Skip to main content

இப்படியும் ஒரு மறக்க முடியாத படம்!



ஆங்கிலத்தில் நிறையவே hi-tech படங்களைப் பார்த்தாயிற்று. ஆனாலும் நடுநடுவே சில அதி அற்புதமான படங்கள் வந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

2004 இல் நான் பார்த்து வியந்த இந்த மாதிரியான futuristic hi-tech thriller "The Day After" என்ற படம். ஆங்கிலப் படங்களில் கதையும், கதைக் களமும்தான் ராஜா. கதாநாயகன்/நாயகி எல்லோரும் அப்புறம்தான். கதைக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய சித்தமாக இருக்கிறார்கள்.

"The Day After" படத்தில் உலக நாடுகள் எவ்வாறு இயற்கையை உதாசீனம் (neglect) செய்கின்றன, அதனால் என்னவெல்லாம் நடக்கலாம் என்று நம்மை பயப்பட வைக்கும் ஒரு உன்னதமான sci-fi thriller.

இதற்கு பிறகு இப்போது சமீபத்தில் பார்த்த "I am Legend" படத்தை சேர்த்துக்கொள்ளலாம்.

தீடிரென்று ஒரு நாள் காலை சென்னை மாநகரிலேயே நீங்கள் மட்டுதான் உயிரோடு இருக்கிறீர்கள். உங்கள் துணைக்கு போனால் போகிறதென்று உங்கள் நாய் மட்டும் கூட இருக்கிறது. ஊரெங்கும் உங்கள் காரில் சுற்றுகிறீர்கள், யாருமே உயிரோடு இல்லை, தெருக்கள் வெறிச்சோடி கிடக்கின்றன, கார்கள், லாரிகள், பஸ்கள் எல்லாம் அனாதையாக நிற்கின்றன. கடைகள் திறந்து கிடக்கின்றன. உங்களிடம் இருக்கும் வயர்லெஸ் கருவி மூலம் யாரவது பதில் அளிக்கிறார்களா என்று தினமும் முயற்சி செய்கிறீர்கள், பலன் இல்லை. உலகிலேயே நீங்கள் ஒருவர்தான் உயிரோடு இருக்கிறீர்களோ என உங்களுக்கு சந்தேகம்/பயம் வந்து அல்லாடுகிறீர்கள்.

தெருவில் போய்க்கொண்டிருக்கும்போது திடீரென ஒரு மான் கூட்டம் ஓடுகிறது. சரி, அடித்து ஒன்றை வீட்டுக்கு எடுத்து போய் சமைத்து சாப்பிடலாம் என்று நினைத்து துப்பாகியால் ஒரு மானை குறி பார்க்கும்போது, திடீரென ஒரு சிங்கம் எகிறி குதித்து அந்த மானைக் கடித்து குதறுகிறது.

மாலை நேரத்தில் வீட்டுக்கு சென்று, அத்தனை கதவுகளையும் சாத்திக்கொண்டு பயத்தோடு நாயுடன் தூங்குகிறீர்கள், ஏன்? இங்கேதான் வருகிறது ஆச்சரிய கொக்கி!

ஒரு மிகக் கொடூரமான வைரஸ் தாக்கி உலகமே சுடுகாடாகி விடுகிறது. ஆனால் நீங்கள் மட்டும் சாகவில்லை, எப்படி? அப்படி என்ன special சக்தி உங்களிடம்? மாலை ஆனால் ஏன் பயப்பட வேண்டும்? ஆச்சரியமான, ஆனால் நம்பத்தகுந்த பதில்களுடன் வந்திருக்கிறது இந்த படம்.

வில் ஸ்மித் (Will Smith) என்ற Super Star நடித்த இந்த படம், உலகெங்கிலும் போனமாதம் ஒரே நாளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரே ஒரு மனிதனை மட்டும் படம் முழுவதும் காட்ட அசாத்திய தைரியம் வேண்டும், இந்த பட இயக்குனருக்கு அது இருக்கிறது. இப்படியெல்லாம் கூட புதுமையாய் படம் எடுக்க முடியுமா என நாம் ஆச்சரியத்தில் ரசிக்கும் போதே படம் சட்டென முடிகிறது.

அமர்களமான இசை, வில் ஸ்மித்தின் அலட்டல் இல்லாத, இயல்பான நடிப்பு, வெறிச்சோடி இருக்கும் New York நகரம் தான் கதைக் களம்.

வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல "ஒக்காந்து யோசிப்பாயிங்களோ!" மறக்க முடியாத ஒரு அருமையான படம்.

Comments

Unknown said…
Initially I thought you are just pulling. Because you have never liked Will Smith earlier. Now you are forcing me to see the film. Let me see.

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்