Skip to main content

ரெசிடன்சி ஹோட்டலும் ப்ரில்லியண்ட் டுடோரியல்ஸ் கையேந்தி பவனும்

IMGA0573_edited

Ramya-15

Ramya-24

IMGA1120

(இந்த அருமையான சந்திப்பை காமிரா இல்லாமல் நடத்தியதால் பழைய படங்களை இங்கே கொடுத்திருக்கிறேன்.)


நண்பன் குமார் வெகு நாட்களுக்குப் பிற்கு இந்தியா வந்திருப்பதால், நண்பர்களுடன் ஒரு சந்திப்பு ரெசிடன்சி ஹோட்டலில் நடந்தது. நண்பர்கள் நாலு பேர் வெகு நாட்களுக்குப் பிற்கு ஒன்று சேர்ந்தால் மனம் விட்ட பேச எவ்வளவோ விஷயங்கள் இருக்கும். துரதிருஷ்டவசமாக இவ்வளவு பெரிய சென்னை மாநகரில் அதெற்கென ஒரு அமைதியான இடம் இல்லை.விதிவிலக்கில்லாமல் ரெசிடன்சி ஹோட்டலிலும் திடும் திடும் என அதிர்ந்திடும் காட்டுக் கத்தலான ஆங்கில இசை போட்டு வெறுப்படிக்கவே, அனைவரும் சட்டென சிறிது நேரத்திலேயே வெளியேறினோம்.

பிற்கு குமாரின் வேண்டுகோளின் பேரில் ப்ரில்லியண்ட் டுடோரியல்ஸ் வாசலில் உள்ள கையேந்தி பவனுக்கு சென்றோம். குமார், ஷங்கர், சாயீ,நரசிம்மன், ரவி, முருகன், செழியன், நான் என எல்லோருமே ஏறக்குறைய ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பிறகும்,பாசாங்கு ஏதும் இல்லாத நட்பு மட்டுமே இதைப் போன்ற சந்திப்புகளுக்கு வழிவகுக்க முடிகிறது.

நைஜீரியாவிலிருந்து வந்திருக்கும் குமாரும், GRT Grand போன்ற பெரிய நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கும் ஷங்கரும் மற்ற எல்லா நண்பர்களும் எந்த வசதியும் இல்லாத இதைப் போன்ற கையேந்தி பவன்களில் சாப்பிட ஒத்துக் கொள்வதின் முக்கிய காரணம், அதிலிருக்கும் ஒரு த்ரில் மட்டுமில்லை, எந்த இடமாக இருந்தாலும் நண்பர்கள் ஒன்றாக இருந்தால் அசௌகரியங்கள் பெரிதாகத் தெரியாது என்பதுதான்.

இந்த அருமையான சந்திப்பை miss செய்த ராஜ்குமார், ஸ்ரீதர், குஞ்சிதபாதம் ஆகியோருக்கு இந்த blog message உதவும் என நம்புகிறேன்.

-விழுப்புரத்திலிருந்து பஸ் பிடித்து லொங்கு லொங்குவென்று ஓடி வந்த நண்பன் முருகனுக்கு special நன்றி.
-எல்லா சந்திப்புக்கும், by default absent ஆகும் செழியன் இதில் கலந்துகொண்டு எங்கள் எல்லோரையும் மகிழ்ச்சி கடலில் மூழ்கடிக்க வைத்ததற்கு தேங்க்ஸ் ஒ தேங்க்ஸ்!
-பாங்காக் சென்று மூன்று மாதம் இருந்து பிஸினஸ்(!!!) வளர்க்கப் போகும் சாயீ சத்தியனுக்கு வாழ்த்துக்கள்! (பாங்காக் வாசிகளே உஷார்!)
-எல்லோருக்கும் நிலா தோசை ஊட்டிய நரசிம்மனுக்கு நன்றி!
-நிறைய "நல்ல" பழக்கங்களை விட்டுவிட்டாலும் எங்களுக்காக பொறுமையுடன் கூடவே இருந்த சத்புருஷர் ரவிக்கு மனமார்ந்த (வேறென்ன?) நன்றி!
-அடுத்த மாதம் என்னுடைய பாலி (இந்தோனேசியா) பயணத்தில் என்னை சந்திக்க முடிவு செய்திருக்கும் ஷங்கருக்கு, "தேங்க்ஸ் மாப்பிளே, பாலி கலங்கப்போகுது!"
-சிங்கப்பூர் ரவி, என்னப்பா நீயும் பாலி வர ஏற்பாடு செஞ்சாச்சா?

நண்பர்கள் எங்கே இருந்தாலும் நட்பு மட்டும் ஒரே இடத்தில்தான் இருக்கும்! சந்திப்போம் மறுபடியும்.

Comments

SethuMandapam said…
sathpurusahr endra periya peyar ellam enaku vendam. Ungal natpai madhithu than nan vandhen. Ramya arambathilerundhu erukum nanban endra peyaril endrum chennaiel endha oru sandipu nadanthalum nan katayam sendhu ungal natpil kalippen.
natpirku nandri etharku?
Sridhar How do I post my comment in Tamil. Please help. It should not be difficult for reading a tamil verse in english.
mouravi said…
அதெப்படி சத்தமே இல்லாமல் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரு சந்திப்பு நடந்தேறி இருக்கிறதே, எப்படி சாத்தியமானது? இதுதான் நட்பா? நல்லது.

கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.
mouravi said…
ரவி, உன் என்ட்ரியின் தமிழாக்கம், இதோ,

சத்புருசக்ர் என்ற பெரிய பெயர எல்லாம் எனக்கு வேண்டாம் . உங்கள் நட்பை மதித்து தன் நான் வந்தேன் . ரம்யா அரம்பதிலேருந்து இருக்கும் நண்பன் என்ற பெயரில் என்றும் சென்னைஎல் எந்த ஒரு சந்திப்பு நடந்தாலும் நான் கடையம் சேந்து உங்கள் நட்பில் களிப்பேன் .
நட்பிற்கு நன்றி எதற்கு?

http://www.google.com/transliterate/indic/Tamil

ரவி இந்த இணைய தளத்திற்கு சென்று நீ மேல எழுதியதை அப்படியே தட்டவும், அவ்வளவு தான், நீ நினைத்ததை கொட்டி விடலாம்.

நன்றி, மீண்டும் சந்திப்போம்.
Ram Sridhar said…
ரவி, உன் என்ட்ரியின் (திருத்தப்பட்ட) தமிழாக்கம், இதோ,

சத்புருஷர் என்ற பெரிய பெயர எல்லாம் எனக்கு வேண்டாம் . உங்கள் நட்பை மதித்து தான் நான் வந்தேன் . ரம்யா ஆரம்பதிலேருந்து இருக்கும் நண்பன் என்ற பெயரில் என்றும் சென்னையில் எந்த ஒரு சந்திப்பு நடந்தாலும் நான் கட்டாயம் சேந்து உங்கள் நட்பில் களிப்பேன் .
நட்பிற்கு நன்றி எதற்கு?

ரவி (சிங்கப்பூர்): Berger ரவியின் கருத்துக்களை தமிழில் மொழிபெயர்த்ததற்கு நன்றி. சில சிறிய தவறுகளைக் களைந்து, மறுபடியும் தந்துள்ளேன்
Anonymous said…
sridhar nee romba nalavanda(vadivelu style).more than that i find difficult to write. great going for all. wl come and meet all of you next
vasu

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்