Skip to main content

தனி ஒருவரின் கடைசி ஆசையால் கர்நாடகாவில் 

ஒரு கிராமமே கண் தானம் செய்தது




கர்நாடகாவில் சாலை விபத்தில் உடல் இரு துண்டாகி இறக்கும் தருவாயிலும் உறுப்பு தானத்தை வலியுறுத்திய ஹரீஷின் வேண்டுகோள்படி, அவரது கிராமமே கண் தானம் செய்துள்ளது. ‘இறந்தும் உலகை பார்க்கலாம்’ என தனி ஒருவன் ஏற்படுத்திய விழிப்புணர்வு, அங்கு பல நெகிழ்ச்சி சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது.

துமகூரு மாவட்டம் கெரேகவுடனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹரீஷ் (26), பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 16-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, லாரி மோதியதில் ஹரீஷின் உடல் இரு துண்டுகளானது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர் கூறும்போது, “நான் உயிர் பிழைப்பது மிகவும் கடினம். எனது உடல் உறுப்புகளை எடுத்து தேவையானவர்களுக்கு தானம் செய்யுங்கள்” என காப்பாற்ற வந்தவர்களை கைகளை கூப்பி கேட்டுக்கொண்டார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற 20 நிமிடங்களில் ஹரீஷ் உயிரிழந்தார்.

இதையடுத்து கடைசி ஆசையின்படி அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் சேதமடைந்ததால் தானம் செய்ய இயலவில்லை. ஹரீஷின் உருக்கமான இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து கர்நாடகாவில் கண் தானம், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களில் மாநிலம் முழுவதும் ஹரீஷின் பெயரால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பு தானம் செய்துள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதுபோல ஹரீஷின் சொந்த ஊரான கெரேகவுடனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்களும் கண் தானம் செய்ய விரும்பு வதாக அறிவித்தனர். இதை யடுத்து பெங்களூரு நாராயணா நேத்ராலயா கண் மருத்துவ மனையை சேர்ந்த மருத்துவர்கள் கடந்த சில தினங்களாக அங்கு முகாமிட்டுள்ளனர். இதில் முதல் நபராக ஹரீஷின் தாயார் கீதாம்மா (62) கண் தானமும், உறுப்பு தானமும் செய்வதாக கையெழுத்திட்டார்.

இதைத் தொடர்ந்து, 11 முதல் 83 வயதானவர்கள் வரை கண் தானம் செய்வதற்கான உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்திட்டனர். இதில் 102 பெண்கள், 89 ஆண்கள், 9 சிறுவர்கள் என மொத்தம் 200 பேர் தங்கள‌து கண்களை தானம் செய்வதாக பதிவு செய்துள்ளனர். 11 வயதான பூமேஷ் என்ற 5-ம் வகுப்பு மாணவனும் கண் தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தானம் செய்வோம்

இதுகுறித்து ஹரீஷின் தாயார் கீதாம்மா கூறும்போது, “எனது மகனின் கடைசி ஆசைப்படி, கண்கள் தானம் செய்யப்பட்டது. இதனால் எனது மகனின் கண்கள் இன்று உலகை பார்த்துக் கொண்டிருக்கிறது. இறந்த பிறகு விலை மதிப்பில்லாத நம்முடைய கண்கள், உறுப்புகள் வீணாக மண்ணில் புதைக்கப்படுகின்றன.

நாம் இறந்தாலும், நம்முடைய கண்கள் உலகைப் பார்க்க வேண்டும். கண் தெரியாதவர் களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் எங்கள் கிராமத்தில் இதுவரை 200 பேர் கண் தானம் செய்துள்ளனர். இன்னும் 180 பேர் கண் தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். எங்களுடைய கிராமத்தைப் போலவே அனை வரும் கண் தானம், உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்” என்றார்.

நன்றி: தமிழ் இந்து 

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்