Skip to main content

தனி ஒருவரின் கடைசி ஆசையால் கர்நாடகாவில் 

ஒரு கிராமமே கண் தானம் செய்தது




கர்நாடகாவில் சாலை விபத்தில் உடல் இரு துண்டாகி இறக்கும் தருவாயிலும் உறுப்பு தானத்தை வலியுறுத்திய ஹரீஷின் வேண்டுகோள்படி, அவரது கிராமமே கண் தானம் செய்துள்ளது. ‘இறந்தும் உலகை பார்க்கலாம்’ என தனி ஒருவன் ஏற்படுத்திய விழிப்புணர்வு, அங்கு பல நெகிழ்ச்சி சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது.

துமகூரு மாவட்டம் கெரேகவுடனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹரீஷ் (26), பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 16-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, லாரி மோதியதில் ஹரீஷின் உடல் இரு துண்டுகளானது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர் கூறும்போது, “நான் உயிர் பிழைப்பது மிகவும் கடினம். எனது உடல் உறுப்புகளை எடுத்து தேவையானவர்களுக்கு தானம் செய்யுங்கள்” என காப்பாற்ற வந்தவர்களை கைகளை கூப்பி கேட்டுக்கொண்டார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற 20 நிமிடங்களில் ஹரீஷ் உயிரிழந்தார்.

இதையடுத்து கடைசி ஆசையின்படி அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் சேதமடைந்ததால் தானம் செய்ய இயலவில்லை. ஹரீஷின் உருக்கமான இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து கர்நாடகாவில் கண் தானம், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களில் மாநிலம் முழுவதும் ஹரீஷின் பெயரால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பு தானம் செய்துள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதுபோல ஹரீஷின் சொந்த ஊரான கெரேகவுடனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்களும் கண் தானம் செய்ய விரும்பு வதாக அறிவித்தனர். இதை யடுத்து பெங்களூரு நாராயணா நேத்ராலயா கண் மருத்துவ மனையை சேர்ந்த மருத்துவர்கள் கடந்த சில தினங்களாக அங்கு முகாமிட்டுள்ளனர். இதில் முதல் நபராக ஹரீஷின் தாயார் கீதாம்மா (62) கண் தானமும், உறுப்பு தானமும் செய்வதாக கையெழுத்திட்டார்.

இதைத் தொடர்ந்து, 11 முதல் 83 வயதானவர்கள் வரை கண் தானம் செய்வதற்கான உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்திட்டனர். இதில் 102 பெண்கள், 89 ஆண்கள், 9 சிறுவர்கள் என மொத்தம் 200 பேர் தங்கள‌து கண்களை தானம் செய்வதாக பதிவு செய்துள்ளனர். 11 வயதான பூமேஷ் என்ற 5-ம் வகுப்பு மாணவனும் கண் தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தானம் செய்வோம்

இதுகுறித்து ஹரீஷின் தாயார் கீதாம்மா கூறும்போது, “எனது மகனின் கடைசி ஆசைப்படி, கண்கள் தானம் செய்யப்பட்டது. இதனால் எனது மகனின் கண்கள் இன்று உலகை பார்த்துக் கொண்டிருக்கிறது. இறந்த பிறகு விலை மதிப்பில்லாத நம்முடைய கண்கள், உறுப்புகள் வீணாக மண்ணில் புதைக்கப்படுகின்றன.

நாம் இறந்தாலும், நம்முடைய கண்கள் உலகைப் பார்க்க வேண்டும். கண் தெரியாதவர் களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் எங்கள் கிராமத்தில் இதுவரை 200 பேர் கண் தானம் செய்துள்ளனர். இன்னும் 180 பேர் கண் தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். எங்களுடைய கிராமத்தைப் போலவே அனை வரும் கண் தானம், உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்” என்றார்.

நன்றி: தமிழ் இந்து 

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...