Skip to main content

இப்படியும் ஒரு மறக்க முடியாத படம்!



ஆங்கிலத்தில் நிறையவே hi-tech படங்களைப் பார்த்தாயிற்று. ஆனாலும் நடுநடுவே சில அதி அற்புதமான படங்கள் வந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

2004 இல் நான் பார்த்து வியந்த இந்த மாதிரியான futuristic hi-tech thriller "The Day After" என்ற படம். ஆங்கிலப் படங்களில் கதையும், கதைக் களமும்தான் ராஜா. கதாநாயகன்/நாயகி எல்லோரும் அப்புறம்தான். கதைக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய சித்தமாக இருக்கிறார்கள்.

"The Day After" படத்தில் உலக நாடுகள் எவ்வாறு இயற்கையை உதாசீனம் (neglect) செய்கின்றன, அதனால் என்னவெல்லாம் நடக்கலாம் என்று நம்மை பயப்பட வைக்கும் ஒரு உன்னதமான sci-fi thriller.

இதற்கு பிறகு இப்போது சமீபத்தில் பார்த்த "I am Legend" படத்தை சேர்த்துக்கொள்ளலாம்.

தீடிரென்று ஒரு நாள் காலை சென்னை மாநகரிலேயே நீங்கள் மட்டுதான் உயிரோடு இருக்கிறீர்கள். உங்கள் துணைக்கு போனால் போகிறதென்று உங்கள் நாய் மட்டும் கூட இருக்கிறது. ஊரெங்கும் உங்கள் காரில் சுற்றுகிறீர்கள், யாருமே உயிரோடு இல்லை, தெருக்கள் வெறிச்சோடி கிடக்கின்றன, கார்கள், லாரிகள், பஸ்கள் எல்லாம் அனாதையாக நிற்கின்றன. கடைகள் திறந்து கிடக்கின்றன. உங்களிடம் இருக்கும் வயர்லெஸ் கருவி மூலம் யாரவது பதில் அளிக்கிறார்களா என்று தினமும் முயற்சி செய்கிறீர்கள், பலன் இல்லை. உலகிலேயே நீங்கள் ஒருவர்தான் உயிரோடு இருக்கிறீர்களோ என உங்களுக்கு சந்தேகம்/பயம் வந்து அல்லாடுகிறீர்கள்.

தெருவில் போய்க்கொண்டிருக்கும்போது திடீரென ஒரு மான் கூட்டம் ஓடுகிறது. சரி, அடித்து ஒன்றை வீட்டுக்கு எடுத்து போய் சமைத்து சாப்பிடலாம் என்று நினைத்து துப்பாகியால் ஒரு மானை குறி பார்க்கும்போது, திடீரென ஒரு சிங்கம் எகிறி குதித்து அந்த மானைக் கடித்து குதறுகிறது.

மாலை நேரத்தில் வீட்டுக்கு சென்று, அத்தனை கதவுகளையும் சாத்திக்கொண்டு பயத்தோடு நாயுடன் தூங்குகிறீர்கள், ஏன்? இங்கேதான் வருகிறது ஆச்சரிய கொக்கி!

ஒரு மிகக் கொடூரமான வைரஸ் தாக்கி உலகமே சுடுகாடாகி விடுகிறது. ஆனால் நீங்கள் மட்டும் சாகவில்லை, எப்படி? அப்படி என்ன special சக்தி உங்களிடம்? மாலை ஆனால் ஏன் பயப்பட வேண்டும்? ஆச்சரியமான, ஆனால் நம்பத்தகுந்த பதில்களுடன் வந்திருக்கிறது இந்த படம்.

வில் ஸ்மித் (Will Smith) என்ற Super Star நடித்த இந்த படம், உலகெங்கிலும் போனமாதம் ஒரே நாளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரே ஒரு மனிதனை மட்டும் படம் முழுவதும் காட்ட அசாத்திய தைரியம் வேண்டும், இந்த பட இயக்குனருக்கு அது இருக்கிறது. இப்படியெல்லாம் கூட புதுமையாய் படம் எடுக்க முடியுமா என நாம் ஆச்சரியத்தில் ரசிக்கும் போதே படம் சட்டென முடிகிறது.

அமர்களமான இசை, வில் ஸ்மித்தின் அலட்டல் இல்லாத, இயல்பான நடிப்பு, வெறிச்சோடி இருக்கும் New York நகரம் தான் கதைக் களம்.

வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல "ஒக்காந்து யோசிப்பாயிங்களோ!" மறக்க முடியாத ஒரு அருமையான படம்.

Comments

Unknown said…
Initially I thought you are just pulling. Because you have never liked Will Smith earlier. Now you are forcing me to see the film. Let me see.

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...