Skip to main content

எங்க ஊரு வாசம்: பாரத தேவி 

விருந்தாளிக்கு வெண்கலப் பானை தண்ணி




வெண்கலத்தில் சாமான்களைப் புழங்கியதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. ஒவ்வொரு வீட்டிலும் அடுப்பின் கிழக்குப் பார்த்த மூலையில் இரண்டு குடம் தண்ணீர் பிடிக்கும் வகையில் பெரிய, பெரிய பானைகள் ரொம்ப பவுசாக உட்கார்ந்திருக்கும். இந்தப் பானைகள் அங்கே இருக்கும் எல்லாப் பொருட்களிலும் பிரதானமானது.

ஒருமுறை, அல்லது இரண்டு நெல்லுச் சோறு பொங்கும்போது அந்தத் தண்ணியை இந்தப் பானையில் ஊற்றி ஒரு கை உப்பைப் போட்டுவிடுவார்கள். இரண்டு நாள் கழித்து அந்தத் தண்ணி புளித்துப் போகும். பிறகு அதில் இரண்டு குடம் பச்சைத் தண்ணியை ஊற்றி விடுவார்கள். அது கிராமத்து எளிய சனங்களுக்கு.

அமுத சுரபியாக மாறிவிடும். ஏனென்றால் இப்போதையது போல் அப்போது ஒரு கிலோ அரிசியை ஆக்கி, சூடாகச் சாப்பிட முடியாது. அப்போது பெரும்பாலும் கூட்டுக் குடும்பம்தான். அதோடு பிள்ளைகள் பிறப்பதைத் தடுக்க எந்தத் தடையும் இல்லாததால் ஒவ்வொருவரும் பத்துப் பிள்ளைகள் வரை அண்டியும் சவலையுமாகப் பெற்று எடுத்தார்கள்.

அதனால் ஒரு வீட்டுக்கு வரகரிசி, குருதவல்லி அரிசி ஏதாக இருந்தாலும் இரண்டு படி வரை ஆக்க வேண்டும். அந்தச் சோறு மறுநாள்வரை கெட்டுப் போகாமல் இருக்க வேண்டுமென்று இந்தப் புளித்த தண்ணியில் நாலு போனி மோந்து ஊத்தி உலை வைக்க வேண்டும். அதோடு காய்ச்சிய சோறையும் உருட்டி, உருட்டி இந்தப் பானையில் போட்டு விட்டால் எட்டு நாள் சென்றாலும் கெட்டே போகாது. வயிற்று வலிக்கு,

உடம்பு சூட்டுக்கு இந்தத் தண்ணியை ஒரு சொம்பு மோந்து உப்புப் போட்டு ஆற்றிக் குடித்துவிட்டால் போதும் சூடு இருக்கும் இடம் தெரியாமல் ஓடிப்போகும். அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து விருந்தாளிகள் வந்தால் எப்போதும் நடந்துதான் வருவார்கள். நல்ல உச்சி வெயிலில் வருபவர்களுக்கு வந்ததும் வராததுமாய் இந்தத் தண்ணியில ஒரு சொம்பு மோந்து கொடுத்துவிட்டால் போதும் கப்பென்று வயிற்றுப் பசி அடங்கி உடம்பும் மனமும் குளிர்ச்சியாகிவிடும். பிறகு பேசிக்கொண்டே ஒரு வெற்றிலையைப் போடுபவர்கள். இரவு வந்த பின்புகூடச் சாப்பாட்டை நினைக்கமாட்டார்கள்.

புதிதாகக் கல்யாணமாகி வீட்டுக்கு வரும் புது மணப்பெண்ணை முதன்முதலில் இந்தப் பானையைத்தான் தொட்டுக் கும்பிடச் சொல்வார்கள். அடுத்து 'உப்பு மறவை'. அதற்கடுத்து வீட்டின் ஓரமாக இருக்கும் ஏர் கலப்பை. பிறகு ஆடுகளும், மாடுகளும் நிறைந்த மாட்டுக் கொட்டாக்கள்.இந்தப் புளித்த தண்ணியில் சோறு ஆக்குவதால் பித்தளைப் பாத்திரங்களில் சாப்பிட முடியாது.

அதனால் அந்தக் காலம் வெண்கலத்தில் சாப்பிடுவதற்கான பாத்திரங்கள் இருந்தன. அந்தப் பாத்திரமும் அப்படிக் கனக்கும். சருவம், குடங்களும் அப்படித்தான் கனக்கும். இவற்றையெல்லாம் குளங்கள், கிணற்றடிக்குக் கொண்டுபோய் புளியும், செங்கல் பொடியும் சேர்த்து பளபளப்பாக்குவது குமரிகளின் வேலை. அதோடு ஒவ்வொரு வீட்டிலும், ஒரு துட்டு (தாமிரம்) சருவம் இருக்கும். உடம்பு வலி, இளைப்பு, சுறுசுறுப்பும் தூக்கமுமில்லாமல் இருக்கும் நோயாளிகள் இந்தச் சருவத்திலிருந்து தண்ணீரை மொண்டு குடித்தால் எல்லா நோயும் குணமாகும் என்று அந்தச் சருவத்திலிருந்து தண்ணீரைக் குடிப்பார்கள்.

இதில் இளவட்டங்களுக்கான வேலைகள் பிஞ்சையில் இருக்கும் ஆமணக்குச் செடிகளை வேரோடு பிடுங்கிவந்து வீடு சேர்ப்பது. செதில் செதிலாய் இடிந்தும் சரிந்தும், வீட்டுக்குள் கண்ட இடமெல்லாம் எலிகள் தோண்டியிருக்கும் பொந்துகளை மூடவும் கூடை, கூடையாய் மண் சுமந்து கொண்டுவந்து போடுவார்கள். பிறகு கயிறு இழுக்கும் போட்டி, கம்பு விளையாட்டு, மாட்டு வண்டி ஒட்டம் என்று எல்லா விளையாட்டுகளிலும் பங்கேற்பதற்காகத் தங்களைத் தயார் படுத்திக்கொள்ளப் புறப்பட்டுவிடுவார்கள்.

இந்தப் பொங்கல் நாளில் சிறுவர்களுக்கான வேலையும் உண்டு. அக்கா, தங்கச்சிகளுக்காக வேலிகளுக்குப் போய் மருதாணி பறித்து வருவது, நெற்றியில் வைக்க பொட்டு சேர்ப்பதற்காக நாட்டுக் கருவலங்காய் பெறக்கி வருவது. இந்தக் கருவலங்காயை நன்றாக இடித்து ஒரு செறட்டையில் சாறு பிழிந்து அதில் லாடத்தின் முனையை வைத்துவிட்டால் போதும். கருப்புப் பொட்டாகிவிடும். சிறு குழந்தைகளிலிருந்து பெரிய ஆட்கள்வரை நெற்றியிலும், கன்னத்திலும் வைத்துக்கொள்ளலாம், தோலுக்கும் நல்லது. உடம்புக்கும் குளிர்ச்சி.

--நன்றி: தமிழ் இந்து 

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்