக்கு சுரோணிதக் கசப்பு ஜலம் வெளியாகி பிண நாற்றம் எழும்புகிறதும் ‍ இல்லாமல் பரிசுத்தமாக மணத்துடன் இருப்பார்கள் சாகாக்கலை பெற்றவர்கள்.
ஜீவப்பிரயாணம் ஆன பின்னும் தேகத்தில் கேசாதி பாதம் வெத்துவென்று சூடிருக்கும். விறைத்து விறுவிறுப்பு ஏறாது. உரித்த வாழைத்தண்டை வெய்யிலில் போட்டால் எப்படி துவளுமோ ஆப்படியே கை கால் முதலிய அங்கங்கள் எல்லாம் துவண்டபடி இருக்கும்.
பாவக்கனம் ஏறாமல் தேகமானது பூக்கூடையைத் தூக்குவது போல இருக்கும்.
கை கால்களில் சொடுக்கு எடுத்தால் நெட்டி வரும்.
ஆண்டவர்களின் பாடல்களோ திருவாக்கியங்களோ திருநாமமோ ஜீவப்பிரயாணம் ஆன தூல பிம்பம் இருக்கும் எல்லையில் ஆரவாரத்துடன் ஒலிக்கப்பெறும் நேரங்களில் அவர்கள் மேனியில் துடைக்கத் துடைக்க வியர்வை மேலும் மேலும் கொப்பளிக்கும்.
வயோதிகமாய் உள்ளவர்கள் ஜீவப்பிரயாணமாகி நேரம் அதிகம் ஆக ஆக அவர்கள் முகத்தில் இளமை பூத்து பசுமஞ்சள் வர்ணம் உலாவும்.
பிராணன் நீங்கியவுடன் தொண்டை அடைத்துக்கொண்டு ஒரு சொட்டு ஜலம் கூட உள்ளே இறங்காதே ‍ அந்த அடையாளம் இல்லாமல் மெய்வழித் தெய்வமவர்களின் சன்னிதியில் இருந்து காஷாய தீர்த்தம் கொண்டுவரப்பெற்று கொடுத்தால் அதை சாப்பிடுவார்கள். ஒரு மாதம் சென்று கொடுத்தாலும் இக்காரியம் நடக்கிறது.
பிராணன் நீங்கும் முன் கூனிக்குறுகி இருந்தவர்கள் கால்கை வராமல் இருந்தாவர்கள் ‍புண் முதலியவற்றால் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தாவ்ர்கள் அத்தேகக் குறைகளும் நாற்றமும் நீங்கி சாகாக்கலையின் வைபவச்சிறப்புடையவர்களாக ஆகின்றார்கள்.
அடக்காமானபின் வெளியே நாற்பது நாட்கள் போட்டு வைத்திருந்தாலும் தேகம் கெடுவதில்லை. இது நாங்கள் நேரில் பார்த்த அடையாளம்.
மண்ணில் புதைத்தால் தேகத்தை மண்தீண்டாது. இவைதான் சாகாக்காலை பெற்றவர்களின் தூல அடையாளங்கள் . தேகத்தை மண் தீண்டாததிலும் மூவகை அடையாளங்கள் இருக்கும் என்று சன்னிதியில் வெளியாகியுள்ளது."
இத் தேவ அடையாளங்கள் ஆண்டவர்களின் வெறுப்புக்கு இலக்காகாமல் அவர்களின் நிகரற்ற கிருபையை இறுதி நேரம்வரு பெற்றவர்களுக்கே கைபலிதமாக நடந்து வருகிறது. இது சத்தியம்.

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்